Jump to content

புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ இசைக்குழுவினரின் படிமங்கள்

 

 

 

(இவர்கள் தவிர வேறு யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயரை மட்டும் (முதற் பெயர் மட்டும்) தெரிவித்துதவுக, ஆவணப்படுத்துவதற்கு.)

 

 

தகவல் வழங்குநர்: இனந்தெரியாத ஒருவர்

 

இசையமைப்பாளர் S.P ஈஸ்வரநாதன்.jpg

இடது: எஸ். ஜி. சாந்தன் | வலது: எஸ்.பி. ஈஸ்வரநாதன். இவர் தமிழீழ இசைக்குழுவின் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். இவர் கருணாவுடன் பிரிந்து சென்ற போது கொல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது குடும்பத்தினரில் சிலர் வஞ்சகன் கருணாவின் ஆதரவாளர்கள் என்பது நானறிந்தது. அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் ஆனையிறவின் மேனி தடவி என்ற பாடலுக்கு இசையமைத்தவர்களில் இவரும் ஒருவராவார். அது மட்டுமன்றி, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மீது பாடப்பெற்ற "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்" என்ற பாடலின் இசைக்குச் சொந்தக்காரருமாவார். தவிபு ஆல் வெளியிடப்பட்ட  ஆனையிறவின் மேனி தடவி பாடல் காட்சியில் இவர் சீருடையில் தோன்றுகிறார்: https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html

 

thaya - Info provided by anonymous

 

thana.jpg

குட்டிக்கண்ணன் = கப்டன் சிலம்பரசன்

 

sivaa.jpg

பெயர்: சிவா

 

paappaa.jpg

பெயர்: பாப்பா

 

sethu.jpg

 

adsa.jpg

 

 

 

 

==============================

 

 

எஸ். பி. ஈஸ்வரநாதனின் இறப்பிற்குப் பிறகு தென் தமிழீழத்தில் மேஜர் கருவேந்தனின் தலைமையில் தமிழீழ இசைக்குழு உருவாக்கப்பட்டு செயற்பட்டது (ஆதாரம்: மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 10).

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 234
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

.

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய 216 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எழுச்சிப் பாடல் புத்தகங்கள்

 

 

  1. "ஒரு தலைவனின் வரவு" எழுச்சிப் பாடல்கள் 
  2. தமிழீழ தேசிய பாடல்கள் (1990)
  3. தமிழீழ எழுச்சி கானங்கள் - 

    இப்புத்தகத்தில் உள்ள "முல்லைப்போர்" பாடல்கள் சிலவற்றில் இசையமைப்பாளர்களைப் பற்றிய விபரங்கள் பிழையாக உள்ளன. உதாரணமாக, "முல்லை மண்" பாடலுக்கு இசையமைத்தவர் யாழ் ரமணன் தான். அதேபோல, "நந்திக்கடலோரம்" பாடலுக்கு இசையமைத்தவர் தமிழீழ இசைக்குழு. அத்துடன், "ஊரில் புகுந்து" பாடலுக்கு இசையமைத்தவர் இசைவாணர் கண்ணன் அவர்கள்.

  4. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 1 - 

    இப்புத்தகத்தில் இடம்பெற்ற "குயிலே பாடு" பாடல்வரிகளில் வரும் "கழுத்தில் ஆடுது நஞ்சு" என்று தொடங்கும் வரியை "கழுத்தில் ஆடுது நெஞ்சு" என்று பிழையாக எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இதேபாடலில் "பகை விரட்டி எடுப்பரே பலிகள்" என்பதற்குப் பதிலாக "பகை விரட்டி எடுப்பரே புலிகள்" என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. 

  5. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 4
  6. வெற்றிமுரசு பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்)
  7. போர்ப்பறைப் பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்)

 

எழுச்சிப் பாடல் புத்தகங்கள் அ பாட்டுப் புத்தகங்கள் ஏராளம்.... இறுவட்டுகள் வெளிவந்தவுடன் பாட்டுப் புத்தகங்களும் வெளியாகும். இவ்வாறு வெளிவந்தவற்றுள் மேற்கண்ட 7 மட்டுமே இப்போது வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. பல ஊழியால் அழிந்துவிட்டன.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய 217 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 217 இறுவட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் முதல் பாடல்
 

 

புலிகளால் முதன் முதலில் கவிதை வடிவில் எழுதி எடுக்கப்பட்டு வாய்வழி மெட்டுடன் பாடலாகப் பாடப்பட்டது: "வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம்" 

இக்கவிதையானது புலிகளின் ஆரம்பகாலப் பயிற்சி முகாமான அம்பகாமம் பயிற்சி முகாமில் பாடப்பட்டது ஆகும். இது "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களிடமிருந்து எழுதிப் பெறப்பட்டதாகும். இதனை பெரும்பாலும் லெப். செல்லக்கிளி அம்மானே பாடுவாராம். பின்னாளில் இதற்கு இசையமைத்துப் பாடியவர் யாரென்பது தெரியவில்லை.

