Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 JUN, 2024 | 05:31 PM
image
 

இன்று சமூகத்தில் மீள முடியாத அழுத்தம் உருவெடுத்து மக்களைச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வறுமையில் வாடினாலும் வரிக்கு மேல் வரி விதிக்கும் வரி சுனாமி விதிப்பது நின்றபாடில்லை. சர்வதேச நாணய நிதியம் கூறியதாக வாடகை வீட்டிற்கும் வரி விதிக்கும் சூத்திரத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் சொல்வதை எல்லாம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. அரசாங்கம் வினை திறன் மிக்கதாக இருந்தால், மக்களுக்காக நல்லதொரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறான எதுவும் நடக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது. இந்த அரசாங்கம் வரி சுனாமியை மக்களின் தோள்களில் சுமத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 243 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கெஸ்பேவ, இரத்தினபிட்டிய ஆனந்த புதிய மாதிரி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 17 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. 

இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இறையாண்மையை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை. நல்ல நிலையிலிருந்து, நல்லதொரு கலந்துரையாடலுக்குச் சென்றால் மக்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் சரியாகச் செயல்படுத்த முடியும்.

மக்களின் அழுத்தத்தைக் குறைத்து, மக்களின் அசௌகரியங்களைக் குறைப்பதன் மூலம், ஒடுக்குமுறையான மக்கள் வாழ்க்கையை உருவாக்காமல் நல்ல ஆக்கப்பூர்வமான உடன்பாட்டை எட்ட முடியும். என்றாலும், இன்று பொம்மை அரசாங்கமே காணப்படுவதாகவும், இது இந்த யுகத்தின் அவலம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டிற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு தேவை. வங்குரோத்தான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், எமது நாடு இன்னுமொரு பாதாளத்தில் விழும். நாட்டுக்குப் பெற முடியுமான சிறந்ததை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் ஶ்ரீலங்காவை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக அமைந்து காணப்படுகிறது. என்றாலும் தரம் 6-13 வரை சிங்களத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தரம் 1-13 வரை ஆங்கிலம் மொழியில் கட்டாயப் பாடமாக இது அமைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாடசாலைகளில் நிலவிவரும் மனித வளம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தே இவையனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உலகின் புதிய போக்காக அமைந்து காணப்படும் பசுமைக் கல்வி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் பசுமையை மையமாகக் கொண்ட திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், பசுமையை மையமாகக் கொண்ட நிலையான அபிவிருத்தியில் கார்பனை வெளியேற்றும் நாடாக மாற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

பசுமை அபிவிருத்தி குறித்து பலர் பேசினாலும் அது களத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாக அமையவில்லை. சகல பாடசாலைகளையும் மையமாக வைத்து, பசுமை நிலைபேறு அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவது  மிகவும் பொருத்தமானதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/186298

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் எல்லாவிதமான வழிகளிலும் மக்களிடம் வசூல் அடிக்கப்பார்க்கின்றது.

எத்தனைபேர் வரி கட்டுவார்கள் என்பது ஒருபுறம் செல்ல; வாடகை வீடுகளிற்கு வரி கேட்டால் வீட்டு வாடகைகள் இன்னும் ஏறப்போகின்றதே.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது. இந்த அரசாங்கம் வரி சுனாமியை மக்களின் தோள்களில் சுமத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

5 hours ago, ஏராளன் said:

எமது நாட்டிற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு தேவை. வங்குரோத்தான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், எமது நாடு இன்னுமொரு பாதாளத்தில் விழும். நாட்டுக்குப் பெற முடியுமான சிறந்ததை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தருகின்ற கடனுக்கு அவர்கள் சொற்படி நடக்க வேண்டிய கட்டாய நிலையில் சிறிலங்கா அரசு உள்ளது. இதில் ரனில் தன்னால் தான் பொருளாதாரம் மேம்படுகிறது. தனக்கு வாக்களிக்கா விட்டால் நாடு திரும்ப கீழே சென்று விடுமாம்.
இருவரில் ஒருவராவது நாட்டை கொள்ளை அடித்த மகிந்த பற்றி வாயே திறப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடகை வரி விதிக்கப்படுவோர் குறித்து ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல்!

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2024 | 10:51 AM
image
 

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/186339

  • கருத்துக்கள உறவுகள்

448455157_866067335558240_33866606238876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய வரி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது; எதிர்க்கட்சித் தலைவர்

18 JUN, 2024 | 03:21 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

வரி செலுத்த வேண்டிய பல முன்னணி வியாபாரிகள் பலர் வரிக்கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் அவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு இலட்சத்தி 20ஆயிரம் கோடி ரூபா வரை வரி செலுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதனால் வரி அறவிடும் முறையை முறையாக மேற்கொண்டால் புதிய வரி கொள்கைகளை அறிமுகப்படுத்த தேவை ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,  

அரச வருமானத்தை அதிகரித்து ஒரு இலக்குக்கு கொண்டுவர வரி அதிகரிப்பு பிரேரணைகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரி செலுத்த முடியுமான பலர் வரி கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர். அவர்களை உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரி அறவிடும் நடவடிக்கையை மிகவும் செயற்திறமையாகவும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். அதனை டிஜிடல் மயமாக்க வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துபவர்களை முறையாக இனம் கண்டு அதன் நடவடிக்கைகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியும்.

ஆனால் கடந்த வருடம் மாத்திரம் ஒரு கோடிக்கும் அதிக வரி செலுத்த வேண்டிய முன்னணி வியாபாரிகள் ஒரு இலட்சம் பேருக்கு வரி சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரி சலுகை வழங்காமல் இருந்தால் புதிய வரி அறிமுகப்படுத்த வேவைப்பாடு இருக்காது.

புதிய வரி மூலம் அரசாங்கம் 60ஆயிரம் கோடி இலாபத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு இலட்சத்தி 20ஆயிரம் கோடி ரூபா வரி செலுத்துவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் வரி செலுத்தாமல் இருப்பது, வரி செலுத்துவதை தவிர்த்து வருவது மற்றும் வரி நிவாரணம் வழங்குதல் இவற்றை சரி செய்துகொண்டால், அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் வரி தேவைப்படாது என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் ஒரு கோடி ரூபாவை தாண்டிய 4200பேர் வரி செலுத்துவதை தவிர்த்துள்ளனர். அவர்களின் வரிகளை அறவிட்டுக்கொள்ள ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என கேட்கிறேன்.

அதேபோன்று சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 23 பேர்களில் 5பேர் வரி செலுத்துவதை தவிர்த்து வரும் சந்தர்ப்பத்தில் அவர்களின் சாராய விற்பனை அனுமதி மத்திரத்தை இரத்து செய்யக்கூட அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. இவர்கள் 700கோடி ரூபா வரி செலுத்துவதை தவிர்த்துள்ளனர். இவர்களின் அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்தால், நிச்சயமாக இவர்கள் வரி செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

எனவே வரி செலுத்துவதை தவிர்த்து வருபவர்களிடமிருந்து முறையாக வரியை அறவிட்டுக்கொள்ளவும் வரி செலுத்த தகுதி இருந்தும் அவர்கள் இதுவரை வரி கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் இருப்பவர்களை வரி கொள்கைக்குள் உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு தேவையான வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

அதனை ஏன் அரசாங்கத்தினால் செய்ய முடியாது என்பதை நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/186372

  • கருத்துக்கள உறவுகள்

laxman-fe.webp?resize=570,362&ssl=1

உத்தேச வாடகை வரி: அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே IMF இன் நிபந்தனை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”
வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாபதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை.
உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவதுடன். சாதாரன வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது என ஜனாதிபதி இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார் ” இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1388703

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.