-
Tell a friend
-
Topics
-
Posts
-
இளநிக்கு ஒரு தமிழ்ப் பத்திரிகை தேங்காய் தண்ணீர் என்பதே அசௌகாரியமாய் இருக்கு......மேலும் தண்ணீருக்கு மீற்றர் போடாமல் 150 மில்லி 200 மில்லி என்று போட்டாலே குடிமக்கள் புரிந்து கொள்வார்கள் ........! 😂
-
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 24 பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விடயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Cycle Rituals), கருவுறுதல் தொடங்கி இறப்பு வரை உள்ள பல சடங்குகள் ஆகும். இவற்றைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of Passage) என்றும் அழைப்பர். இவை அனைத்தும் எமது முன்னோர்கள் பாரம்பரியமாக எமக்கு தந்தவை, சில சில மாற்றங்களுடன் இன்றும் தொடர்பவை. பொதுவாக, மனிதன் தோன்றிய பொழுதே சடங்குகளும் தோன்றியது எனலாம். உதாரணமாக அன்று வேட்டைக்கு போகு முன் ஒரு வேட்டை சடங்கு நிகழ்ந்தன என இன்று நாம் கல்வெட்டுக்கள் மூலமும் பாடல்கள் மூலமும் அறிகிறோம். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட மனிதன் வேட்டையில் விலங்குகள் அகப்பட வேண்டும் என்பதற்காக வேட்டைக்குச் செல்லும் முன்பு விலங்கு நடனம் ஆடினார்கள் என அறிகிறோம். சடங்குகள் சில நோக்கங்களுக்காக, சில நம்பிக்கை அடிப்படையில் அன்று உருவாகின. மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை, ஏன் அவன் இறந்த பின் கூட, அவனை நினைவு கூற, பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் அந்த மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறுகின்றன. உதாரணமாக - பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு இவைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பூப்பு சடங்கு பெண்களுக்கு மாத்திரமே நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்களில் 12 - 18 வயதுகளில் நிகழலாம். அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும், அதை தாம் வாழும் சமூகத்திற்கு உரைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலை அல்லது ஒருவர் தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல் என்று கூறலாம். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. எனினும் பெண்ணே கர்ப்பம் தரிப்பதால், அதற்கே முக்கியம் கொடுத்து சடங்கு கொண்டாட்டத்தை கையாண்டனர் எனலாம் அல்லது ஆணின் பங்கை அல்லது ஆண் பக்குவமடையும் நிலையை அல்லது பெண்களைப் போல வெளிப்படையாக இல்லாததால் அன்று சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறலாம். மனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. மேலும், புறநானுறு 312 இல் பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர் கூறுவது போல “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே", என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்ததாலும் ,பெண் அந்த கடமைக்கு தயார் என வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக, எனவே பெண்களுக்கு மட்டுமே பூப்பு சடங்கு கொண்டாடப் பட்டு , அது வாழையடி வாழையாக இன்றும் தொடர்கிறது என நம்புகிறேன். இந்த வரிசையில் முதலில் வருவது "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற" என்று குறள் 61 இல் வள்ளுவர் கூறிய மக்கட் செல்வமாகும். கிடைத்தற்கு அரிய இம் மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும் சடங்குகளே பிறப்புச் சடங்குகள் ஆகும். இந்த வரிசையில் முதலில் வருவது கருவுறுதல் ஆகும். எனவே அந்த தமது வாரிசின் வருகையை, கருவுற்ற நல்ல செய்தியை, வலை காப்புடன் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். இது பெரும்பாலும் கருவுற்ற 7 அல்லது 9 ஆம் மாதத்தில், செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய கண்ணாடி வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர். வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு என்றும் சிலர் சொல்லுவர். மேலும் அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத் தானாம். வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும். அதை தொடர்ந்து பிள்ளை பிறந்ததும் வருவது சேனை தொடுதலும், தொட்டிலிடுதலும், பெயர் இடுதலும் ஆகும். சேய்+நெய்+தொடுதல் என்றால், குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத் தொட்டு வைக்கும் வழக்கம் ஆகும். சேனை என்பதைக் ‘குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ உணவு’ என்கிறது தமிழ் அகராதி. குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும் என்பதால், பொதுவாக பலராலும் குறிப்பாக நாட்டுப்புற மக்களாலும் இது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழரின் தாலாட்டுப் பாடல்களில் இது குறித்த செய்திகளை நாம் தாராளமாக காணலாம். "பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே." அடுத்து, குழந்தைகள் தொடர்பான சடங்குகளில், சிறப்பிடம் பெறுவது சோறு தீத்துதல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மற்றும் ஏடு தொடக்குதல் ஆகும். பிள்ளைக்குச் சோறு தீத்துவதிலே பல்வேறு நடைமுறைகள் இடத்துக்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் காணப்படுகின்றன. தாய்ப்பாலுடன் மட்டும் வளர்ந்த பிள்ளைக்கு மற்றைய உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கு முன்னர் முதல் தடவையாக பிள்ளைக்கு சோறு தீற்றுதல் நிகழ்ச்சி பொதுவாக ஏழு மாதமாகையில் நடை பெறுகிறது. சிலர் ஆலயத்திற்கு போயும் சிலர் தமது வீட்டிலேயும் இதை நடத்துவர். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் மாமனோ, தகப்பனோ,பேரனோ சிறிதளவு அமுதினை மசித்து குழந்தைக்குத் தீத்தி விடுவர். சில குடும்பங்களிலே உணவை ஒரு பெரிய தட்டிலே போட்டு பிள்ளையே தனது கையால் எடுத்துச் சாப்பிட விடுவர். இதனை 'அள்ளித் தின்ன விடுதல்' என்று அழைப்பர். சில பிள்ளைகள் சாப்பாட்டை எடுத்து வாயிலே வைக்கும். சாப்பாட்டைப் (சோறு) பிள்ளை வாயிலே வைக்காது விட்டால் தாயார் சிறிதளவு எடுத்துத் 'தீத்தி' விடுவார்.'தீத்துதல்' என்ற சொல் சில இடங்களிலே 'ஊட்டுதல்' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் நாட்டிலே 'ஊட்டுதல்' என்ற சொல் வழக்காற்றில் உண்டு. யாழ்ப்பாணத்து பழக்க முறையில், சோறு 'தீத்தும்' சடங்கிற்குப் பின்னர் பல்லுக் கொழுக் கட்டை சடங்கு நடைபெறும். இது குழந்தைக்குப் பல்லுத் தோன்றியதும் நடைபெறும் சடங்காகும். குழந்தையை பாயில் அல்லது ஏதாவது விரிப்பு ஒன்றில் இருத்தி, குழந்தையின் தலையின் மேல் வெள்ளைத் துணியொன்றை போர்த்து, அவித்த பல்லு கொழுக்கட்டைகளைச் சுளகில் அல்லது வெள்ளித்தட்டு அல்லது 'தாம்பாளம்' போன்ற ஒன்றில் எடுத்து வந்து, பொதுவாக தாய்மாமன் குழந்தையின் தலையிலே கொட்டுவார். தமிழர் பண்பாட்டில் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் ஏடு தொடக்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. யாழ்ப்பாணச் சமூகம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது, கொடுக்கிறது என்பதை இந்த நிகழ்வு இன்று வரை சிறப்பாக தொடர்வதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஏடுதொடக்கல் நிகழ்வு பெரும்பாலும் ஆலயங்களில், பாடசாலையில், பொது இடங்களில் அல்லது வீட்டில் நடைபெறும். இங்கு குழந்தைகளின் விரலைப்பிடித்து ஆனா ஆவன்னா என அரிசியில் எழுதப்பழக்குவர். அடுத்து வருவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு நடத்துவார்கள். பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது. உதாரணமாக, சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக் காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார் என அறிகிறேன். இப்படி தமிழர் காது குத்தி காதணிகள் அணிவதை உறுதி படுத்துவது போல, தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது என "காதொளிரும் குண்டலமும் கைக்குவளை -யாபதியும்,கருணை மார்பின் " என்று கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் கூறுகிறது. வழிவழி வந்த இந்த பழக்கம் பின்னாளில் ஒரு சடங்காகவே