ஆதாரம்: 'விடுதலைத் தீப்பொறி ' நிகழ்படம்

 

  • பாடல் வரி:

"வாருங்கள் புலிகளே, தமிழீழம் காப்போம்!
வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்!

"முந்தை எங்கள் தந்தை வாழ்ந்த முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல் குற்றமல்லவா?

"ஞாலம் போற்ற வாழ்ந்தோம், இந்தக் கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர் நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள் எம்மை ஆள்வதா?

"தமிழர் பிள்ளை உடல் தளர்ந்த கூனல் பிள்ளையா? 
தடிமரத்தின் பிள்ளையா? உணர்ச்சி இல்லையா? தமிழா! 
என்னடா, உனக்குப் போர் ஓர் தொல்லையா? - உன்
தாய் முலைப்பால் வீரம் நெஞ்சில் பாயவில்லையா?
வேல் பிடித்து வாழ்ந்த கூட்டம் கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீள இன்னும் நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர் தானை போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர், சேரர், பாண்டியர் போல் பேர் எடுக்குமா?"

 
கீழே உள்ளதுவே உண்மையாக புலிகளால் வெளியிடப்பட்ட மூல இசை கொண்ட பாடல் ஆகும். 2009இற்குப் பின்னர் இதே போன்று இன்னொரு பாடலை புலி வணிகர்கள் வெளியிட்டுள்ளனர். அது மூலப் பாடல் அன்று.
 
 
 
 
*****
 
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் இசையுடன் கூடிய முதல் பாடல்

 


புலிகளால் இசையும் சேர்த்து முதன் முதலில் முழுமையான பாடலாகப் பாடப்பட்ட பாடல்: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன், மாத்தையா (பின்னாளில் இந்தியாவுடன் சேர்ந்து தமிழருக்கு வஞ்சகம் செய்தான்), மற்றும் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோரை "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அதன் பின்னர் 1981ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த தவிபு மக்கள் முன்னணியின் அப்போதைய தலைவரான அஜித் மாத்தையாவின் அயராத முயற்சியில் திரு செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் வெளியிடப்படலாயிற்று. 

இவ்வாறு இவரால் அப்போது வெளியிடப்பட்டவற்றில், இப்போது அறியப்படும் பாடல்களில், எஞ்சியிருப்பது 1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடல்தான் தமிழீழத்தின் இசையுடன் கூடிப் பாடப்பட்ட முதல் பாடலாக அறியப்படுகிறது. இது தலைவருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதனை எழுதியவர் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆவார்.

இதற்கு முன்னர் - 1981,1982 ஆண்டுகளில் - ஏதேனும் வெளியிடப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990

 

 

  • பாடல் வரி:

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

"பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்
போரில் வெற்றி முரசு முழங்கும்
புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்

"கூண்டுபறவை சிறகு விரி்க்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்
மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்

"வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்
மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்"

 
 
 
*****
 
 
Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இயக்கமல்லாதோரால் இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதல் பாடல்

 

 தமிழீழ விடுதலைப் போரிற்கு இயக்கமல்லாத குடிமையாளர்களால் (civilians) இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதற் பாடல்: "ஓ! மரணித்த வீரனே"

இப்பாடலானது பாலஸ்தீன கவிதை ஒன்றின் தமிழ் வடிவமாகும். இதற்கு அமரர் யாழ். ரமணன் அவர்கள் தலைமையிலான குழுவினர் இசையமைக்க, அக்குழுவைச் சேர்ந்த எஸ். திவாகர் அவர்கள் பாடினார். இதனை மொழிபெயர்த்ததும் யாழ். ரமணன் அவர்களே ஆவார். 
 
இது கொண்டு முதன் முதலில் வெளியான இறுவட்டு எதுவென்று தெரியவில்லை. எனினும் "மாவீரர் புகழ் பாடுவோம்" என்ற மாவீரர் பாடல் தொகுப்பு இறுவட்டில் இப்பாடல் வெளியாகி உள்ளதென்பது நானறிந்த தகவலாகும்.
 
  • பாடல் வரி:
"ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத் தா!
உன் பாதணிகளை எனக்குத் தா!
உன் ஆயுதங்களை எனக்குத் தா!

"உன் இறுதிப் பார்வையை, பகையை வெல்லும் உன் துணிவை,
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை,

"தப்பியோடும் உன்விருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை,
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்..

"உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...

"உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா!
எஞ்சிய வீடுகளின் பிழைத்தவர்கள் மத்தியிலே!

"உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றி சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு

"வார்த்தைகள் போதவில்லை, வரலாறு பாடுமுன்னே!"

 

மூல இசை வடிவமும் நிகழ்படமும்:

இந் நிகழ்படமானது 1984ம் ஆண்டு தமிழீழத்தில் படம்பிடிக்கப்பட்டு பதிவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அஃது உண்மையெனில் இதுவே தமிழீழ விடுதலைப் போரிற்கு இரண்டாவதாக இசையுடன் பாடப்பட்ட பாடலாக இருக்குமென்பது அறுதியிடப்படா மெய்யுண்மையான தகவலாகும். 
 
