Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 16
 
 
தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட துஷ்ட காமனி, அது மகத்தான தாயினும் மனதுக்கு மகிழ்வளிக்க வில்லை என்பதைக் கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அழிய நேரிட்டது என்பதை அவன் மறக்கவில்லை. பியாங்கு தீபத்திலுள்ள தேரர்கள் [arahants in Piyahgudipa] இவனுடைய மனதில் உள்ளதை அறிந்ததும், அரசனைத் தேற்றுவதற்கு எட்டு தேரர்களை அனுப்பி வைத்தனர்
 
" ..... எனக்கு எப்படி ஆறுதல் ஏற்பட முடியும்? வணக்கத்துக்கு உரியவர்களே!" என்று துஷ்ட காமனி கேட்டான், அதற்கு தேரர்கள்
 
"இந்தச் செய்கையின் காரணமாக நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படாது. ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள். ஒருவர் மும்மணிகளில், அதாவது புத்தம், தர்மம், சங்கம் ஆகிய திரிசரணத்தில் [three jewels] சரணடைந்து விட்டார். மற்றவர் புத்தமதத்தின் அடிப்படை கோட் பாடானா "பொய், காமம், களவு, மது, கொலை" ஆகிய ஐந்து தீய ஒழுக்கங்களை தவிர்க்கும் பஞ்சசீலங்களை மேற் கொண்டு விட்டார். மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். ஆகவே தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், எனவே மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்" என்று கூறினார்கள்
 
['From this deed arises no hindrance in thy way to heaven. Only one and a half human beings have been slain here by thee, O lord of men. The one had come unto the (three) refuges, the other had taken on himself the five precepts. Unbelievers and men of evil life were the rest, not more to be esteemed than beasts].
 
"ஆனால் நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன், எனவே உன் மனதிலிருந்து கவலையை அகற்று அரசனே " என்று மேலும் அவர்கள் ஆறுதல் கூறினர்.
 
மகாவம்சத்தில் காணப்பட்ட துட்ட கைமுனு, எல்லாளன் கதையை கொஞ்சம் நடுநிலையாக அறிவு பூர்வமாக மற்றும் புத்தர் உண்மையில் போதித்த தர்மத்தினூடாக பாருங்கள்.
 
எல்லாளன் செய்த தவறு என்ன ? நீதியாக, நிதானமாக, எல்லோருக்கும் ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கும் கூட எந்த பேதமும் இல்லாமல், தன் ஒரே ஒரு மகனை கூட, தற்செயலாக நடந்த செயலாக இருந்தும் மரண தண்டனை கொடுத்த ஒரு நடுநிலை மன்னன். என்றாலும் சிவனை வழிபடும் சைவ மதத்தான் என்ற ஒரே ஒரு காரணத்தால் மட்டும் அவன் கொல்லப் படுகிறான்.
 
உண்மையில் இது தமிழர், சிங்களவர் யுத்தம் அல்ல, ஏனென்றால் அப்ப சிங்கள இனம் என்று ஒன்றுமே இல்லை. ஆக புத்த மதத்தை பின்பற்றுபவன், சிவனை வழிபாடுபவன் என்ற மத வழிபாடே இருந்தது. மேலும் சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் தமிழனாய் அல்லது இலங்கையின் தொல்குடிகளான நாகர்களாக இருந்தனர். அதனால் தான் தமிழர்கள் மேல் போர் தொடுக்கப்படுகிறது.
 
அதாவது துட்ட கைமுனு அநீதிக்கு எதிராக போர் செய்யவில்லை, உன்னத நீதிக்கு எதிராக, புத்தசமயத்தை நிலை நாட்ட, புத்தரின் கொள்கைகளை முற்றிலும் மீறி கையான்ட ஒரு செயல் பாடாகும்.
 
மகாவம்சத்தில் புத்தரின் முதலாவது வருகையே, புத்தர் தன் கொள்கைகளின் மகிமைகளை, இலங்கையில் நிலை நாட்டி, பிரகாசிக்க வைப்பதற்காக, இயக்கர்களின் மனதில் பயத்தை உண்டாக்கி, அவர்களை அவர்களின் சொந்த வாழ்விடத்தில் இருந்து, அதாவது தாய் நாட்டில் இருந்து துரத்துகிறார். இது தான் துட்ட கைமுனுவிக்கு, மகாவம்ச ஆசிரியர் புத்தரின் கதாபாத்திரம் ஊடாக வன்முறை பாவிக்க கொடுத்த ஆணைப்பத்திரம் எனலாம் [by, so that his doctrine should eventually "shine in glory", has been described as providing the warrant for the use of violence for the sake of Buddhism]
 
ஆனால் புத்தர் இதை செய்திருப்பாரா அல்லது ஆதரித்து தான் இருப்பாரா நீங்களே முடிவு செய்யுங்கள்?
 
இப்படியான கதாபாத்திரங்களின் தாக்கம் தான், கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனாரை, ஈழத்தின் மன்னாரில் உள்ள மாதோட்டத்தின் பாலாவி ஆற்றங்கரையில் அமைந்த திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடும் பொழுது,
 
"புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர்"
 
என ஆலோசனை அல்லது அறிவுரை கூற அவரை தூண்டியதோ யான் அறியேன்?
 
