Jump to content

கொக்கிளாய் இராணுவமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த தெரிந்தவர்களின் தென்னந்தோப்புகளில் குடியேறினர்.அத்தோடு முல்லைத்தீவு ,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,இன்னும் எங்கெங்கெல்லாமோ சென்று வாழ முற்பட்டனர் அகதிகளான மக்கள்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இதயபூமியை சிங்களமயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த எண்ணி இராணுவம் கொக்கிளாய்ப்பாடசாலையை இராணுவமுகாமாகமாற்றி முல்லை திருகோணமலை இராணுவப்போக்குவரத்திற்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் பெரும் பலத்தை ஏற்படுத்தியது. கொக்கிளாய் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தவிடுதலைப்புலிகள் அதனைத்தாக்கியழிக்க முடிவெடுத்தனர்.இத்தாக்குதலுக்கு மக்களும் பலவழிகளில் புலிகளுக்கு உதவினர். 1985.2.13 அன்று அதிகாலைநேரம் கொக்கிளாய் முகாமின்மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். நேர்த்தியான வேவின் பின் மணலாற்றுக்காட்டின்வழியே சென்ற தாக்குதலணி துணிச்சலுடன் முகாமைப் பலமாகத்தாக்கியது.இத்தாக்குதலை எதிர்பார்த்திராத இராணுவம் நிலைகுலைந்துபோனது.இத்தாக்குதலே தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமுகாம்மீதான முதலாவது தாக்குதலாகும்.இதன்போது 16 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்கள்.அவர்களிற் பலரின் வித்துடல்களை மீட்கமுடியவில்லை.அக்காலப்பகுதியில் இவ்வீரச்சாவுகள் விடிவுக்கு முந்திய மரணங்களாக மக்களால் நினைவுகொள்ளப்பட்டன.இத்தாக்குதலால் இலங்கை இராணுவம் இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லெப்டினன்ட் சைமன்
கனகரத்தினம் ரஞ்சன்
பொத்துவில், அம்பாறை
வீரப்பிறப்பு:20.09.1956

லெப்டினன்ட் பழசு
முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:10.10.1963

வீரவேங்கை கெனடி
கனகசபை வில்வராசா
கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:19.04.1961

வீரவேங்கை காந்தரூபன்
பொன்னையா சந்திரகுமார்
கல்லடி, மட்டக்கள்ப்பு.
வீரப்பிறப்பு:30.07.1964

வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)
சண்முகராசா பிரபாகரன்
லிங்கநகர், திருகோணமலை.
வீரப்பிறப்பு:26.01.1963

வீரவேங்கை காந்தி
கந்தையா பரமேஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரப்பிறப்பு:17.08.1956

வீரவேங்கை ரவி
நமசிவாயம் தர்மராஜா
செம்மலை, அளம்பில், மணலாறு.
வீரப்பிறப்பு:02.10.1964

வீரவேங்கை வேதா
கனகு இராசநாயகம்
சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி
வீரப்பிறப்பு:30.10.1959

வீரவேங்கை ரஞ்சன்மாமா
பொன்னையா சண்முகநாதன்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.
வீரப்பிறப்பு:16.10.1951

வீரவேங்கை காத்தான்
துரைச்சாமி சிறீமுருகன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரப்பிறப்பு:05.03.1961

வீரவேங்கை மயூரன்
குணசிங்கராசா துவாரகன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:02.02.1967

வீரவேங்கை சொனி
சதாசிவம் அன்ரனி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:03.01.1964

வீரவேங்கை தனபாலன்
தியாகராசா வரேந்திரன்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:30.09.1965

வீரவேங்கை சங்கரி
செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:01.06.1962

வீரவேங்கை மகான்
கதிரவேலு செல்வராசா
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:22.05.1962

வீரவேங்கை நிமால்
கந்தையா ஜெயந்தன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:22.03.1966

 

http://irruppu.com/2021/02/13/கொக்கிளாய்-இராணுவமுகாம்/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.