 
 
*****
 
Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் தோற்றக் காலத்திற்கு முன்பான இயக்கப்பாடல் 

 


புலிகளின் தோற்றக் காலத்திற்கு முன்பு பாடப்பட்டு பின்னாளில் புலிகளால் இயக்கப்பாடலாக பாவிக்கப்பட்டு வந்த பாடல்: "மறவர் படை தான் தமிழ்ப்படை" 

இப்பாடலானது 1960 களில் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்டு "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்களால் தமிழ்நாட்டில் பாடப்பட்ட பாடலாகும். அக்காலத்திலேயே தமிழ்நாட்டில் பரவலறியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் பாடகரான தேனிசை செல்லப்பாவின் குரல் தான்.  

பின்னர், 1970களில் இப்பாடல் தமிழீழத்திலும் மெள்ள நுழைந்து பரவலறியானது. தொடர்ந்து தமிழீழத்தின் விடுதலைப் பாடல்களில் ஒன்றாக திகழ்ந்து இன்றுவரை அவ்வாறே உள்ளது.

1972ம் ஆண்டு சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காசி ஆனந்தன் அவர்கள் தனது பதவியைத் துறந்தார். அதனைத் தொடர்ந்து அரசியல் மேடைகளிலும் மேடைப் பேச்சுகளிற்கான முன்னோடி ஒலிபெருக்கி அறிவித்தல்களிலும் இப்பாடல் இடம்பிடித்துக்கொண்டது.

இப்பாடல் பின்னாளில் இடம்பெற்ற இசை இறுவட்டு எதுவென்பது எனக்குத் தெரியவில்லை.

---> ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990

 

மற்றொரு வரலாற்றுத் தகவல் என்னவெனில், 1961ம் ஆண்டில் தான் தமிழீழ விடுதலைக்கான முதல் இயக்கம் தோற்றம்பெற்றது. அதன் பெயரும் "புலிப்படை" என்பதாகும். 

---> ஆதாரம்: புலிப்படை (1961) முதல் விடுதலைப்புலிகள் வரை புலிகளின் (1976) வரலாறு! | வர்ணகுலத்தான்
 

 

 

 

  • பாடல்வரி

"மறவர் படைதான் தமிழ்ப்படை - குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

"புதிதோ அன்று போர்க்களம் - வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் - கவி
பாடி முடிப்பார் மங்களம்

"சிரிக்கும் உள்ளம் போர் கண்டு - தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு - என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

"தமிழன் பண்பில் உருப்படி - அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையம் தன்னை முதற்படி - பிறர்
அடக்க வந்தால் செருப்படி

"வீரம் வீரம் என்றாடு - நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு - கண் 
சிவந்து நின்று போராடு"

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலி வியாபாரிகளால் சிதைக்கப்பட்ட "பூபாளம்" இறுவட்டு

 

https://pulikalinkuralradio.com/archives/album/pooballam

இந்த புலி வியாபார வலைத்தளத்தினிளுள்ள "பூபாளம்" என்ற இவ்விறுவட்டிற்கென்று வழங்கப்பட்டுள்ள 11 பாடல்களும்  இறுவட்டிற்கானவையன்று. அவை காலத்தால் அழிந்துபோனதாக கருதப்படும் கீழ்க்காணப்படும் 4 இறுவட்டுகளில் ஏதோ ஒன்றினதாகும்.

தயவு கூர்ந்து இந்தப் பதினொரு பாடல்களிற்கான மெய்யான இறுவட்டை அடையாளம் காண உதவுங்கள், உறவுகளே. சரியான வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும். 

  1. சிவந்த மண்
  2. தமிழ் சொந்தங்கள்
  3. விடுதலைத்தீ
  4. வீழமாட்டோம்

மெய்யான பூபாளம் இறுவட்டிற்கான பாடல்களை கீழ்க்காணும் இவ் ஆவணத்தின் கொழுவியில் சென்று கண்டுகொள்ளவும். 

 

 

நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் 2009இற்குப் பிறகு வணிகம் செய்யும் இவ்வலைத்தளம் உவ்விறுவெட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் வணிகத் தளத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது.

இது போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது. தேசத்தின் சொத்தை தனியார் சொத்தாக்குவதோடு மட்டுமின்றி வரலாற்றினையும் திரிக்கின்றனர்!!

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தேசக் காதல் (WTCC  வெளியிட்டது) மற்றும் எம் வானம் விடியும் (WTCC  வெளியிட்டது) ஆகிய இரண்டு இறுவட்டுகளும் இந்தக் கிழமையோடு இணையப்பரப்பிலிருந்து அழிந்து போயின.

என் கண் முன்னாலையே கடைசி படியும் (copy) அழிந்து போனது... 

காக்க முடியவில்லை!!

சரியான கவலையாக உள்ளது!😭😢

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுதிப் படிகள் இங்கிருந்தன:

https://eelapparavaikal.com/ms_song/thesakkathal

https://eelapparavaikal.com/ms_song/em-vanam-vediyum/

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.. அன்னாரின் ஆன்னா சாந்தி அடையட்டும்..
    • எல்லோருக்கும் நன்றிகள்  
    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.