மேலும் ஈழத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான தொல்லியல் ஆதாரங்களாக, தொன்மைகளாக கிழக்கில் திருக்கோணேஸ்வரர் ஆலயமும் வடக்கில் திருக்கேதீஸ்வரர் ஆலயமும் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
"புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
அடைமி(ன்)னே!"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 17 தொடரும்
313019394_10221818043583057_1071092816601457102_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wh0CvU_JLJoQ7kNvgHlxaO1&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAeGOuj968ewU7nEDcKFYuwgtO4ilbYls897TYFR8xypw&oe=6635825C 313092720_10221818052023268_2081403973253957141_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZVB2SUkNk2MQ7kNvgFqUnJR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAMuZYFNPxXTROJGkAdfIPkkaVnxw1YAQIN_hgRaJEL5g&oe=6635953B
311471171_10221818052623283_2864549303455677541_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZxQSb7KqTjQQ7kNvgE8-2Qz&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDms9TzRzZEm75Y22SO750f1zpBg4ABbLkTGVxkZJ-RkA&oe=66357B94 312929142_10221818047183147_1800820308886274517_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Wfqcd7Bm4mUQ7kNvgEnrwqD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDz1dAY3NxKkPz60C5gWAu46Gyi3hEYekMx1qeIo-OCsQ&oe=66358A9E
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 17
 
 
கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. உதாரணமாக, எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப் பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டு கால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளமைக்கு சிறந்த சான்று ஆகும்.
 
ஒரு உண்மையான தேரர் அல்லது புத்த பிக்கு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக, உபகுப்தர் (Upagupta) என்ற கி மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஒருவரை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அசோகவதனம் (Ashokavadana) எனும் வரலாற்று நூலில் காண்கிறோம். இந்தியாவில் போர் வெறியுடன் பல போர்களைப் புரிந்த, சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232), கொடிய கலிங்க போர்க் களக் காட்சியைக் கண்டு மனம் பதைத்தார், அந்த மாமன்னனின் ஈரநெஞ்சு, துஷ்ட காமனி போலவே, போரின் சேதத்தைக் கண்டும், பலியான உயிர்களை எண்ணியும், சிந்தப்பட்ட இரத்தத்தை நினைத்தும் அமைதியாக அழுதது, அப்பொழுது சக்கரவர்த்திக்கு நேர் நெறியைக் காட்டி ஆற்றுப்படுத்தியவர் தான் ‘உபகுப்தர்’ என்னும் இந்த உண்மையான பிக்கு ஆகும்.
 
என்றாலும் மகாவம்சம் / அத்தியாயம் 5 / 'மூன்றாவது மகாசபை' / 189 ஆம் பாடல், அசோகனின் கொடுஞ்செயல்களின் காரணமாக முன்பு அவனைச் சண்டாள அசோகன் என்று அழைத்தனர் என்கிறது. அதை உறுதிப் படுத்துவது போல, விவேகானந்தரின் ஒரு கூற்றும், இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர் தனது சகோதரருடன் சண்டையிட்டார் என்கிறது. அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிக்குவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிக்குவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிக்குவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிக்கு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார் என்கிறார்.
 
ஆனால் மகாவம்சத்தில் இதற்கு எதிர்மாறான செயலை காண்கிறோம், இங்கு துஷ்ட காமனிக்கு தேரர்கள், இவர்கள் எல்லோரும் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், எனவே மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள், ஆகவே இது அதர்மம் அல்ல, எனவே நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் இல்லை என்கின்றனர்?
 
அப்படி என்றால் புத்தர் மாற்று கருத்து உள்ளவர்களை, அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, ஒழுங்கானவர்களாக, மற்ற உயிர்களிடமும் மக்களிடமும் அன்பு செலுத்துபவர்களாக இருந்தாலும் கொல்லலாம் என்கிறாரா?, எல்லாமே குழப்பமாக உள்ளது?? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா ?
 
அசோகனின் பாறை ஆணை-2, [The Edicts of King Asoka] மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள் பற்றியும், சத்தியபுத்திரர் [இன்றைய தர்மபுரி பகுதியான, தகடூர் பகுதியை ஆட்சிபுரிந்த சத்தியபுத்திரர் அதியமான் மரபினரை கொண்டவர்களாகும். சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன], சேர [கேரளபுத்திரர்], சோழ, பாண்டியர்கள், பற்றியும் குறிப்பிடுகிறது. [Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras [Satyaputras ruled parts of the Kongu country and were surrounded by the Cheras to the west and the Pandyas and Cholas to the east./ ], the Keralaputras [Cera dynasty], as far as Tamraparni and where the Greek king Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos,..]
 
இப் பகுதிகளுக்கு எல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு அனுப்பப்பட்டன. இந்தத் தூதுக் குழுக்கள் அனுப்பப் பட்ட காலம் கி.மு. 258 என்று நம்ப இடமுள்ளது என்கிறார் வின்சென்ட் ஷ்மித். இது மகாவம்சத்திற்கு குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த இலங்கை புத்த பிக்குகளால் பல நுறு ஆண்டுகளின் பின் எழுதப்பட்ட குறிப்புகளில், அசோகன் தூதரகங்கள் தொடர்பாக ஒரு முரண்பாடு காணப்படுகிறது. உதாரணமாக, அசோகனின் தலைநகரான, பாடலிபுத்திரத்தில் இருந்து தெற்கிற்கு வனவாசி, மஹிஷமண்டல மற்றும் இலங்கை போன்ற இடங்களுக்கு தூதர்கள் அனுப்பியதாக [taking Asoka’s capital Pāṭaliputta as the centre of the radius, we can see that the Missions went, for example further south to Vanavāsī [dwelling in the forest / According to Dr. Buhler, it was situated between the Ghats, Tungabhadra and Barodā] and Mahisamaṇḍala [modern Mysore] and on to Sri Laṅkā] பாளி நூலான மகாவம்சத்தில் [Mahāvaṁsa ] குறிக்கப்பட்டுள்ளது.
 
