Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன் தற்போதைய தலைவர் ஜூன் மாதம் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் குழுவின் ஆதரவையும் பொன்சேகா பெற முடிந்துள்ளதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பின்கதவு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொன்சேகாவின் பிரச்சாரம் ஊழலற்ற நாட்டை ஊக்குவிப்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கும் என்று டெய்லி மிரர் அறிகிறது.

அவர் தனது பிரச்சாரத்தின் போது புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இராணுவத் தளபதி போர் பற்றிய புத்தகத்தை வெளியிடுவதன் மூலம் தனது ஜனாதிபதி முயற்சியை அதிகரிக்க முற்படுவார் என்று டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

இந்த புத்தகம் மோதல் தொடர்பான தகவல்களையும், அப்போது ராணுவ தளபதியாக அவர் ஆற்றிய பங்கையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக பொன்சேகாவை சந்திப்பதற்கு முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமசிங்கவை சந்திப்பதை பொன்சேகா நிராகரிக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பாராளுமன்றத்தில் கலந்துரையாடியுள்ளார்.

பொன்சேகா பல இராஜதந்திரிகளுடன் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், தனது வரவிருக்கும் அறிவிப்பு குறித்து அவர்களுக்கு விளக்கமளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரத்தின்படி, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்டத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலில்-மீ்ண்டும்-களமிறங்குகிறார்-பொன்சேகா/175-337677

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

large.IMG_6507.jpeg.3cefbf1fc62f48bc4867

  • கருத்துக்கள உறவுகள்

ரணில், சஜித், நாமல் (?), சரத், பொது தமிழ் வேட்பாளர்.... இப்படி எல்லோருமே களத்தில் இறங்கினால், அநுர குமார திசாநாயாக்கவிற்கு அது ஆதாயமாகப் போகலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பொது தமிழ் வேட்பாளர்

இது தான் ஆட்டம் காணுதே.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தான் ஆட்டம் காணுதே.

எப்படியும் ஒரு குதிரை கடைசியில் ஓடும்......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.