மாறிவிட்டது. அதில் தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. உறவுகளில் அழிக்க முடியாத உறவு "தாய்மாமன்" உறவு என்பர். இங்கு இந்த உறவு தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். அப்படியான காது குத்தும் நாட்டுப் பாடல் ஒன்று உதாரணமாக கீழே தரப்பட்டு உள்ளது: "கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா காதுகுத்தப் போறாகன்னு கிண்ணியில் சந்தனமும் கிளிமூக்கு வெத்தலையும் தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு கொண்டு வந்தார் தாய்மாமன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 25 தொடரும் -
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 11 இந்தியாவினதோ அல்லது தமிழ் நாட்டினதோ தொல் பொருளியல் துறையினர் ஒரு முழுமையான முறையான எந்த ஆய்வும் பூம்புகார் பற்றி இது வரை செய்யவில்லை. ஒரு மிக சிறிய ஆய்வே இதுவரை எவராலும் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் [Graham Hancock] தற்போதய பூம்புகாரின் கிழக்கே கடலுக் கடியில் செய்த ஆய்வு, கரையில் இருந்து 5 கில்லோ மீற்றர் தூரத்தில், 23 மீற்றர் ஆழத்தில் குதிரை லாட வடிவத்தில் அமைந்த ஒரு கட்டுமானமும் அதன் பக்கத்தில் அமைந்த இன்னும் ஒரு கட்டுமானத்துடன் மட்டுமே நின்று விட்டது. ஆனால் அதே பகுதியில் 100 மீற்றர் ஆழத்திற்கு மேல் 20 இற்கு மேற்பட்ட பெரிய கட்டுமானம் அங்கு இருப்பதாக அறிந்தது பரபரப்பூட்டுகிறதாக உள்ளது. அவை ஒரு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதே தவிர சுழியோடியால் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அவை ஒரு அழிந்த நாகரிகத்தின் பகுதியா?என்பதை கூடுதலான, முழுமையான ஆய்வு மூலம் நாம் அறியலாம். அது மட்டும் அல்ல குமரி கண்டம் என்று ஒன்று உண்மையில் இருந்ததா அல்லது அது ஒரு கட்டு கதையா என்பதற்கும் இது விடை கொடுக்கும். எனவே, இன்றைய நிலையில், குமரிக் கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. கன்னியகுமரி பகுதியில் கடலுக்கடியில் ஒலிச்சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக ஒரு ஆராச்சி உரிமை கோருகிறது. ஆகவே நாம் மீண்டும் இந்த வேலை திட்டத்தை தொடங்க வேண்டும். அதன் மூலம் பல சாட்சிகளை முன் நிறுத்தி உண்மையை உலகத்திற்கு எடுத்து கூறலாம். குமரி கண்டம் உண்மையா பொய்யா என்பதை. நிரூபிக்க அல்லது சான்று பகிர, பண்டைய பேச்சு, கவிதை தவிர எம்மிடம் உருப்படியான வேறு அறிவியல் சாட்சிகள் இன்னும் இல்லை. எவ்வாறாயினும் குமரி கண்டத்தை நம்புபவர்கள் சுட்டி காட்டும் காரணங்களை கீழே ஒரு பட்டியலாகத் தருகிறேன். 1) மடகாஸ்கர் தீவிலும் [Madagascar Islands], இந்தியாவிலும் வாழ்கிற விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இடையில் ஒரு பெரும் ஒத்த தன்மை [great similarity] காணப்பட்டது. அது மட்டும் அல்ல, அந்த ஒற்றுமைகள், மடகாஸ்கர் தீவிற்கு அருகில் இருக்கும் ஆப்ரிக்காவுடன் ஒத்து போகாமல், 2,500 மைல் தூரத்தில் இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போனது. 2) அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் மற்றும் ஆப்ரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல். [The language of aboriginal Australians & aboriginal Africans have some similarity / Connection with Tamil] இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம். உதாரணமாக அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள். இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள். 4) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள். 5) பூம்புகார் என்று பெயர் பெற்ற, மாபெரும் நகரமான காவேரிப்பூம்பட்டினம் கடலினுள் மூழ்கிய வரலாறு. 6] அவ்வாறே தனுஷ்கோடியின் [Dhanushkodi] ஒரு பகுதி கடலினுள் மூழ்கிய வரலாறு. இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை, வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது. 7) தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ [Sheep grazing rock] என்று பெயரிட்டு அழைக்கின்றனர். காரணம் என்னவெனில் ஒரு காலம் அந்த பாறை இருந்த இடம் தரையாக இருந்தது என்றும், அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்தனர் என்றும் கூறுகின்றனர். 8] மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களும். 9] ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் (Graham Hancock)கின் ஆராச்சி முடிவு. 10] கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒலிச்சமிக்ஞை [sound signal] அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக கண்டறியப் பட்டது இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுவோம் 1] அறிவியல் ஆராய்ச்சிகள் குமரி கண்ட கொள்கையை ஆதரிக்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை. புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற குமரி கண்டம் / இலெமூரிய புனைக்கோள் கைவிடப்பட்டாலும், அறிவியல் முடிந்த முடிவாக தேவையான சாட்சிகளை இன்னும் முன் வைக்கவில்லை. ஆகவே முறையான ஆய்வுகள், கடல் அடி பரிசோதனைகள் பூம்புகார் கடல் பகுதியிலும் அதற்கு அண்டிய பகுதியிலும் செய்யப்பட்டு, அங்கே புதையுண்டு கிடக்கும் மனிதனால் செய்யப்பட்ட கட்டு மானங்கள், பொருட்கள் மற்றும் ஏதாவது முக்கிய சாட்சிகள், அது ஒரு மூழ்கிய நிலப்பகுதி என காட்டக் கூடியதாக அல்லது நிராகரிக்க கூடியதாக அமைந்தால், மேலும் அவைகளின் காலம் சரியாக கணக்கிடப்பட்டால் அன்றி நாம் ஒரு அறிவியல் முடிவிற்கு வரமுடியாது. அப்படியான ஒரு U வடிவ மனிதன் செய்ததாக கருதப்படும் ஒரு கட்டு மானம் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் பின் எந்தவொரு ஆய்வும் அங்கு இதுவரை செய்யப் படவில்லை. அப்படி மேலும் பல ஆய்வுகள் செய்யும் வரை, யாரும் ஒருவர் ஏதாவது ஒரு உலகத்தின் மூலையில் இருந்து இதைப் பற்றி கதைத்துக் கொண்டே இருப்பர். 2] இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரிகங்கள் சுமேரியாவிலோ அல்லது சிந்து சமவெளியிலோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரிகங்கள் இருந்தனவா? அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் ? போன்றவற்றிற்கு விடை காண, இன்னும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் தொடங்கவில்லை. இது ஒரு குறைபாடே? 3] தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டத்தைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா? உண்மை வெளிப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்? திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த, ரிமோட் சென்சிங் துறையில் உள்ள இரு பேராசியர்கள் [Professor of Eminence Somasundaram Ramasamy and colleague J. Saravanavel, at the Department of Remote Sensing at Bharathidasan University in Tiruchirappalli], Current Science 25 June 2019 அன்று ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையை, GEBCO [The General Bathymetric Chart of the Oceans] என்ற இணையதளத்தில் கடல் கீழ் தரை மட்ட செயற்கைகோள் படங்கள் மற்றும் Geographical software ஐ பயன்படுத்தி, கடலுக் கடியில் நதிகள் ஓடிய தடங்களை பற்றி ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி வைகை நதி பற்றிய குறிப்பு கிடைத்தது. தற்போதுள்ள முகத்துவரங்களிலிருந்து கிழக்கு பக்கமாக பாய்ந்த வைகை நதி, ராமேஸ்வரத்திற்கு வடக்காக சென்று பிறகு தெற்கு நோக்கி திரும்பியுள்ளது. அதன்பின் அங்கிருந்து 400 கிமீ தூரம் ஓடி இருக்கிறது. அதாவது இலங்கையின் தென் பக்கம் இருக்கும் காலி வரை நீட்சி காணப்படுவதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றது. அந்த இடம் தான் இப்ப மன்னார் வளைகுடாவாக இருக்குது. கடலுக் கடியில் தரை மட்டத்தை காட்டும் செயற்கைகோள் படங்களில் தாமிரபரணி நதி ஓடிய பள்ளங்களும் தெளிவாக இருக்கு. இந்த இடம் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாக கடல் சீற்றத்தில் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் லெமுரியா கண்டம் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிகிறது . கடலின் அடிப் பகுதி தரையை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்த போது, அதில் ராமேஸ்வரத்திற்கு கிழக்கே இருந்து இலங்கையின் காலிவரை ஒரு பெரிய பள்ளத்தாக்கு தெளிவாக தெரிகிறது. தற்போதைய மன்னார் வளைகுடாவில் இருக்கும் கடல்பகுதியில் தான் இந்தப் பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கில் வைகைநதி ஓடிய தடம் தெளிவாக காணப்படுகிறது. அது போல தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்திலிருந்தும் ஒரு நீட்சி காணப்படுகிறது . அந்த பள்ளத்தாக்கு ஒரு இடத்தில் கடலுக்கு அடியில் வைகை நதியோடு இணைகிற காட்சி தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது. இந்த நதிகளின் பாதைக்கு மேற்கே மற்றுமொரு நதிப்பள்ளத்தாக்கு தெரிகிறது. இதுவே இலக்கியங்களில் கூறப்படும் பஃறுளி ஆறாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது? இந்த நிலப்பரப்பு மேற்கில் மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியாவரை பறந்து விரிந்து இருந்திருக்கிறதென சொல்லப்பட்டாலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுமார் 3 லட்சம் சதுரகிலோமீட்டர் அளவுக்குத்தான் தெளிவாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்படுகிறது [References; Ramasamy, S. M. & Saravanavel, J. Drowned valleys of Vaigai and Tamiraparani rivers in the Gulf of Mannar region, India. Current. Science. (2019) Article]. லெமுரியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் கோட்பாடு. கண்டப்பெயர்ச்சி [continental drift] அதை எதிர்த்தது மட்டும் அல்ல, குளோமர் சேலஞ்சர் [Glomar Challenger / குளோமர் சேலஞ்சர் ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் கடல்சார் மற்றும் கடல் புவியியல் ஆய்வுகளுக்கான அறிவியல் துளையிடும் கப்பல் ஆகும்] ஆய்வு அறிவியல் ரீதியாக 'கண்டம் சறுக்கல்லை' உறுதிப்படுத்தியது. மற்றொரு அறிவியல் ஆய்வின்படி, தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு தரைப்பாலம் இருந்துள்ளது உள்ளது, ஆனால் குமரி கண்டம் என கருதப்படும் பெரிய கண்டம் அல்ல. உதாரணமாக தமிழ்ச் சங்கங்கள் என்று ஒன்று 10,000 ஆண்டுகளாக இருந்திருந்தால் அதற்கு முன்னரும் ஓரளவு முன்னேறிய நாகரிகம் அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் அப்படி இருந்ததாக இதுவரை விஞ்ஞான, தொல்பொருள் தரவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. நாயே 12,000 ஆண்டுகளுக்கு முன்புதான் வீட்டு மிருகமாக வளர்க்கப்பட்டது (domesticated (hunter / gatherer society) / வேட்டையாடி சேகரிக்கும் சமூகம்) என அறிகிறோம். அதற்கு முன் எப்படி ஒரு மேம்பட்ட நாகரிகம் இருந்தது, அதுவும் அறிவியலால் கண்டுபிடிக்கப் படாமல்? சங்க காலக் கவிதைகளில் மூழ்கிய "கண்டத்தை" சுட்டிக்காட்டும் ஒரு துப்பு கூட அங்கு நம்மால் காண முடியாது - மாறாக அவை மூழ்கிய பகுதிகள் மற்றும் சுனாமி பற்றி மட்டுமே பேசுகின்றன. இதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டனர் என நம்புகிறேன் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் ஒருவேளை மாவட்டங்களின் அளவைப் போன்றது; இது கடலுக்கு அடியில், குமரியில் மனிதர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் பற்றி பேசுகிறது நிலங்கள் கடல்களால் சூழப்பட்டதாகவும், அதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினார் எனவும், அவர்கள் மாற்று நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எனவும் கூறுகிறது. அவ்வளவு தான். [இந்த சங்க இலக்கியம் (கிமு 600க்கு முற்பட்டது)] பாண்டியர் செப்புத் தகடுகளிலிருந்து ~700 CE: "உயரமான கடல் அலையைத் தடுக்க பாண்டியன் ஈட்டியை எறிந்தான்" என்றும் ~ 1000 CE: "பாண்டிய மன்னன் வானத்தைப் போல உயரமான அலைகளை நிறுத்தினான்" என்றும் மிகைப்படுத்திய தகவல் அறிகிறோம், குமரிக்குக் கீழே