இங்கு தமிழர்களின் நாடுகளான, சத்தியபுத்திர தேசம், கேரளபுத்திரர், சோழ, பாண்டிய நாடுகள் என நேரடியாக அசோகனின் பாறையில் குறிக்கப்பட்டது விடப்பட்டுள்ளன. இதன் நோக்கம் ஏதாவது உங்களுக்கு புரிகிறதா ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 18 தொடரும்
312264012_10221918190046656_618331627826023897_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6gGTNn0Inf8Q7kNvgGn4JQB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDO588_8Vr946EISJA-E1yRpcR-BDIf_5UKHsfOHgKWAw&oe=6636F132 312185356_10221918189446641_2688514357948599742_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=uifP7yysEP0Q7kNvgFACfG0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCIpKELLnyFeD3mTVr0mOPExhV6GDatfy1K_9X9hZCyhw&oe=6636E061 312123062_10221918189886652_3250885119866738273_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Gx0Py3ZPKFkQ7kNvgF8sgRf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBreaveeOKwJOub3MHXo7VzO9M6_CeMAd3-jsUcNXVe3g&oe=6636CF75 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 18
 
 
 
அசோகனின் பாறை ஆணை-7 இல், எல்லா மதங்களும் எல்லா இடங்களிலும் வசிக்க வேண்டும் [King Piyadasi, desires that all religions should reside everywhere,] என்று அசோகன் கூறுகிறார். அதே போல அசோகனின் பாறை ஆணை-12 இல், 'சந்நியாசிகள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் இருவரையும், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் மதிக்கிறோம்' .. 'என் மதத்தை மகிமைப்படுத்த விடுங்கள் என்பது உண்மையில் அவரின் மதத்தையே தீங்கு விளைவிக்கும்' என்கிறது [King Piyadasi, honors both ascetics and the householders of all religions, ... "Let me glorify my own religion," only harms his own religion. ].
 
மீண்டும் அசோகனின் பாறை ஆணை-13 இல், தெற்கில் சோழ, பாண்டியர் என உறுதிப்படுத்தப் படுகிறது [ beyond there where the four kings named Ptolemy, Antigonos, Magas and Alexander rule, likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamraparni.]. மேலும் அந்த பாறையில், என்னால், இந்த தரும அல்லது அறநெறி கட்டளை எழுதப்பட்டது ஏன் என்றால், என் மகன்களோ இல்லை பேரன்களோ புதிய வெற்றிகளை போரிட்டு பெறக் கருதக்கூடாது என்பதாலாகும் என்கிறார் [I have had this Dhamma edict written so that my sons and great-grandsons may not consider making new conquests,].
 
ஆனால் எந்த பாறையிலும் தன் மகனை, மகளை புத்த மதம் பரப்ப அனுப்பியது எழுதப்படவில்லை? மற்றும் 'எல்லா மதமும் சம்மதம்' என்பதையும் எல்லாளன் - துட்டகாமினி தொடங்கி, இன்று வரை காணமுடியவில்லை ?
 
புத்தரின் முதலாவது வருகையில் அவர் கடும் மலையையும் புயலையும் தோற்றுவித்து, இயக்கர்களின் மனதில் பீதியையும் திகிலையும் உண்டாக்கி, அதன் மூலம் அவர்களை தன் வழிப்படுத்தி இலங்கையில் இருந்து அகற்றினார் என்னும் நடவடிக்கை ஒருக்காலும் புத்தர் செய்யமாட்டார்?
 
என்றாலும் இந்த யோசனையை மகாவம்சம் எழுதிய மகாநாம தேரர் [Mahānāma] கட்டாயம் இந்து வேதத்தில் இருந்து பெற்றிருப்பார் போல் தெரிகிறது. அங்கு "நான் இடிமுழக்கத்தையும் மின்னலையும் அனுப்பும் பொழுது தான் நீ என்னில் நம்பிக்கை வைப்பாய்" [“Yes, when I send thunder and lightning” says Indra “then you believe, in me.”] என இந்திரன் சொல்வதாக அறிகிறோம்.
 
அது மட்டும் அல்ல மகாவம்சத்தின் பல செய்திகள், காட்சிகள் சமஸ்கிரத இதிகாசங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவைகள் எல்லாம் புத்தரின் கொள்கைக்கும் அவரின் இயல்புக்கு ஒவ்வாதவையாகும்?
 
தீக நிகாயம் [Digha Nikāya], அறிவுரை 11 இல், கேவத்த [Kevaddha] என்ற ஒரு சாதாரண மனிதனின் கேள்வி ஒன்றிற்கு புத்தர் பதிலளிக்கும் பொழுது “ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்; தண்ணீர் மீது நடந்து செல்லலாம்; காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்; நிலவையும் கதிரவனையும் தொடலாம்; பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.” [Miracles of psychic power; multiplying ones body; passing through walls, mountains etc.; walking on water; flying through the air cross-legged; touching the sun and moon; and traveling as far as the Brahma Realms.]
 
