Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-library.jpg?resize=750,375&ssl=1

எரித்தும் அழிக்க முடியாத வடு : யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு.

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளன.

1981 மே 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில்; வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்னையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே31 மற்றும் ஜுன் 1 ஆம் திகதி இரவு; இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.

இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகும். இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் தீகக்கிரையாகி அழிந்தன.

இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்கள் மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அடைந்து கொண்டிருந்தபோது 1981 ஜுன் 1 இல் பகலில் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாத பொக்கிஷங்கள் என்பதை எரித்து விட முடியாது.

https://athavannews.com/2024/1385083

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240601-WA0028.jpg?resize=750,375&s

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு.

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது.

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG-20240601-WA0021.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0024.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0016.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0025.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0027.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0018.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0020.jpg?resize=600,338&s

IMG-20240601-WA0019.jpg?resize=600,338&s

https://athavannews.com/2024/1385202

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு.

யாழ் நுhலகம் எரிப்பு பற்றி கதைகளாகவும் கவிதைகளாகவும் @kandiah Thillaivinayagalingam  அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.

கடந்த வருடம் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போய் 

இதுதான் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாக எரியூட்டப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய நுhலகம் என்று சுற்றிக் காட்டினேன்.

உள்ளே போகும்போது வாசலில் காலணிகளைக் கழற்றிவிட்டே உள் நுழைய வேண்டும்.

ஒரு கோவிலுக்குள் போவதைவிட மயான அமைதி நிலவியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழ் நுhலகம் எரிப்பு பற்றி கதைகளாகவும் கவிதைகளாகவும் @kandiah Thillaivinayagalingam  அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.

கடந்த வருடம் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போய் 

இதுதான் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாக எரியூட்டப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய நுhலகம் என்று சுற்றிக் காட்டினேன்.

உள்ளே போகும்போது வாசலில் காலணிகளைக் கழற்றிவிட்டே உள் நுழைய வேண்டும்.

ஒரு கோவிலுக்குள் போவதைவிட மயான அமைதி நிலவியது.

தொட்டுக் கும்பிடும் புத்தகங்கள் இருந்த இடத்தையே எரிக்கும் மன நிலையில் சிங்களவன் இருந்திருக்கின்றான்  எனும் போது… உலகில் இப்படி ஒரு இனம் இருக்க வாய்ப்பே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.