Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் - மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   12 MAY, 2024 | 01:46 PM

image

அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

Gotabaya-Rajapaksa_new.jpg

பேட்டியொன்றில் அவர்இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின்போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேறுபல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை உள்நாட்டு யுத்தத்தின்போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எப்போதும் தேர்தல் மூலமே அதிகார மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் ஒருபோதும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியை கைதுசெய்ததும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது, கொழும்பு அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை.

இன்றும் அதே அரசாங்கம் பதவியில் உள்ளது. உங்கள் ஜனாதிபதி மாத்திரம்தான் வேறு ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ள முகமட் நசீட் 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும துப்பாக்கி குண்டுகளும் இன்றும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் மாலியில் எதிர்கொண்ட விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிக்கும் தென்னாசியா தப்பிபிழைக்காது என நான் கருதினேன்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் வேறு ஒரு அரசியல் ஏற்பாட்டை  செய்துகொள்வதற்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதினேன் எனது மனதில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது வேறு எதனையும் விட முக்கியமானதாக காணப்பட்டது எனவும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அந்த காலகட்டத்தில் பதவி விலக தயராகயிருக்கவில்லை, அவர் இன்னமும் வலுவானவராக காணப்பட்டார். அவரின் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள முகமட் நசீட் இராணுவம் தலையிட முடியாது என எப்படி நான் எதிர்பார்க்காமல் இருக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த பதட்டமான நிலையை தணிப்பதற்கு அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்வதே உகந்த விடயமாக காணப்பட்டது. மேலும் அவர் பதவி விலகி  இலங்கையர்களிற்கு வேறு ஒரு தெரிவை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவேண்டிய நிலை காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு வெளியேறியது இலங்கையர்களுக்கு இரத்தக்களறியற்ற அரசியல்தருணத்தை வழங்கியது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் மக்களின் உணர்வுகளிற்கு எதிராக செயற்பட்டேன் என நான் கருதவில்லை இலங்கையில் உள்ள நண்பர்கள் சிலர் அவ்வேளை என்மீது கடும் கோபம் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்போது அனைத்தும் அமைதியாகிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இராணுவத்துடன் மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப்பாருங்கள் மக்கள் ஜனாதிபதி மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தால் நிலைமை அவ்வளவு சிறப்பானதாகயிருந்திராது எனவும் குறிப்பிட்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி  நான் இதனை இலங்கைமக்களிற்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன் எனது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என மன்றாடுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை நான் ஒருபோதும் தடுக்க முயலவில்லை, அவர்களின் அரசியல் செயற்பாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/183296

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.