என்றாலும் இதை பார்க்கும் ஒருவர், அதை, இந்த சம்பவத்தை, சந்தேகப் படுபவர்களிடமும், நம்பாதவர்களிடமும் முறையிட்டால், அவர்கள் இது ஒருவித மந்திர வசீகரமே காரணம் என்பார் [But if one were to see this kind of miracle and report it to someone skeptical and unbelieving they would think it was due to some kind of magic charm.],
 
ஆகவே புத்தர் திட்ட வட்டமாக "அதனால் தான். நான் அவைகளை விரும்பவில்லை, நிராகரிக்கிறேன், வெறுக்கிறேன்" என்று சொல்கிறார் [That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them].
 
உலகளாவிய அன்பு மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் [universal love and compassion for all living beings] என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் புத்தரின் போதனைகள் பொதுவாக உருவாக்கப் பட்டவையாகும்.
 
தீக நிகாயம், அறிவுரை 30 இல், ததாகதர் [துறவு நிலை அடைந்தவர்] என்பவர் எப்பவும் ஒரு கடுமையான பேச்சை நிராகரிப்பவர், அப்படியானவற்றில் இருந்து விலகுபவர், குற்றமற்ற பேச்சு பேசுபவர், காதுக்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும், ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றையும், இதயத்தை அடையக் கூடியவற்றையும், நாகரிகமானவற்றையும், மற்றும் மக்களின் கூட்டத்திற்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும் கவரக்கூடியவற்றையும் பேசுபவர் என்று வர்ணிக்கிறார் [“the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude”]
 
இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும். அதாவது, இலங்கையில், எங்கு நாகர்கள், இயக்கர்களை விட பெரும்பான்மையாக காணப்பட்டார்களோ, அங்கு தமிழ் மொழி மேம்பட்டது அல்லது நிலவியது எனலாம் [In Sri Lanka, wherever the Nagas were concentrated in larger numbers than the Yakkhas, the Tamil language prevailed].
 
ஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வரலாறு இலங்கையில் பெரிதாக தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
 
இலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது என்றே தோன்றுகிறது, உங்களுக்கு எப்படியோ ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 19 தொடரும்
314784311_10221991431717652_3635862385884407312_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EzeM-mcF-0YQ7kNvgF_ifIt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDmLzLm-k9qRuGqqqv4EARZQc_lkUKk_bFOHC8yhaNfnw&oe=66381244 315025988_10221991431997659_2536276205367447696_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xDEh5FC45sUQ7kNvgFhA1li&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDb0z4KTLIIS5BOwwuP7Pg3WncSUm146gZG08iB8F0WVA&oe=66381F26 315080630_10221991433357693_9141498049809145050_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6CtCKIBS6XMQ7kNvgFDiQD3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCnZoFQI8d72x0cE7K6ES09eLq4AAtMbEaSGoyp6wJZ2Q&oe=663829DC 314955617_10221991432557673_1235697582836129457_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=E1-0_E5amxMQ7kNvgEs8jZr&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDq29UaSlQnTTxAeQWfeStYj-wCDC4vqsi6_TXZR2Z8dg&oe=66380E9C 314971120_10221991432797679_5280919523106509395_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BAlf7N9h8A0Q7kNvgGP9PKK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAWSJ98gdp6I_oDJS2z21_WPul2Pu9684vOqaw0c01u0g&oe=663824B4
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 19
 
 
 
பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"].
 
டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].
 
அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் கி பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் மட்டுமே இன்று உள்ளன. கல்வெட்டுகளில் அசோக மன்னனின் மகன் திவாலா ['திவாரா'] மட்டுமே, அவரது தாய் ராணியுடன் பதியப் பட்டுள்ளது [Tivala [or Tivara ], the son of Ashoka and Karuvaki, is the only of Ashoka's sons to be mentioned by name in the inscriptions along with his mother, in the Queen Edict / S. N. Sen (1999). Ancient Indian History And Civilization. New Age International. p. 151.].
 
வட இந்தியா பாரம்பரியம் படி, அசோகனுக்கு குணாலா [Kunala ] என்ற மகன் இருந்து உள்ளார். மேலும் இது, திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") என்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட நூலில் குணாலா அவதானம் என்ற பகுதியில் குறிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது.
 
என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மஹிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் (Romila Thapar) பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
"Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1922-24 Vol.29" இல், பக்கம் 243 இல், துட்ட காமனி பற்றி குறிப்பிடுகையில், ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’ என்று கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
 
அதாவது பெரும்பாலான இலங்கை அரசர்களை போல, துட்ட காமனியும் கூடுதலாக பௌத்தனாக இருப்பதிலும் பார்க்க ஒரு இந்துவாகவே இருந்தார் என்பதை, ரிதி விகாரையை (வெள்ளிக் கோயிலை / රිදී විහාරය), அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினி, தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கின் [பிரதிஷ்டை செய்யும்] பொழுது, 500 புத்த பிக்குகளும், ஆனால் 1,500 வேதத்தில் தேர்ச்சி பெற்ற இந்து பிராமணர்களும் ஒன்று கூட அந்த நிகழ்வை நடத்தியதில் இருந்து புரிகிறது என்கிறது.
 
