Jump to content

காசாவில் சுரங்கப்பாதைக்குள் மோதல் - இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலரை கைது செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 MAY, 2024 | 01:12 PM
image
 

காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/184504

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
    • யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
    • நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர் 8 சுற்றில் நுழைந்தது பங்களாதேஷ் 17 JUN, 2024 | 12:17 PM   (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக சென் வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நேற்று (16) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது. இப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்டே பங்களாதேஷ் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கடும் சிரமத்துக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. 7 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 5 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியதால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குஷால் மல்லா (27), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்கு வந்த பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி 4 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்ஸிம் ஹசன் சக்கிப் https://www.virakesari.lk/article/186257
    • Published By: VISHNU 16 JUN, 2024 | 10:48 PM   வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,  குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று மதியம் கடைக்கு சென்று உள்ளார். இதன் போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். குறித்த மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/186222
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த விஷயங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள தொலைத்தொடர்பு இயக்குனரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கருத்தரங்கில் அவர் இதைத்தெரிவித்தார். "வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் ஒன்றரை லட்சம் ஃபோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஃபோன்கள் அனைத்தும் போலியானவை,” என்று கருத்தரங்கில் பேசிய அவர் குறிப்பிட்டார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். எனினும், போலி மொபைல் போன்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஏ.கே.எம்.முர்ஷித், பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். "ஒரு ஆபரேட்டரின் நெட்வொர்க்கில் இருந்த எட்டு லட்சம் மொபைல் போன்கள் ஒரே ஐஎம்இஐ குறியீட்டுடன் சில ஆண்டுகளுக்கு வேலை செய்தன," என்று அவர் கூறினார். ஆனால் ஒரே அடையாளத்தைக் கொண்ட பல செல்போன்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதே கேள்வி.   ஐஎம்இஐ என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச மொபைல் கருவி அடையாளம் (IMEI) என்பது 15 இலக்க எண் ஆகும். மொபைல் கைபேசியை தயாரிக்கும் போது இந்த எண் அதில் ப்ரோக்ராம் செய்யப்படுகிறது என்று IMEI.info தெரிவிக்கிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த எண் 17 இலக்கங்களாகவும் இருக்கலாம். உண்மையில் இந்த எண் மொபைல் கைபேசியின் அடையாளமாக இருக்கிறது. இந்த கைபேசி எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது, எந்த பகுதியில் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த எண் காட்டுகிறது. "ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு ஐஎம்இஐ எண் மட்டுமே இருக்கும்படியாக மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில், மொபைல் தொடர்புக்கான குளோபல் சிஸ்டம் (ஜிஎஸ்எம்) வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று ஏ.கே.எம்.முர்ஷித் கூறினார். தொலைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதைக் கண்டுபிடிக்க ஐ.எம்.இ.ஐ எண் பயன்படுத்தப்படும். இது தவிர புதிய மொபைல் வாங்கும் போது, அந்த மொபைல் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்பதை ஐஎம்இஐ எண் மூலம் உறுதி செய்துகொள்ளலாம். உங்கள் போனில் *#06# டயல் செய்தால், உங்கள் மொபைலின் ஐஎம்இஐ நம்பர் உங்களுக்குத் தெரியும். நீங்கள் IMEI.info இணையதளத்திற்குச் சென்று இந்த எண்ணை உள்ளிட்டு செக் பட்டனை அழுத்தினால் அடுத்த பக்கத்தில் தொலைபேசி தொடர்பான தகவல்களை நீங்கள் காண்பீர்கள்.   ஐ.எம்.இ.ஐ மோசடி எவ்வாறு நிகழ்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றுவது என்பது பொதுவாக ஒரு உண்மையான எண்ணை குளோனிங் செய்வதாகும். மொபைல்களில் இரண்டு வகையான குளோனிங் அடிக்கடி செய்யப்படுகிறது. ஒன்று சிம் குளோனிங் மற்றொன்று ஐ.எம்.இ.