Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]
 
 
"அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக
அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக
அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில்
அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"
 
"ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே
ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே
ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே
ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"
 
"இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில்
இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே
இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே
இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"
 
"ஈடணம் விரும்பா சாதாரண மகனே
ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே
ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய்
ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"
 
"உலகத்தில் பரந்து வாழும் பலரின்
உண்மை இல்லா பற்றில் பாசத்தில்
உடன்பாட்டிற்கு வர முடியாமல்
உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"
 
"ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல்
ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே
ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே
ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"
 
"எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து
எழுதுகோல் எடுத்து உலகை காட்டி
எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல்
என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"
 
"ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல்
ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே
ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே
ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"
 
"ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி
ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து
ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே
ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"
 
"ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து
ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து
ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற
ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"
 
"ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு
ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே
ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை
ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"
 
"ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே
ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே
ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே
ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
ஈடணம் - புகழ்
ஈடிகை - எழுதுகோல்
ஈமத்தாடி - சிவன்
உணக்கம் - உலர்ந்ததன்மை
ஊறு - இடையூறு
ஊனம் - உடல் குறை, இயலாமை
எய்யாமை - அறியாமை
ஏகாகாரம் - சீரான முறை
ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு
ஏகாந்தம் - தனிமை
ஐங்கணைக்கிழவன் - மன்மதன்.
ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை
ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன்
ஓகை - உவகை, மகிழ்ச்சி
ஔவியம் - பொறாமை, அழுக்காறு
ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன்
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்
 
[my own eulogy / A tribute written by myself to my death]
191494501_10219304719551527_1988152659605738521_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HZEHTSx4k7UAb5Joies&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDCjXP8nJET9ONmNTGMqxjgn4tkDDD85Lk_mpz1S75TaQ&oe=66487F40 192176562_10219304720511551_5964862948737609818_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=bLzn8xJ8JSEAb4i1aiw&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB8GE0cnPGxWM7Ghnwci029iFkuCFbUI2nn2wB39tbmmw&oe=6648AADENo photo description available.
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்
 
 
"அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில்
அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில்
அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக
அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"
 
"ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே
ஆடை அணிகளை அளவோடு உடுத்து
ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே
ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"
 
"இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே
இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ?
இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே
இடுகாடு போய் உறங்குவது எனோ ?"
 
"ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி
ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில்
ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ
ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"
 
"உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய்
உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ?
உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம்
உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"
 
"ஊடல் கொண்டு சென்ற மனைவியால்
ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே
ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ
ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"
 
"எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய்
எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே
எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது
எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"
 
"ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம்
ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ
ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம்
ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"
 
"ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி
ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே
ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே
ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"
 
"ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து
ஒழுங்காக தினம் செயல்கள் செய்து
ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே
ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"
 
"ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை
ஓலம்பாட என்னை வைத்தது எனோ?
ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து
ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"
 
"ஔவை வாக்கை மருந்தாக கொண்டு
ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே
ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே?
ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
ஈறிலி - கடவுள்
எரிவனம் - சுடுகாடு
ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை
ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன்
ஓலாட்டு - தாலாட்டு
ஔதாரியம் - பெருந்தன்மை
ஔரசன் - உரிமை மகன்
ஔடதம் - மருந்து
276300395_10220814642298652_6020076251074550155_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=lkGQoTMuMOoAb5d1U5E&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCxYB_25N7yWcl91HqAPKiE4ZqopYSHzm3kVPHDF853qw&oe=6626E34B No photo description available. No photo description available.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த சிந்தனை?

(மேற்கில், இந்த போக்கை, மனநலத்தில் உள்ள வேறு ஏதோ ஒன்றை பிரதிபலிப்பதாக கொள்ளப்படும்.)

வாழ்க்கையில் இரசனை போய்விட்டதா?

அல்லது, பேசா அனுபூதி பிறந்ததா?

  • நியானி changed the title to "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.