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலப்பதிகாரம். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு ஆட்சி மகாவம்சம் 35 ஆம் அத்தியாயத்தில் உள்ளது. மேலும் சிங்களவரும் தமிழரும் இரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. எனவே இவைகளைப்பற்றி ஒரு விரிவான பக்கச்சார்பு அற்ற ஆய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 20 தொடரும்
315709780_10222027682903909_5886347206494693031_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=W7qyw68LSo4Q7kNvgEbniIs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDJvzlmM_8_frCK-bes2lJu0ZN-dIYC21L87UErO0L8ug&oe=6638A05F 315665482_10222027682863908_6524643912050753869_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=I3hYS_KgoREQ7kNvgHzTIpf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDaoDHCifZMA1rYwQ7vi8Phui61NyQAm5_5T_VOihjrug&oe=6638BD32 315542428_10222027682663903_119581499600503497_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=w39vATpugkgQ7kNvgGFhVzG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAZ_xqJESWMZF4gMi4Q_au8SijNHcN2Sjj9oSkE8FXlTg&oe=6638BE9A 315874544_10222027683103914_8217672410561383169_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1E3NjG7ilTAQ7kNvgHIwiRt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAGk-a5e_dAirsrSA5SCRTzVgqH8lrbXwh8xkVlKMWcwg&oe=6638CC03 May be an image of text that says 'Wheel Publication No. 124/125 Buddhism in South India Pandit Hisselle Dhammaratana Mahathera' May be an image of text that says 'NCBA ANCIENT INDIAN HISTORY and CIVILIZATION Sailendra Nath Sen' 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 20
 
 
 
அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 தமிழ் மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறது. இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப்படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது.
 
கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதியீடாக ஹெள அல்லது எலு மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. என்றாலும் எலு அல்லது ஹெல என்னும் மொழியின் தோற்றம் குறித்துத் தெளிவு இல்லை. ஆனாலும், இது இலங்கையிலேயே தோற்றம் பெற்ற ஒரு மொழி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எலு மொழிக்கும், சமஸ்கிருதம், பாளி முதலிய இந்திய-ஆரிய மொழிகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் காணப்படுகின்றன.
 
அத்துடன், இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்களில் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய இனத்தவரின் மொழிகளும் கலந்து உருவானதே ஹெலமொழி என்று கருதப்படுகிறது. இம்மொழிகளுள் ஆரிய மொழிகளும், தமிழும் அடங்கும். அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், இதில் இருந்து சிங்கள மொழி மற்றும் மாலைதீவுகளில் பேசப்படும் திவெயி மொழி [Elu is ancestral to the Sinhalese and Dhivehi languages] முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும்.
 
அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் கூட, வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம்.
 
ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து, அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்கவில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார்.
 
["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].
 
வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்புகளில் இருந்து, தமிழ் நாட்டில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், தூத்துக்குடி மற்றும் இலங்கையில் மாந்தை அல்லது மாதோட்டம் [மன்னர்] போன்ற இடங்களில் இருந்து [From the annals of history we learn that the port of Puhar along the Coromandel coast of Tamil Naadu, the port of Tutucurin along the Southern coast of Tamil Naadu and the port of Mantai (Mannar) along the North-Western coast of Lanka] கிருஸ்துக்கு முன்பும், ஆரம்பகால கிறிஸ்தவ காலங்களிலும் வர்த்தகம் செய்ததிற்கு வரலாற்று சான்றுகள் பல உண்டு. அவர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருள்களின் தமிழ் பெயர்களை இன்றும் கிரேக்கத்திலும் ஆங்கிலத்திலும் காணலாம் [Tamil names of the commodities exported and imported are seen in the vocabularies of the Greek and English languages today]. உதாரணமாக கிரேக்கத்தில் அரிசியை, ஒரிசா [oryza] என்றும், இஞ்சியை சிஞ்சிபெர் [zingiber] என்றும், கருவா (பட்டை) யை கர்பியன் [karbion] என்று அழைப்பதை கவனிக்க. இது அங்கு தமிழ் மொழியே பேசப்பட்டதை மேலும் உறுதி படுத்துகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 21 தொடரும்
316661931_10222067421457348_8460099691435305320_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PbS-lDLKXXsQ7kNvgE7qSXf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCH3XXe0TLfFxbV6eTaQruowT71QjP9xa1XibhJfgoprQ&oe=663B55B7 316527097_10222067421697354_6648548844770322818_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NV0xvN3lKscQ7kNvgGJhkkz&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAlN19R6bwnx_PvTxFqAX2fnSGZdSS9WjeKJG5wp_7oug&oe=663B3F8C 316672096_10222067421257343_6070281922098168634_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=JWJbBqqtgDEQ7kNvgHcWo1M&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB82N9OZa5VgWKgTlSbRWmLNwr1Mug0l7FYnsThMhRf4w&oe=663B48EF 316661182_10222067421857358_7276087610792161512_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GMrzT8zkioAQ7kNvgHiLGcL&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCAcOSp8dNDK0Hn1RH3yRLtB8Nz6daw9tvZ3eC1QpEceQ&oe=663B60DE 316662502_10222067422257368_8643959497518551882_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5fqq32RVoOwQ7kNvgFrTdws&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAsD3NmAUbfKjb3eOn79jiqIGrvSQyL_1cR2ZKUfUf1Pg&oe=663B7001
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 21
 
 
 
