Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 MAY, 2024 | 04:19 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின்கீழ் சுந்தரலிங்கம் சிவசங்கரன் என்பவருக்கு எதிராகப் புதன்கிழமை (22) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். 

குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் சமர்ப்பணம் செய்திருந்தார். 

சிரேஷ்ட சட்டத்தரணியுடன் கனிஷ்ட சட்டத்தரணி திருமதி. சி.சண்முகியும் மனுதாரர் சார்பாக இவ்வழக்கில் ஆஜராகியிருந்தார். 

கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த எதிராளி, குறித்த வழக்கைத் தாக்கல் செய்தவர்களையும், குறித்த வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகளையும் விமர்சித்திருக்கின்றார். 

இது 2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின்கீழ் குற்றச் செயலாகும் எனவும் அது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்து குறித்த எதிராளிக்கு நீதிமன்றானது அழைப்பாணையை அனுப்புவதற்கான கட்டளையை ஆக்கும்படியாகவும் மேலும் குறித்த அழைப்பாணையானது நீதிமன்ற பிஸ்கால் மூலமும், பதிவுத்தபால் மூலமும் அனுப்பும்படியான கட்டளையை ஆக்கும்படியாகவும் வழக்காளிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளால் மன்றில் கோரப்பட்டது.

குறித்த சமர்ப்பணத்தை மன்று ஏற்றுக் கொண்டு குறித்த எதிராளிக்கு அழைப்பாiணை அனுப்பும்படி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் கீழ் ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட முகநூல் பாவனையாளருக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184249

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சட்டம் இங்கே எப்படி கையாளப்படுகின்றது என பார்த்தால்..

இன்னோர் கண்ணோட்டம்.

ஒருவர் தவறு செய்துவிட்டு பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கின்றார்.

பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், தவறு செய்தவருக்கு எதிராகவும் ஒருவர் சமூக ஊடகத்தில் கருத்து பகிர்கின்றார்.

இப்போது சமூக ஊடகத்தில் கருத்து பகிர்ந்தவர் வீட்டு கதவை போலிசார் தட்டுகின்றனர்.

ஆக மொத்தத்தில் வழக்கு என வந்த விடயத்தை எவரும் விமர்சனம் செய்ய முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் முன் உதாரணம்?

ஒன்றும் புரியவில்லையே. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.