Jump to content

போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்'.
தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது.
தாலாட்டு பாடமாட்டேன்
தாலாட்டு பாடமாட்டேன்
த+ழ பிள்ளை என்பிள்ளை
அவன் தலைசாய்த்து தூங்க
இது நேரம் இல்லை.
புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா.
இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி காலக்கண்ணாடியான இலக்கியம் ஆவணப்படுத்தப்படவும் பதிவாகின்றது. தொட்டில்கூட இல்லாத அவலம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.
எதிரியின் கொடிய குண்டுவீச்சிலே
தொட்டில் எரிந்தது
என் பிள்ளை விளையாடும்
முற்றத்தில் நின்ற
பந்தல் சரிந்தது.
உறங்கக்கூடாது என் மகன் என்றொரு
உண்மை புரிந்தது.(2)
தாலாட்டு எனும் சொல் எப்படி ஆனது? தால் என்றால் நாக்கு ஆட்டு என்றால் நாவினை ஆட்டி அசைத்தல் என்பர். ஆக தாலாட்டு என்பது நாட்டுப்புற பாடலாக இயல்பிலேயே தோன்றியதெனலாம். இதனை சங்கீதமே கற்காதோரும் பாடினர். போர்க்காலத்தில் இதனை புதிய விதமாக எழுச்சிக்கும், பரப்புரைக்கும் பயன்படுத்தினர்.
பி.சுசீலா பாடிய போர்க்காலப் பாடல்களில் 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு' தாலாட்டுப்பாடல் ஒரு காலப்பதிவு எனலாம். இப்பாடல் இப்போது கேட்டாலும் ஒரு காலத்தை காண்பிக்கும் கண்ணாடியாகவே தெரியும். இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தையும் ஒரு சரணத்தில் கவிஞர் பதிவாக்குகிறார். ஒரு கொடூரமான போர்க்காலத்திலே அதில் சிக்கியிருக்கும் தாயொருத்தி வரலாற்றோடு வாழ்வையும் தாலாட்டிலே சொல்லிக் கொடுக்கிறாள். புதுவை இரத்தினதுரை எழுதி தேவேந்திரன் இசையில் 'களத்தில் கேட்கும் கானங்கள்' ஒலிநாடாவில் வெளியான பாடல். இப்பாடல் காலத்தில் ஒலிநாடாக்களே பாவனையில் இருந்தன. முதற்சரணம்.
நாய்கள் குரைக்குது ராவினிலே: இந்தி
ராணுவம் போகுது வீதியிலே.
வாய்கள் திறக்கவும் கூடாதாம்: எங்கள்
வாசலில் தென்றலும் வீசாதாம்.
தீயினில் தாயகம் வேகுது பார்: எட்டு
திக்கிலும் ஓர்குரல் கேட்குது பார்.
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே நான்
பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே.
என்று தொடர்கின்றன. 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு, பொன்முடி சூடிய பூச்சரமே எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு' எனும் பல்லவி அக்காலத்தில் அதிக பிரபலம்.
புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலுக்கென யாருக்குமில்லா தனித்துவம் உண்டு. பார்வதி சிவபாதம் போலவே புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலையும் கேட்ட மாத்திரத்திலேயே பகுத்தறியலாம். 'தீயினில் எரியாத தீபங்களே' போன்ற பாடல்களைப் பாடியவர். இவர் பாடிய போர்க்கால தாலாட்டுப் பாடலொன்று.
பஞ்சவர்ணத் தொட்டிலிலே
பள்ளிகொள்ள வந்தவனே
வஞ்சமற்ற உன்மனதில்
வாழ்வதுதான் தெய்வமடா(2)
ஆராரோ கண்ணே ஆரிரரோ
ஆராரோ கண்ணே ஆரிரரோ.
முல்லை செல்லக்குட்டி என்ற முல்லைச்செல்வன் போர்க்காலத்தில் மக்கள் மனதில் நின்றுநிலைக்கும் பாடல்களை வார்த்தவர். 'ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்' போன்ற பாடல்களின் சொந்தக்காரர். இவர் இரண்டு போர்க்காலத் தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார். இப்பாடலும் போரில் தமிழ்த்தாய் பட்ட கொடூர வலியை சொல்லிற்று. முதலாவது சரணத்தில் புவனா இரத்தினசிங்கம் இப்படிப் பாடுகிறார்.
தாயகத்தில் அமைதியின்றி
தாய்மனசு தவிக்கையிலே
பூமியிலே நீ பிறந்தாய்
பொன்மகனே கண்மணியே!
நீதியென்ற பாதையிலே வீறுநடை போட்டிடடா
நீ பிறந்த தாய்நாட்டின்
வேதனையை நீக்கிடடா.
ஆராரோ கண்ணே ஆரிராரோ.
மேற்படி பாடலில் இனப்பற்றும், படை பலப்படுத்தல் பற்றி இரண்டாம் சரணத்தில் குறிப்பிடும் கவிஞர் மூன்றாவது சரணத்தில் நற்பழக்கத்தையும் சொல்லி வாழ்வியல் தத்துவத்தையும் வைத்தார்.
நெஞ்சமெனும் கோவிலிலே
நஞ்சை வைத்து வாழுகின்ற நீசர்களின் பாதையிலே
நீ மயங்கிப் போகாதே
மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை
மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா
ஆராரோ கண்ணே ஆரிரரோ
இப்பாடல்கள் இரண்டும் இடம்பெற்ற யாகராகங்கள் இசைநாடாவிற்கு இசையமைப்பாளர் கண்ணன் இசை வழங்கியிருந்தார். முல்லை செல்லக்குட்டி அவர்களின் இன்னுமொரு தாலாட்டுப் பாடலை இந்திராணி பாடியிருக்கிறார். இதோ அப்பாடல்.
கண்ணே கண்ணே கதைகேளு
அன்னை பெற்றாள் பெரும்பேறு
க+பு+லி பிறந்த இந்நாட்டிலே
கதிரவனே நீ பிறந்தாய்
எந்தன் வீட்டிலே.
என்பதே பல்லவி.
காலனவன் கலங்கிட
கண்டவர்கள் நடுங்கிட
கடற்படை கலமிங்கு சிதறுதடா
என்று தொடரும் முதற்சரணமும்,
பெற்றமண்ணை அந்நியர்க்கு
விற்றுவிட எண்ணுகின்ற
அத்தரின் தயவை என்றும் நாடாதே.
சத்தியத்தை காத்திடவே
நித்தம் களம் ஆடிவரும்
உத்தம புலியைவிட்டு ஓடாதே.
என இரண்டாம் சரணத்தோடு மூன்று சரணங்கள் கொண்டமைந்த பாடலிது.
அகநானூற்றிலும் தாலாட்டுப் பாடல்கள் உள. கொற்றங்கொற்றனாரின் தாலாட்டுப்பாடலை தமிழுலகில் அறியப்பட்ட முதற்தாலாட்டு பாடலென்பர். முன்னேயும் இருந்திருக்கலாம்.
பாடகி சுனந்தா தமிழ்ச்சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குதே' போன்ற பாடல்களைப் பாடியவர். போர்க்கால 'புயல் அடித்த தேசம்' இறுவட்டில் காந்தன் இசையில் சுனந்தா பாடிய பாடலும் போர்க்காலப் பாடல்களில் அதிகம் ஒலித்த பாடல். குஞ்சுரம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார். பாடலின் பெரும்பகுதி சுனந்தா குரலே.
செந்தமிழ் தூளியிலே சிரிக்கும் வெண்ணிலவே
செவ்வள்ளி கண்சிமிட்டி
துள்ளி குதிக்கும் பொன்மலரே!
நான் நினைத்த த+ம் வேண்டும் உனக்கு
நீ அதனை அரசாள
வீரம் இருக்கு.
அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா.
காந்தன் அவர்கள் இப்பாடலில் புல்லாங்குழலினை பயன்படுத்தி இருந்தார்.
வாணி ஜெயராம் அவர்கள் பிள்ளைக்காக போர்க்காலத்தில் பாடிய 'தலைவாரி பூச்சூடினேன்' பாடலை பாடியிருந்தார். அப்பாடல் தாலாட்டுப் பாடல் என வகைப்படுத்த முடியாதது.
போர்க்காலம் இலக்கியம் தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்துவமானது. அதன் வகைகளை ஆய்வாக்குதலின் தொடரே இப்பதிவாம்.
நன்றி
யோ-புரட்சி-போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்'.
தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது.
தாலாட்டு பாடமாட்டேன்
தாலாட்டு பாடமாட்டேன்
த+ழ பிள்ளை என்பிள்ளை
அவன் தலைசாய்த்து தூங்க
இது நேரம் இல்லை.
புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா.
இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி காலக்கண்ணாடியான இலக்கியம் ஆவணப்படுத்தப்படவும் பதிவாகின்றது. தொட்டில்கூட இல்லாத அவலம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.
எதிரியின் கொடிய குண்டுவீச்சிலே
தொட்டில் எரிந்தது
என் பிள்ளை விளையாடும்
முற்றத்தில் நின்ற
பந்தல் சரிந்தது.
உறங்கக்கூடாது என் மகன் என்றொரு
உண்மை புரிந்தது.(2)
தாலாட்டு எனும் சொல் எப்படி ஆனது? தால் என்றால் நாக்கு ஆட்டு என்றால் நாவினை ஆட்டி அசைத்தல் என்பர். ஆக தாலாட்டு என்பது நாட்டுப்புற பாடலாக இயல்பிலேயே தோன்றியதெனலாம். இதனை சங்கீதமே கற்காதோரும் பாடினர். போர்க்காலத்தில் இதனை புதிய விதமாக எழுச்சிக்கும், பரப்புரைக்கும் பயன்படுத்தினர்.
பி.சுசீலா பாடிய போர்க்காலப் பாடல்களில் 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு' தாலாட்டுப்பாடல் ஒரு காலப்பதிவு எனலாம். இப்பாடல் இப்போது கேட்டாலும் ஒரு காலத்தை காண்பிக்கும் கண்ணாடியாகவே தெரியும். இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தையும் ஒரு சரணத்தில் கவிஞர் பதிவாக்குகிறார். ஒரு கொடூரமான போர்க்காலத்திலே அதில் சிக்கியிருக்கும் தாயொருத்தி வரலாற்றோடு வாழ்வையும் தாலாட்டிலே சொல்லிக் கொடுக்கிறாள். புதுவை இரத்தினதுரை எழுதி தேவேந்திரன் இசையில் 'களத்தில் கேட்கும் கானங்கள்' ஒலிநாடாவில் வெளியான பாடல். இப்பாடல் காலத்தில் ஒலிநாடாக்களே பாவனையில் இருந்தன. முதற்சரணம்.
நாய்கள் குரைக்குது ராவினிலே: இந்தி
ராணுவம் போகுது வீதியிலே.
வாய்கள் திறக்கவும் கூடாதாம்: எங்கள்
வாசலில் தென்றலும் வீசாதாம்.
தீயினில் தாயகம் வேகுது பார்: எட்டு
திக்கிலும் ஓர்குரல் கேட்குது பார்.
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே நான்
பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே.
என்று தொடர்கின்றன. 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு, பொன்முடி சூடிய பூச்சரமே எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு' எனும் பல்லவி அக்காலத்தில் அதிக பிரபலம்.
புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலுக்கென யாருக்குமில்லா தனித்துவம் உண்டு. பார்வதி சிவபாதம் போலவே புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலையும் கேட்ட மாத்திரத்திலேயே பகுத்தறியலாம். 'தீயினில் எரியாத தீபங்களே' போன்ற பாடல்களைப் பாடியவர். இவர் பாடிய போர்க்கால தாலாட்டுப் பாடலொன்று.
பஞ்சவர்ணத் தொட்டிலிலே
பள்ளிகொள்ள வந்தவனே
வஞ்சமற்ற உன்மனதில்
வாழ்வதுதான் தெய்வமடா(2)
ஆராரோ கண்ணே ஆரிரரோ
ஆராரோ கண்ணே ஆரிரரோ.
முல்லை செல்லக்குட்டி என்ற முல்லைச்செல்வன் போர்க்காலத்தில் மக்கள் மனதில் நின்றுநிலைக்கும் பாடல்களை வார்த்தவர். 'ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்' போன்ற பாடல்களின் சொந்தக்காரர். இவர் இரண்டு போர்க்காலத் தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார். இப்பாடலும் போரில் தமிழ்த்தாய் பட்ட கொடூர வலியை சொல்லிற்று. முதலாவது சரணத்தில் புவனா இரத்தினசிங்கம் இப்படிப் பாடுகிறார்.
தாயகத்தில் அமைதியின்றி
தாய்மனசு தவிக்கையிலே
பூமியிலே நீ பிறந்தாய்
பொன்மகனே கண்மணியே!
நீதியென்ற பாதையிலே வீறுநடை போட்டிடடா
நீ பிறந்த தாய்நாட்டின்
வேதனையை நீக்கிடடா.
ஆராரோ கண்ணே ஆரிராரோ.
மேற்படி பாடலில் இனப்பற்றும், படை பலப்படுத்தல் பற்றி இரண்டாம் சரணத்தில் குறிப்பிடும் கவிஞர் மூன்றாவது சரணத்தில் நற்பழக்கத்தையும் சொல்லி வாழ்வியல் தத்துவத்தையும் வைத்தார்.
நெஞ்சமெனும் கோவிலிலே
நஞ்சை வைத்து வாழுகின்ற நீசர்களின் பாதையிலே
நீ மயங்கிப் போகாதே
மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை
மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா
ஆராரோ கண்ணே ஆரிரரோ
இப்பாடல்கள் இரண்டும் இடம்பெற்ற யாகராகங்கள் இசைநாடாவிற்கு இசையமைப்பாளர் கண்ணன் இசை வழங்கியிருந்தார். முல்லை செல்லக்குட்டி அவர்களின் இன்னுமொரு தாலாட்டுப் பாடலை இந்திராணி பாடியிருக்கிறார். இதோ அப்பாடல்.
கண்ணே கண்ணே கதைகேளு
அன்னை பெற்றாள் பெரும்பேறு
க+பு+லி பிறந்த இந்நாட்டிலே
கதிரவனே நீ பிறந்தாய்
எந்தன் வீட்டிலே.
என்பதே பல்லவி.
காலனவன் கலங்கிட
கண்டவர்கள் நடுங்கிட
கடற்படை கலமிங்கு சிதறுதடா
என்று தொடரும் முதற்சரணமும்,
பெற்றமண்ணை அந்நியர்க்கு
விற்றுவிட எண்ணுகின்ற
அத்தரின் தயவை என்றும் நாடாதே.
சத்தியத்தை காத்திடவே
நித்தம் களம் ஆடிவரும்
உத்தம புலியைவிட்டு ஓடாதே.
என இரண்டாம் சரணத்தோடு மூன்று சரணங்கள் கொண்டமைந்த பாடலிது.
அகநானூற்றிலும் தாலாட்டுப் பாடல்கள் உள. கொற்றங்கொற்றனாரின் தாலாட்டுப்பாடலை தமிழுலகில் அறியப்பட்ட முதற்தாலாட்டு பாடலென்பர். முன்னேயும் இருந்திருக்கலாம்.
பாடகி சுனந்தா தமிழ்ச்சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குதே' போன்ற பாடல்களைப் பாடியவர். போர்க்கால 'புயல் அடித்த தேசம்' இறுவட்டில் காந்தன் இசையில் சுனந்தா பாடிய பாடலும் போர்க்காலப் பாடல்களில் அதிகம் ஒலித்த பாடல். குஞ்சுரம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார். பாடலின் பெரும்பகுதி சுனந்தா குரலே.
செந்தமிழ் தூளியிலே சிரிக்கும் வெண்ணிலவே
செவ்வள்ளி கண்சிமிட்டி
துள்ளி குதிக்கும் பொன்மலரே!
நான் நினைத்த த+ம் வேண்டும் உனக்கு
நீ அதனை அரசாள
வீரம் இருக்கு.
அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா.
காந்தன் அவர்கள் இப்பாடலில் புல்லாங்குழலினை பயன்படுத்தி இருந்தார்.
வாணி ஜெயராம் அவர்கள் பிள்ளைக்காக போர்க்காலத்தில் பாடிய 'தலைவாரி பூச்சூடினேன்' பாடலை பாடியிருந்தார். அப்பாடல் தாலாட்டுப் பாடல் என வகைப்படுத்த முடியாதது.
போர்க்காலம் இலக்கியம் தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்துவமானது. அதன் வகைகளை ஆய்வாக்குதலின் தொடரே இப்பதிவாம்.
நன்றி
யோ-புரட்சி-