சிங்கள அறிஞர் முதலியார் குணவர்தன, ஆனந்தா பாடசாலையில், 28.09.1918 , சிங்களத்தின் இலக்கணம் திராவிடம் என்கிறார் [Sinhala scholar Mudliyar Gunawardena at a lecture delivered at Ananda College on 28.09.1918 had stated "....the science of exmination of the structure of a sentence is called its grammar. The grammar of the Sinhala language is Dravidian...] பேராசிரியர் J. B. திஸ்ஸநாயக்க, தனது "சிங்களத்தை புரிந்து கொள்ளுதல் " என்ற புத்தகத்தில், பக்கம் 118 இல், தெற்காசியாவின் மொழிகளில், சிங்களம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அதற்க்கு காரணம் அது இந்தோ ஆரியன் மற்றும் தமிழுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு என்கிறார் ["Prof. J. B. Dissanayake in his book "Understanding the Sinhalese" at page 118 states "....Sinhala occupies a unique position among the languages of South Asia because of its close affinity, with two of the major linguistic families of the Indian sub continent Indo-Aryan and Dravidian..."].
 
இதில் இருந்த நாம் இலகுவாக ஊகிக்கலாம், சிங்கள எழுத்து கட்டாயம் ஆரிய மொழியும், திராவிட மொழியும் தெரிந்த ஒருவரோ அல்லது பலராலோ தான் உண்டாக்கப் பட்டு இருக்கும் என்பது. மேலும் அரபு நாட்டில் இருந்து இலங்கைக்கு ஏழாம் நூற்றாண்டில் குடியேறியவர்களின் சந்ததி, இன்று முஸ்லீம் என்றும் சோனகர் என்றும் அழைக்கப் படுபவர்கள், எல்லோரும் வீட்டில் தமிழ் பேசுபவர்களாகவே மாறினார்கள். காரணம் தமிழ் தான் அங்கு பாவனையில் இருந்துள்ளது. சிங்களம் அங்கு பாவனையில் இருந்து இருந்தால், கட்டாயம் சிங்களமே பேசி இருப்பார்கள் ?.
 
மற்றும் விஜயபாகுவின் அரச கட்டளைகள் (A.D. 1056-1111) சிங்களத்திலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத் தக்கது [Arab settlers came to Ceylon about 7th century A.D. Their descendants are now called Muslims and Moors. They learned Tamil because that would have been the language in use. Also Royal edicts of Vijayabahu (A.D. 1056-1111) were in Sinhala and Tamil]. இது விஜயபாகுவின் ஆட்சியில் பெரும் தொகையான குடிமக்களாக தமிழர்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.
 
தீபவம்சம், மகாவம்சம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், மகாவம்சம் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தமிழருக்கு எதிரான போக்கை கையாளுவதைக் காணலாம். உதாரணமாக, கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை ஆட்சி செய்த சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்களையும் தீபவம்சம் ராஜகுமாரர்கள் [princes] என கூறும் அதே வேளையில், அதற்குப் பிறகு எழுதப்பட்ட மகாவம்சம், அவர்கள் இருவரையும் குதிரை வியாபாரியின் மகன்மார்கள் [sons of a horse trader] என்றும், வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறது. இது, வரலாற்றில் எந்த பெரிய வேறுபாடு ? உங்களுக்கு தலை சுத்துகிறதா?
 
ஆனால் தீபவம்சம் அவர்கள் சோழநாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ வந்தவர்கள் என்று கூறவே இல்லை. அதே போல எல்லாளனை தமிழ் இளவரசன் என்றோ அல்லது சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றோ தீபவம்சம் கூறாத வேளையில், தீபவம்சத்தை 150 / 200 ஆண்டுகளின் பின் விரிவாக்கிய மகாவம்சம் முரண்பாடான கருத்தை அங்கு பதிவிடுகிறது. தீபவம்சம் தமிழர் விரோத வெறுப்பைக் பொதுவாக எங்கும் கக்கவில்லை. ஆனால் அது புத்த மாதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது.
 
அபய [Abhaya] அல்லது துட்டகைமுனுவின் தந்தையின் பெயர் காக்கவன்ன [Kakkavanna]. அதே போல வன்னியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் பெயர் பண்டாரவன்னியன், அவனை காட்டிக்கொடுத்தவனின் பெயர் காக்கவன்னியன். பெயர் காக்கவன்ன குரல் ஒலியில் காக்கவன்னியனுடன் ஒன்றாகிறது [phonetically similar]. அது மட்டும் அல்ல, தீபவம்சம் காக்கவன்னவுக்கும், மூத்தசிவ அல்லது தேவநம்பிய தீசனுக்கும் இடையில் என்ன உறவு என்று கூறவும் இல்லை.
 
மகாவம்சத்தில், சிங்கத்துடன் வங்க நாட்டு இளவரசி புணர்ந்து இரு மனித பிள்ளைகளை பெற்றார் என்றும், அந்த சகோதரங்கள் தங்களுக்குள் திருமணம் செய்து விஜயன் பிறந்தான் என்றும் கூறுகிறது. உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
 
உதாரணமாக, சிங்கம் 36 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Lions have 36 chromosomes and humans have 46 chromosomes.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 38, 36 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும் , மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு பத்து ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது.
 
அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!
 
கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சாகசப் பெண்ணை [adventurous woman] சிங்கம் உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 22 தொடரும்
317612026_10222106571996087_2430202466594402582_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kgyay2AhfeoQ7kNvgHBdSpm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCtan1gwaGD5aF8y_lbAoF7jxkq-JJHUaCtVNN5dO95Og&oe=66403FBE 317505800_10222106572516100_4591536405103709323_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oX75iOdH0usQ7kNvgHbduZU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCZ7zW0cxdwzL_uA9YDX9gfiAlpd_A7a5KvgA0TWhM1AA&oe=6640316A
 
317604425_10222106572316095_5737174575133805072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0_PIjwE7P0YQ7kNvgErcbjj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAH1OTOYMSwHy6Kitb5jW1p4Lu4Zyo6bqxH1Ei4ayp17Q&oe=66402C6E 317609124_10222106571756081_6033022436565376234_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Eg8CrMiwzMkQ7kNvgHZj4G4&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBSsQMxuakMcm1w4VE8CyEs-57xrBWVXotGnchSQj7PKg&oe=66405B4F
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2024 at 19:19, kandiah Thillaivinayagalingam said:

அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!

 

இது உயிரியல் அறிவு தர்க்க அடிப்படையில் சரி.

அனால், இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு, விஞ்ஞான சமூகத்தின் ஒருமித்த முடிவா என்பது தெரியவில்லை.

எனவே, கலப்பு நடந்து, சந்ததி பிழைத்துள்ளது  என்பதே முடிவு.

ஆனாலும்,  Neanderthals உம் , Sapiens உம் Homo genus  இன் இரு வேறு வர்க்கங்கள் (species) என்ற படியால், பெரிய அளவு தூரம் இல்லாமல், கலந்து சந்ததி உருவாகுவதற்கு சாத்தியக்கூறுகள்  இருந்து இருக்கலாம்.

ஆயினும், வேறு வேறு வர்க்கங்கள்  (species) புணர்ந்து சந்ததியை உருவாக்க முடியாது என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது, உயிரியல் அறிவு தர்க்க அடிப்படையில்.

ஆயினும் சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது.

(நிகழ்தகவு அடிப்படையில் type 1 error, rejecting the null hypothesis, when the null hypothesis is at the least theoretically true)  

மற்றது, மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா என்பதிலும் தெளிவில்லாமல் உள்ளது.

ஏனெனில், மகாவம்சம் அத்தக்கதாவின் பொழிப்பு என்றே (சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும்) சொல்லுகிறார்கள், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள். 

ஆனால், அத்தக்கதா, பர்மா (இப்பொது மியன்மார்), தாய்லாந்து பௌத்த பீடங்களில், அந்தந்த மொழியில் இருக்கிறது. ஆனாலும், அவை மூலப்பிரதி அல்ல என்றே சொல்லப்படுகிறது.


(18 - 21 ம் நிமிடத்தில் இந்த கலப்பு Homo neanderthalensis, sapiens கலப்பு சொல்லப்படுகிறது)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு"

ஆம் , அது சரி , ஏனென்றால், 
  
Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding.

Neanderthal-Homo sapiens interbreeding

Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015). 
...............................................................

"சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது"

ஆம், அது முற்றிலும் சரியான வாதம் 
...................................................................
"மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. "

கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது 

ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ] 

"மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]  

"வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]  

என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை 
.....................................................................

மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.]

Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text.

Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?  
...........................................

"சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது'

It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala). 

There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது] 

Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable.

Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life.

ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே?

Tradition regarding the Aṭṭhakathā
[Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka]

The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 22
 
 
சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது.
 
மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்ட தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும்.
 
எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள்.
 
1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார்.
 
அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]
 
உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டு வந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத் தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் - இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.
 
வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது.
 
[படம் : 01 அல்லது Table 10:  Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used.  The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words also may point to a time where both languages were less divergent. (Please note that the table numbers are as denoted in the original document.)]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
[Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?
https://www.facebook.com/groups/978753388866632/posts/5137468916328371/?]
 
பகுதி: 23 தொடரும்
318407217_10222145852978087_8260035943206999802_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CNrPbFckdNAQ7kNvgGXZBcx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDj8P17vPeO_zHOU8Nj8dmPZchYpblJiH5vaaKH005E6g&oe=6645B3EA  318553868_10222145853858109_1971563706160209240_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=h78zwksOWVYQ7kNvgFyVBR5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCYsE2Xy98V83Y4iFnLW_PjKmslYcMwRb6pupXFFl5dIw&oe=6645B442 318749116_10222145852858084_3723022658657100025_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=r9nm_9esYXgQ7kNvgH5mngX&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAgNNI5HHqwURUSWPns-KqnsBI_mhH-xX-fiq5QMEIkgQ&oe=6645A271 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 23
 
 
 
மகாவம்சத்தில் எப்படி, மகாபாரத இராமாயண சாயல் தெரிகிறதோ, அப்படியே சில சங்க கால சாயலும் அல்லது அவையை ஒத்திருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக, அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். அதேபோல அத்தியாயம் 36-ல் மன்னன் ஒகாரிக திச்சனின் [VOHARIKA TISSA] ஒரு அமைச்சர் கபிலன் [Kapila]. இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் பற்றி சொல்லப்படுகிறது. மற்றும் இலங்கையில் பல “நாகன்” பெயர் கொண்ட மன்னர்களின் பட்டியல் இருக்கிறது. இப்படி இன்னும் சில சொல்லலாம். எனவே, கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை என்று ஒதுக்க முடியாது என்று நம்புகிறேன்.
 
அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்து வந்த ஏலாரா அல்லது எல்லாளன், இலங்கையை 44 ஆண்டுகளாக சீரும் சிறப்புடனும் ஆண்டான். அதேபோல மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்திலும் உள்ளது. இருவரும் சோழ வம்சத்தினர் மட்டும் அல்ல, இருவரும் பசுவின் கன்றைக் கொன்ற குற்றத்துக்காகத் தன் மகன் மீது தேர்க் காலை ஏற்றி சம நீதியை நிலை நாட்டியவர்கள் என்று, ஒரே மாதிரியான கதையை உடையவர்கள்.
 
அத்தியாயம் 5 இல் [THE THIRD COUNCIL], கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த ஏரியிலிருந்து தொண்ணுறாயிரம் வண்டி பாரம் நெல் மணிகளைக் கொண்டு வந்தன என்றும் [parrots brought daily from the Chaddanta-lake ninety thousand waggon-loads of rice], அத்தியாயம் 11 இல் [THE CONSECRATING OF DEVANAMPIYATISSA], அறுபது தரம் நூறு வண்டிகள் நிறைய கிளி பறவைகளால் கொண்டு வரப் பட்ட. மலையில் விளைந்த அரிசி என்றும் [sixty times one hundred waggon loads of mountain-rice brought thither by parrots, nay, all that was needful for consecrating a king]– அசோகன் மற்றும் தேவநம்பிய தீசன் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இப்படி பறவைகள் அரிசி கொண்டு வந்தன என்பது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டு வந்தார் என்று சங்க இலக்கியம் கூறுவதுடன் ஒத்து போகின்றன.
 
கபிலர் என்பது சிவப்பு நிறக் கடவுள், சிவனைக் குறிக்கும் என்பர். அவர் குடிகளுக்கும் படைகளுக்கும் உணவு பஞ்சம் ஏற்படாத வாறு ஒரு முறை கிளிகளைப் பழக்கி நெற் கதிர்களை வரவழைத்தார் என்பதை நக்கீரர் மற்றும் ஒளவையார் பாடல்களில் அறியலாம்.
 
 
“புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,”
(ஒளவையார், அகநானூறு: 303: 8-14)
 
 
அறிவைத் துணையாகக் கொண்ட இரவலர் சென்றால், மலை போன்ற யானைகளையும், அவற்றில் ஏற்றிய அணிகலன்களையும் வழங்கிப் புகழ் பெற்றவன் பறம்புமலை அரசன் பாரி. மூவேந்தர் முற்றுகை இட்டிருந்த காலத்தில் அவன் வளர்த்த குருவிக் கூட்டம் காலையில் பறந்து சென்று மாலையில் நெல்லங் கதிர்களோடு திரும்பும். அதனை உண்டு அரசுச்சுற்றம் வாழும் என்கிறது இந்த சங்க பாடல்.
 
மேலும் அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது. விஜித நகரத்தைக் கைப்பற்ற முன்பு அரசன் நந்திமித்திரனைக் சோதித்துப் பார்க்க விரும்பினான். அதற்காக யானை கந்துலனை அவன் மீது ஏவி விட்டான். தன் மீது பாய்ந்து வரும் யானையைக் கண்ட நந்திமித்ரன் அதன் இரு தந்தங்களையும் பிடித்துக் கொண்டு யானையை அடக்கி அது முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தினான் என்கிறது 5ஆம், 6ஆம் நூறாண்டில் எழுதிய மகாவம்சம்.
 
ஆனால் இதே போல சம்பவம் 2ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் கோவலன் யானையை புஜபலத்தால் அடக்கிய ஒரு சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. சிலப்பதிகாரம் /மதுரைக் காண்டம் / 5. அடைக்கலக் காதை இல்,
 
 
"தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை;
பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள்;
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,
மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!"
 
 
என்கிறது , அதாவது, முதியவன் ஒருவன் கூனிய உடம்புடன் தடி ஊன்றிக் கொண்டு தானம் பெறத் தளர்ந்து நடந்து வந்தான். அப்போது பாகனின் கட்டுப் பாட்டுக்குள் நிற்காமல் விரைந்து வரும் மதம் பிடித்த யானை ஒன்று அவனைத் துதிக்கையால் வளைத்து எடுத்துக் கொல்லப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட கோவலன், உடனே யானை மீது பாய்ந்து அந்தணனைத் துதிக்கையிலிருந்து விடுவித்து அதன் பிடரித் தலை மீதமர்ந்து அடக்கினானாம் என்று கூறுகிறது.
 
மேலும் அத்தியாயம் 35 இல், சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் யானை கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை மீட்டு முதுகிலேற்றிக் கொண்டு சென்று, அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 24 தொடரும்
320074714_807372583694875_8883308167948193468_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=yMo8QFrkPqIQ7kNvgHLlZUv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDgOjdBVl4ksUQepKlu_5rxjJ9UR85-mOLCAoqNxufLuQ&oe=66494575 320130872_6017760274908797_111014398791945522_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nbdrkQNBt5oQ7kNvgGKdEgg&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBxOtTldiO2W7Dn1XE4gR3o2_quXQV51m7iBURuwK2JnA&oe=664931AD 319957500_1216166708970378_469603310627210406_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vqMpDPkUdCYQ7kNvgFkI4Ke&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD9oLIXMK_sX_cyubG7zUAKBFAAZbTgnZ6FaqTg1ORs3A&oe=664926CF
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய நாளில் மிகவும் தேவையான நல்ல செய்தி. வாழ்த்துக்கள். 
    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 08:35 AM   ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம்  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்  ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183839
    • புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024     அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.