Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து செயற்கை கை, கால்கள் தயாரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
08 MAY, 2024 | 12:05 PM
image

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும். 

375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை, கால்கள் விநியோகிக்கப்படவுள்ளன. 

மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிலரங்கின்போது 04 இராணுவ உறுப்பினர்களுக்கு செயற்கை கை, கால்கள் அடையாளமாக வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

unnamed__3_.jpg

unnamed.jpg

unnamed__4_.jpg

unnamed__6_.jpg

unnamed__5_.jpg

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 https://www.virakesari.lk/article/182954

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பையனுக்கு மட்டுமே புள்ளி கிடைக்கிறது.
    • 02) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )   போட்டியாளர் #1 #2 #3 #4   வீரப் பையன்26 CSK RR KKR GT   முதல்வன் RR CSK KKR SRH   சுவி RR KKR CSK SRH   ஏராளன் RR KKR CSK SRH   நிலாமதி KKR RR DC SRH   அஹஸ்தியன் RR SRH KKR CSK   ஈழப்பிரியன் RR CSK KKR LSG   கல்யாணி RR KKR CSK SRH   கந்தப்பு RR CSK SRH KKR   கறுப்பி MI GT CSK RR   எப்போதும் தமிழன் RR CSK KKR SRH   வாதவூரான் RR KKR CSK SRH   கிருபன் RR KKR CSK SRH   நீர்வேலியான் RR CSK KKR SRH   கோஷான் சே RR KKR LSG CSK   நுணாவிலான் RR KKR CSK SRH   புலவர் RR CSK KKR SRH     03)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)   போட்டியாளர் பதில் வீரப் பையன்26 MI முதல்வன் RCB சுவி RCB ஏராளன் RCB நிலாமதி RCB அஹஸ்தியன் RCB ஈழப்பிரியன் PBKS கல்யாணி RCB கந்தப்பு RCB கறுப்பி RCB எப்போதும் தமிழன் RCB வாதவூரான் RCB கிருபன் PBKS நீர்வேலியான் RCB கோஷான் சே PBKS நுணாவிலான் RCB புலவர் RCB
    • ஆகா ஆர் சி பியை யாருமே கணிக்கவில்லை. புள்ளிகளைப் போடத் தொடங்கலாமே? சிஎஸ்கே எல்லோருக்குமே தொப்பியைப் போட்டுவிட்டதே.
    • இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். போட்டியாளர் பதில்                     CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வீரப் பையன்26 CSK   GT KKR       RR     முதல்வன் CSK     KKR       RR   SRH சுவி CSK     KKR       RR   SRH ஏராளன் CSK     KKR       RR   SRH நிலாமதி CSK     KKR       RR   SRH அஹஸ்தியன் CSK     KKR       RR   SRH ஈழப்பிரியன் CSK     KKR LSG     RR     கல்யாணி CSK     KKR       RR   SRH கந்தப்பு CSK     KKR       RR   SRH கறுப்பி CSK   GT     MI   RR     எப்போதும் தமிழன் CSK     KKR       RR   SRH வாதவூரான் CSK     KKR       RR   SRH கிருபன் CSK     KKR       RR   SRH நீர்வேலியான் CSK     KKR       RR   SRH கோஷான் சே CSK     KKR LSG     RR     நுணாவிலான் CSK     KKR       RR   SRH புலவர் CSK     KKR       RR   SRH
    • யுத்தத்தின்  ஆரம்பத்தில் நானும் வேறு சிலரும்  குறிப்பிட்டது போன்று இஸ்ரேல் யுத்தத்தில் தோற்றுவிட்டது என்பது மேலும் மேலும் நிரூபணமாகிறது.  ☹️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.