Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கு எதிராக மேன்முறையீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
08 MAY, 2024 | 11:30 AM
image

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க வேண்டும் எனவும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை முடியும் வரை அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், கூட்டத்தின் நிமிடங்கள், தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்னவை நியமித்தமையை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது.

2020 ஜனவரி முதல் அதன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும், நடைமுறை நியாயம்  மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISLஇன் மனு வாதிடுகிறது.

இந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்துக்கு  உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், விஜேரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாவதற்குரிய அனைத்து சட்ட ரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது.

மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவர், ஆணையாளர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம் கோருகிறது.

இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது.

நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளை குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும், தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், திருத்துவதற்கும் தவறினால், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது சட்டப்பூர்வ தீர்வுகளை தேடுவதோடு, பணிப்பாளர் நாயகம் பதவிக்குரிய எதிர்கால நியமனங்களுக்கான, தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கோருகிறது.

https://www.virakesari.lk/article/182948

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பையனுக்கு மட்டுமே புள்ளி கிடைக்கிறது.
    • 02) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )   போட்டியாளர் #1 #2 #3 #4   வீரப் பையன்26 CSK RR KKR GT   முதல்வன் RR CSK KKR SRH   சுவி RR KKR CSK SRH   ஏராளன் RR KKR CSK SRH   நிலாமதி KKR RR DC SRH   அஹஸ்தியன் RR SRH KKR CSK   ஈழப்பிரியன் RR CSK KKR LSG   கல்யாணி RR KKR CSK SRH   கந்தப்பு RR CSK SRH KKR   கறுப்பி MI GT CSK RR   எப்போதும் தமிழன் RR CSK KKR SRH   வாதவூரான் RR KKR CSK SRH   கிருபன் RR KKR CSK SRH   நீர்வேலியான் RR CSK KKR SRH   கோஷான் சே RR KKR LSG CSK   நுணாவிலான் RR KKR CSK SRH   புலவர் RR CSK KKR SRH     03)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)   போட்டியாளர் பதில் வீரப் பையன்26 MI முதல்வன் RCB சுவி RCB ஏராளன் RCB நிலாமதி RCB அஹஸ்தியன் RCB ஈழப்பிரியன் PBKS கல்யாணி RCB கந்தப்பு RCB கறுப்பி RCB எப்போதும் தமிழன் RCB வாதவூரான் RCB கிருபன் PBKS நீர்வேலியான் RCB கோஷான் சே PBKS நுணாவிலான் RCB புலவர் RCB
    • ஆகா ஆர் சி பியை யாருமே கணிக்கவில்லை. புள்ளிகளைப் போடத் தொடங்கலாமே? சிஎஸ்கே எல்லோருக்குமே தொப்பியைப் போட்டுவிட்டதே.
    • இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். போட்டியாளர் பதில்                     CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வீரப் பையன்26 CSK   GT KKR       RR     முதல்வன் CSK     KKR       RR   SRH சுவி CSK     KKR       RR   SRH ஏராளன் CSK     KKR       RR   SRH நிலாமதி CSK     KKR       RR   SRH அஹஸ்தியன் CSK     KKR       RR   SRH ஈழப்பிரியன் CSK     KKR LSG     RR     கல்யாணி CSK     KKR       RR   SRH கந்தப்பு CSK     KKR       RR   SRH கறுப்பி CSK   GT     MI   RR     எப்போதும் தமிழன் CSK     KKR       RR   SRH வாதவூரான் CSK     KKR       RR   SRH கிருபன் CSK     KKR       RR   SRH நீர்வேலியான் CSK     KKR       RR   SRH கோஷான் சே CSK     KKR LSG     RR     நுணாவிலான் CSK     KKR       RR   SRH புலவர் CSK     KKR       RR   SRH
    • யுத்தத்தின்  ஆரம்பத்தில் நானும் வேறு சிலரும்  குறிப்பிட்டது போன்று இஸ்ரேல் யுத்தத்தில் தோற்றுவிட்டது என்பது மேலும் மேலும் நிரூபணமாகிறது.  ☹️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.