https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டியர் நன்னிச் சோழன்

யுகசாரதியின் ஈழத்தாய் சபதம் நூலிலும் பக்கம் 91  இல் தூயவரிப்புலியே நீ தூங்கிடு என்மகனே! கல்லறை மெத்தையிலே நீகண்துயில்வாய் மகனே! ஆராரோ1 ஆராரோ ! ....என்று தொடங்கும் பாடலொன்று உண்டு.  முடிந்தால் அதையும் தங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, S. Karunanandarajah said:

டியர் நன்னிச் சோழன்

யுகசாரதியின் ஈழத்தாய் சபதம் நூலிலும் பக்கம் 91  இல் தூயவரிப்புலியே நீ தூங்கிடு என்மகனே! கல்லறை மெத்தையிலே நீகண்துயில்வாய் மகனே! ஆராரோ1 ஆராரோ ! ....என்று தொடங்கும் பாடலொன்று உண்டு.  முடிந்தால் அதையும் தங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

 

 

நன்றி... சேர்த்துவிடுகிறேன்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும்.  சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
    • 01 JUL, 2024 | 12:03 PM   எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.  பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றினர்.  அத்துடன் அப்படகுகளில் நின்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்நிலையில், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.  கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். மீனவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187368
    • Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின.  இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187356
    • திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024   இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார்.   https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.