ஐ குளோனிங் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணர் பிஎம் மொய்னுல் தெரிவித்தார். மொபைல்பேசியின் அடையாளத்தை நகலெடுக்க முடியும் என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். சாதாரண மக்கள் அதை எளிதாக செய்ய முடியாது. ஏனென்றால் இதில் பல தொழில்நுட்ப செயல்முறைகள் அடங்கியுள்ளன. போலி கைபேசிகள் தயாரிக்கும் சில சட்டவிரோத தொழிற்சாலைகளில் டாக்கா பெருநகர காவல்துறை (டிஎம்பி), சமீபத்தில் சோதனை நடத்தியது. "சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல்களை நகலெடுத்து கைபேசிகள் தயாரிக்கும் ஒரு போலி தொழிற்சாலையை 2020 ஆகஸ்டில் நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று டாக்கா பெருநகர காவல்துறையின் சைபர் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் துணை ஆணையர் முகமது ஜுனைத் ஆலம் சர்க்கார் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். இதுபோன்ற மேலும் பல சோதனை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரங்கள் அளித்தார். "உள்ளூரில் இருக்கும் 'தொழிற்சாலைகளில்' ஓரிரு அறைகள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. கைபேசிகளின் பாகங்கள், வெளிநாட்டில் இருந்து வாங்கி அசெம்பிள் செய்யப்பட்டவை,'' என்றார் அவர். "ஐ.எம்.இ.ஐ ஸ்பூஃபிங் (போலியாக உருவாக்குவது) என்பது பட்டன் ஃபோன்களில் மிகவும் பொதுவானது. இது ஸ்மார்ட் ஃபோன்களில் இது குறைவாகவே உள்ளது. அதிக எண்ணிக்கையில் ஃபோன் அடையாள எண்களை பொருத்துவதற்கு வேறு வழிகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்," என்று அவர் கூறினார். "சட்டவிரோதமாக வெளியில் இருந்து வரும் அறியப்படாத அல்லது அநாமதேய பிராண்டுகளின் கைபேசிகளை இவ்வாறு தயாரிக்கமுடியும். இவற்றுக்கு ஒரே ஐஎம்இஐ எண் பயன்படுத்தப்படுகிறது," என்று பேராசிரியர் மொய்னுல் ஹுசைன் குறிப்பிட்டார். 'வெளிநாட்டு' நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டிருந்தால், அத்தகைய மென்பொருள் அல்லது தேவையான உபகரணங்களை அது வழங்கியிருக்கலாம்,'' என்றார் அவர். "ஒருமுறை தகவல் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டால், அதை மாற்ற முடியாது" என்று முர்ஷித் கூறினார். ”ஆனால் இது கான்ஃபிகர் (மாற்றியமைக்கக்கூடியது) செய்யக்கூடியதாக இருந்தால், போலி கைபேசிகளை சந்தைகளில் விற்பனை செய்யமுடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.   இந்த மோசடி ஏன் நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய காலகட்டத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய மொபைல் ஃபோன் கண்காணிப்பு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு ஆபரேட்டரின் டவரிலும் இணைக்கப்பட்டுள்ள மொபைல் ஃபோனின் ஐஎம்இஐயை, ஆபரேட்டர் நிறுவனம் அறிந்து கொள்ள முடியும் என்று பேராசிரியர் மொய்னுல் இஸ்லாம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் பல கைபேசிகள் இருந்தால் ஒரு குறிப்பிட்ட கைபேசியை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். "அந்த நிலையில் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். இதன் விளைவாக மொபைல்பேசி கண்காணிப்புக்கு பதிலாக வேறு உத்திகளைக் கையாள வேண்டி இருக்கும்," என்று போலீஸ் அதிகாரி ஜுனைத் ஆலம் பிபிசி பங்களாவிடம் கூறினார். "இந்த காரணத்திற்காகவே சில குற்றவாளிகள் இத்தகைய கைபேசிகளை பயன்படுத்துகின்றனர்," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும் பெரிய அளவில் ஐ.எம்.இ.ஐ மோசடி நடப்பதற்கு காரணம் ’பொருளாதாரம்’ என்று ஏகேஎம் முர்ஷித் கூறுகிறார். ஒவ்வொரு ஐஎம்இஐ நம்பருக்கும் ஜிஎஸ்எம் சங்கம் ராயல்டி செலுத்த வேண்டும். "அந்த ராயல்டியைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தியாளர்கள், ஒரு ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் லட்சக்கணக்கான கைபேசிகளை உற்பத்தி செய்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.   இதற்கான தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஎம்இஐ தரவுத்தளத்திலிருந்து அசல் தொலைபேசியின் அதே ஐ.எம்.இ.ஐ எண்ணைக் கொண்டு குளோன் செய்தால் கைபேசியின் தகவல் தரவுத்தளத்தில் கிடைக்கும். "இதன் விளைவாக சராசரி பயனருக்கு இதைப் புரிந்து கொள்ள வழியே இருக்காது" என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பிஎம் மொய்னுல் ஹுசைன். இவற்றைத் தடுக்க அவர் இரண்டு வகையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறார். முதலாவது சட்ட நடவடிக்கை. இரண்டாவது, தொழில்நுட்ப நடவடிக்கைகள். ஒரு ஃபோன் பயனரின் கைகளுக்கு வந்துவிட்டால், தொழில்நுட்ப நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை என்று அவர் சொல்கிறார். அதனால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். https://www.bbc.com/tamil/articles/c6pp1rn312do
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.