Jump to content

பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்ற சிறுமி - யாழில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

11 MAY, 2024 | 09:57 AM
image
 

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/183212

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஏராளன் said:

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
 

 

 

Edited by Kavi arunasalam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பிரசவித்து தப்பித்த சிறுமி மீட்பு

1983427084.jpg
 

(ஆதவன்)

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையைக் கைவிட்டுத் தலைமறைவான பாடசாலைச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அத்துடன்  சிறுமியை தாய்மை அடையச்செய்த சந்தேகநபரும் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி - துன்னாலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த பச்சிளம் சிசுவை அநாதரவாக விட்டுவிட்டு மறுநாள் சிறுமியும் அவரது தாயாரும் தலைமறைவாகியிருந்தனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் சிறுமியை தாய்மை அடையச் செய்யக் காரணமாகவிருந்த குற்றச்சாட்டில் மல்லாவியைச் சேர்ந்த 25 வயது உடைய இளைஞரையும் கைது செய்துள்ளனர்.(ஏ)

 

https://newuthayan.com/article/குழந்தை_பிரசவித்து_தப்பித்த_சிறுமி_மீட்பு;_சந்தேகநபரும்_கைது

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.