Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 JUN, 2024 | 11:56 AM
image

(ஆர்.சேது­ராமன்)

2023 ஆரம்பம் முதல் 2024 மே மாதம் வரை உலகில் சுமார் 120 மில்­லியன் மக்கள் பல­வந்­த­மாக இடம்­பெ­யரச் செய்­யப்­பட்ட நிலையில் இருந்­தனர் என ஐ.நா வியா­ழக்­கி­ழமை (13) தெரி­வித்­துள்­ளது.

அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அறிக்­கை­யொன்றில் இத்­த­ர­வுகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அக­திகள், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­ளக ரீதி­யாக இடம்­பெ­யர்ந்தோர், நாடாற்ற நிலையில் உள்­ள­வர்கள் குறித்த  புள்­ளி­வி­ப­ரங்கள் இந்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

2023 இறு­தியில், துன்­பு­றுத்­தல்கள், சண்­டைகள், வன்­மு­றைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படு­மோ­ச­மான சட்டம் ஒழுங்கு மீறல்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக உலகில் 117.3 மில்­லியன் மக்கள் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர் என மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மே மாதம் 120 மில்­லியன் மக்கள் உல­க­ளா­விய ரீதியில் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர். இது 2022 ஆம் ஆண்டின் நிலை­மை­யை­விட 10 சத­வீதம் அதி­க­மாகும். இந்த எண்­ணிக்கை உலக மக்கள் தொகையில் 1.5 சத­வீ­த­மாகும் எனவும் அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பெரும் அள­வி­லான இடப்­பெ­யர்­வு­க­ளுக்கு மோதல்­களே கார­ண­மாக இருந்­தன என அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரி­வித்­துள்ளார்.  

"சர்­வ­தேச புவிசார் அர­சி­யலில் மாற்­ற­மொன்று ஏற்­பட்டால் தவிர, துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த எண்­ணிக்கை உயர்­வ­டையும் நிலை­யையே நான் காண்­கிறேன்" என அவர் கூறினார்.  

"தொடர்ச்­சி­யாக 12 ஆவது வரு­ட­மாக அதிகள் மற்றும் இடம்­பெ­யர்ந்­தோரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 114 மில்­லி­ய­னி­லி­ருந்து 120 மில்­லி­ய­னாக அது அதி­க­ரித்­துள்­ளது. இந்த எண்­ணிக்­கைக்குப் பின்னால் பல மனித துய­ரங்கள் உள்­ளன. ஒற்­றுமை மற்றும் ஒரு­மு­கப்­பட்ட செயற்­பா­டுகள் மூலமே இத்­து­ய­ரங்­களைப் போக்க முடியும்" எனவும் அவர் தெரி­வித்துள்ளார்.

2023 ஏப்­ரலில் ஆரம்­ப­மான சூடான் மோதல் கார­ண­மாக, உலகின் மிகப் பெரிய மனி­தா­பி­மான மற்றும் இடம்­பெ­யர்வு பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்­ட­தா­கவும் இதனால் 2023 டிமெம்பர் வரை 6 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தன்ர எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது தொடரும் காஸா யுத்தம் கார­ண­மாக 1.7 மில்­லியன் பேர், அதா­வது காஸா மக்­களில் 75 சத­வீ­த­மானோர் காஸா­வுக்குள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனவும் மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீ­னத்­துக்­கான ஐ.நா நிவா­ரண முக­வ­ரத்தின்  (UNRWA) தக­வ­லின்­படி, 60 இலட்சம் பலஸ்­தீ­னர்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனவும், அவர்­களில் சுமார் 1.6 மில்­லியன் பேர் காஸாவில் உள்­ளனர் எனவும் தெரி­வித்­துள்­ளது.

மியன்மார், ஆப்­கா­னிஸ்தான், உக்ரேன், கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசு, சோமா­லியா, ஹெய்ட்டி, சிரியா, ஆர்­மே­னியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் மோதல்கள் மற்றும் வன்­மு­றைகள் கார­ண­மாக மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது,

அக­திகள் மற்றும் குடி­யேற்­ற­வா­சி­களில் பெரும்­பா­லானோர் செல்­வந்த நாடு­க­ளையே நாடு­வ­தாக எண்­ணப்­ப­டு­கின்ற போதிலும், அவர்­களில் 75 சத­வீ­த­மானோர் குறைந்த மற்றும நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களில் அரைப்பங்கு 5 நாடுகளுக்கே கிடைத்துள்ளதாகவும் ஆகக்கூடுதலாக அமெரிக்காவுக்கு 1.2 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Displaced_2.jpg

https://www.virakesari.lk/article/186122

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.