Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil-sad.jpg?resize=750,375&ssl=1

4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்.

முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார்.

முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கண்டனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்ட குழந்தையின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு அரச அதிகாரிகளிடமிருந்து விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான்கு வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளதுடன், நீதித்துறை செயல்முறையின் ஊடாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற துஷ்பிரயோகம் குழந்தைகளுக்கு நீடித்த பாதிப்பை எடுத்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இன்றைய சிறுவர்கள் இல்லாமல் நாளை இல்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் நலனுக்கே உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1386636

  • கருத்துக்கள உறவுகள்

 

4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல்

08 JUN, 2024 | 01:34 PM
image
 

4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர்  சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/185589

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

 

4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல்

08 JUN, 2024 | 01:34 PM
image
 

4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர்  சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/185589

 

அந்தச் சிறுமி உணவு உண்ண கிட்ட வரும் போது, மிருகத்தனமாக தாக்கும் காணொளியை பார்த்தேன். இவனுக்கு உடனடியாக கைதிகளே  தண்டனை கொடுத்தது தரமான சம்பவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GPUfb2NWYAAXo_a?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்டவருக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம்

12 JUN, 2024 | 08:19 PM
image
 

4 வயது சிறுமி தாக்கப்படும் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞருக்குப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோன் தலைமையில் 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டது.

இந்த சன்மானம் வழங்கும் நிகழ்வு இன்று (12) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

அண்மையில் வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தாக்குதலுக்குள்ளான  சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/185945

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.