அது ஒரு ஒரு கண்டம் என பண்டைய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் எங்கும் காணவில்லை. மாறாக 2 ஆறுகள் கொண்ட சில நிலங்கள் (மாவட்டங்கள்) மற்றும் கடல்களால் சூழப்பட்ட ஒரு கரையோரம் என்று மட்டும் அங்கு குறிப்பிடுகிறார்கள். எனவே தவறான குமரிக் கண்டம் என்ற விளக்கம் எங்கிருந்து தொடங்கியது? ஐரோப்பிய விலங்கியல் வல்லுநர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா இடையே ஒரு நீரில் மூழ்கிய நில இணைப்பு இருப்பதாக கருதினார். ஏனென்றால் மடகாஸ்கர் மற்றும் தென் இந்தியாவில் ஒரே வகை லெமூர் என்னும் புதை படிவம் இருப்பதை கண்டறிந்தார். அதை ஒரு கோட்பாடாக பதிவு செய்தார். அந்த நிலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார். அதை தமிழ் ஆர்வலர் சிலர், சங்க இலக்கியத்தில் கூறிய குமரிக் கோடுவை [குமரிக் கோடு என்பதற்கு குமரிமலை என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் முதல் போ.வே.சோமசுந்தரனார் வரை (உ. வே.சா .உட்பட ) அனைவரும் கூறுகின்றனர். ஆனால் தென் தமிழகத்தைப் பொறுத்த வரை '-கோடு 'என்னும் பின்னொட்டு இடம் பெறும் ஊர்களெல்லாம் நீர்க்கரைகளில் அமைந்துள்ளன. உதாரணமாக: அதங்கோடு [தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும்], புதாங்கோடு [சேர நாட்டில்], திருவிதாங்கோடு [கன்னியாகுமரி மாவட்டம்], கோழிக்கோடு [கேரள மாநிலத்தில்], அழிக்கோடு [கேரளம்], காரிக்கோடு [கேரளா, இடுக்கி மாவட்டம் தொடுபுழா] இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.] குமரிக் கண்டம் என, லெமுரியாவை உரிமை கொண்டாடினர். என்றாலும் லெமூரியா கருதுகோள், கண்டப்பெயர்ச்சி கோட்பாடு அறிமுகம் ஆகிய பின் வழக்கற்றுப் போனது. இந்தியச் சூழலில், பனி உருகுவதால் ஏற்படும் ஒப்பீட்டளவில் ஆழமற்ற நீரின் பகுதியின் கீழ் மூழ்கியிருக்கும் ஒரு பகுதியின் படங்கள் சில முக்கிய கண்டுபிடிப்புககளுடன் - மரபணு, தொல்பொருள் மற்றும் கடல் படுக்கை ஆய்வுகள் - இணைக்கப்பட்டுள்ளன. அவை சுய விளக்கம் தரும் என்று நம்புகிறேன். எனவே இன்று லெமுரியா அல்லது குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு கற்பனையான நிலப்பரப்பு / கண்டமாகும் என ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதே உண்மையாகும். பண்டைய நாகரிகங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், மறைநூல் வல்லுநர்கள் [அமானுஷ்ய வல்லுநர்கள்] மற்றும் அனைத்து வகையான எழுத்தாளர்களும் [believers in ancient civilizations, occultists and writers of all sorts] இதைப் பற்றி எழுதத் தொடங்கியபோது இந்த கற்பனையான நிலப்பரப்பு கல்வி வட்டங்களுக்கு வெளியே அறியப்பட்டு பிரபலமானது. அவ்வளவுதான். இருப்பினும், 1950 களின் முற்பகுதியில், கண்டப்பெயர்ச்சி [கான்டினென்டல் டிரிஃப்ட் / continental drift] கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இன்று இது புராணங்களாக மாறிவிட்டன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 12 தொடரும் பி கு : படம் 03 :: மடகாஸ்கர் மூதாட்டி படம் 04 : ஆஸ்திரேலிய பழங்குடி சிறுமி படம் 05 : கிராமப்புற தமிழ் சிறுமி -
🤣...... அப்ப பஸ்ஸூக்குள்ள இருந்த சிலர் பின்னர் ஒரு நாளில் இப்படி எதிர்க்கட்சி சாட்சிகளாக மாறுவார்கள் என்ற அறிவு அப்ப இருக்கவில்லை......... ஒருவருக்கு பெண் நிச்சயமானது. என் நண்பன் ஒருவனுக்கு அந்தப் பெண் உறவினர். பெண் வீட்டார் பேசிய மாப்பிள்ளை எப்படி என்று நண்பனை விசாரித்தனர். 'அந்த ஆளுக்கு அக்காவை கட்டிக் கொடுப்பதை விட நீங்களே அக்காவை கிணத்துக்குள்ளே தள்ளி விடலாம்..........' என்ற மாதிரி நண்பன் நன்னடத்தை சான்றிதழ் ஒன்று கொடுத்தான். கல்யாணம் நின்று போனது........ அந்த மாப்பிள்ளையாகி இருக்க வேண்டியவர் 'எவண்டா, அவன்..........' என்று கொலைவெறியுடன் என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தார்..........
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 0 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts