Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7  19 MAY, 2024 | 10:14 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன. இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடாத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்த கட்சியின் மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது. அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

https://www.virakesari.lk/article/183926

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும், ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை - உதயங்க வீரதுங்க

Published By: VISHNU   20 MAY, 2024 | 03:11 AM

image

(இராஜதுரை ஹஷான்)

முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கவும் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடுவது  பேச்சுக்கு மாத்திரமே வரையறுக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலே நடத்தப்படும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன். முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும்.

எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முற்பட்ட தினத்துக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் இந்த பாராளுமன்றத்தை நிச்சயம் கலைப்பார். புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஜனாதிபதிக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பலவிடயங்கள் பேசப்பட்டன. பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னுரிமை வழங்கியுள்ளமையால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார். ஒருவேளை அவர் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுமில்லை. எமது வேட்பாளரை நாங்கள் களமிறக்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/183992

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.