Jump to content

நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது - ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   10 JUL, 2024 | 10:56 PM

image
 
தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி  இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ranil1.png

எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பிரிவெனாவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய - ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

அமரபுர மகா நிகாய - ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் உபசம்பத நிகழ்வுகள் இலங்கை அமரபுர நிகாயாவின் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகாநாயக்க தேரர் தலைமையில் இன்று முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதோடு 98 பேர் இதன்போது துறவரத்தை ஏற்றுக்கொள்ளவுள்ளனர். 

600இற்கும் மேற்பட்ட விகாரைகளில் இருக்கும் 4000 இற்கும் மேற்பட்ட பிக்குகள் 

அமரபுர ஆரியவன்ச சத்தம்ம பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, இரு வருடங்களுக்கு ஒரு முறை உபசம்பதா நிகழ்வு நடத்தப்படும். 

காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பரிவேனாவின் அதிபதி வண கினிகல பெதெஸ சுதம்ம தேரர், உபசம்பதா நிகழ்விற்காக வௌியிடப்பட்ட நினைவுப் புத்தகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''துறவற வரலாற்றில் உபசம்பத நிகழ்வு முக்கியமானதாகும். அந்த விழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே முன்பிருந்தே இதற்காக அரச அனுசரணை வழங்கப்படுகிறது. இன்றைய உபசம்பதா நிகழ்வும் அரசாங்க அனுசரணையுடன் நடைபெறுகிறது. 

இலங்கையில் உபசம்பதா நிகழ்வு இல்லாத காலமும் இருந்தது.  அப்போது, பிக்குகளின் தலையீட்டுடன் சியம் நிக்காயவில் முதலாவது உபசம்பதா நிகழ்வு அரச அனுசரணையுடன் நடத்தப்பட்டது. 

மீண்டும் அந்த முறைமை இல்லாது போயிருந்த வேளையில் மியன்மாரின் உதவியுடன் அமரபுர நிக்காயவில் ஆரம்பிக்கப்பட்டது.  அன்றிலிருந்து அரச அனுசரணையுடன் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. ஆங்கிலேயர் தென் பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில் துறவறத்தையும் சாசனத்தையும் பேணிக்காக்க ஆற்றிய சேவை அளப்பரியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நீண்டகாலமாக பேணப்பட்ட இறக்குமதி பொருளாதாரக் கொள்கையினால் அந்த நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மற்றைய அனைத்து தேரவாத பௌத்த நாடுகளும் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன.

எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது'' என ஜனாதிபதி தெரிவித்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 

''ஒழுக்கம் இல்லாவிட்டால் சாசனம் அழிந்துவிடும் என்பது போல ஒழுக்கம் இல்லாத நாடும் சரிந்துவிடும்.  அதனால் புத்த தர்மத்தின் முன்னுதாரணம் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக அவசியமானதாக காணப்படுகிறது. 

இலங்கையில் உபசம்பதா இல்லாத காலத்தில் தாய்லாந்தில் இருந்து அதனை கொண்டு வருவதற்காக இந்நாட்டு பிக்குகள் மூன்று தடவை தாய்லாந்து செல்ல வேண்டியிருந்தது. பல இன்னல்களுக்கு மத்தியில் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த உபசம்பதா முறைமையை பாதுகாக்க மகா சங்கத்தினர் பாடுபட்டனர்.'' என்று தெரிவித்தார்.

வண. கந்துனே அஸ்ஸாஜி மகா நாயக்க தேரர், அமரபுர நிக்காய - ஆரியவங்ச சத்தம்ம பீடத்தின் மகாநாயக்கர் குருநாகல் ரிதிகம ரப்படகல்ல விகாரையின் விகாராதிபதி  எகொடமுல்லே அமரமொழி மகா நாயக்க தேரர்,  வண. வல்பொல விமலஞான அனுநாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, கயந்த கருணாதிலக்க, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/188170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா தேரர்கள்… உலகத்திலேயே உதவாக்கரை மனிதர்கள். 
இவர்களின் மனங்களில் இனவாதம் இருக்கும் மட்டும் நாடு இன்னும் அதல பாதாளத்திற்குத்தான் போகும். 

அவர்களுக்கு அரசாங்கம் வளைந்து கொடுத்து இடம் கொடுத்துவிட்டு இப்ப புலம்பி பயன் இல்லை. அனுபவியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

இனவாதத்தின் மொத்த குழுவிடம் விடுத்த வேண்டுகோளை பாருங்கோ?
நாடு உருப்பட்டமாதிரித்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களே அரச காசில் பிழைப்பை நடத்துறாங்கள் ..இதில வேற அவர்களிடம் ஆலோசனை ....75 வருடம் அழித்தது போதாதா 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது! adminJuly 30, 2024   காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர், மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார். குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு  பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, காணி மோசடியில் ஈடுபட்டவர், நில அளவையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.   https://globaltamilnews.net/2024/205444/
    • நானும் பார்த்திருந்தேன். உங்களை  கவர்ந்த மாதிரி என்னை படம் பெரியளவில் கவரவில்லை. ஒன்று, விஜய் சேதுபதியின் முன்னைய படங்களை நினைவூட்டும் நடிப்பு, வசன உச்சரிப்புகள் அலுப்பைத் தருகின்றன. இரண்டு, படங்களில் இருந்த ஓட்டைகள். முதலாவது எதிரியை எப்படிக் கண்டு பிடித்தார் என்பதைப் பற்றி இயக்குனருக்கு கவலை இருக்கவில்லை. இதுதான் முடிவாக இருக்கப் போகிறது என்பதை ஊகிக்கக் கூடியவரையிலான திரைக்கதை அமைப்பு…. பாரதிராஜாவால் நிற்கக்கூட முடியவில்லை. உட்காரவைத்து கிடைத்த ஒருநாள்  ‘கால்சீட்’டில் காட்சிப் படுத்தியிருக்கிறார் போலும். படத்தில் நான் ரசித்தது சிங்கம் புலி, அபிராமியின் நடிப்புகளை. படம் நேர்கோட்டில் செல்லாமல் சுற்றிச் சுற்றி வருவதால் படம் தப்பித்துக் கொண்டது.
    • 1, ....மீண்டும் புலிகள் இயங்குவதற்கு    அல்லது புலிகள் இருக்கிறார்களா??? என்பதை கண்டறிவதற்காக.   அல்லது எதுவும் நடக்கவில்லை என்றால் புலிகள் இல்லை   2009 அழிக்க பட்டுவிட்டது என்ற இலங்கையின் கூற்று சரியாகும்   அதாவது நிறுவப்படும்  2,..மீண்டும் போராடுவோம் சிலசமயம். தமிழ் ஈழம் கிடைக்கும்  3,....எடுத்து விட்டு பாருங்களேன்  4.  .   இலக்கம். 3 இன். பதிலை வாசிக்கவும்.   5.  ..      ..வேறு கேள்விகள் கேட்கலாம்      சுடச்சுட பதில்கள் தரப்படும்  6,..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰😡🥰😡🥰😡🥰😡
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 16   சுமேரியர்கள் மகன், டில்முன், மேலுஹா [Magan, Dilmun, and Meluhha] போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தார்கள் என அவர்களின் இலக்கியத்தில் திரும்ப திரும்ப குறிக்கப்பட்டுள்ளது. பல கல்விமான்கள் மேலுஹாவை சிந்து சம வெளி என சுட்டிக் காட்டுகின்றனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிம்மோ பர்போலா [Asko and Simo Parpola], 'மேலுஹா'வை மே-லா-க எனஅடையாளம் கண்டு அதை "மேல் அகம்" என விளக்குகிறார்கள். உண்மையில் பல வர்த்தக பொருள்களான மரம், கனிப்பொருள்கள், நவரத்தினக் கல் என்பன சிந்து சம வெளியில் உள்ள குன்று அல்லது மலைசார் பகுதியில் இருந்தே எடுக்கப் பட்டுள்ளன. மேலும் கி மு 2200 ஆண்டளவிலான சுமேரியா நூல், 'மேலுஹா'வை கிழக்கில் இருப்பதாக குறிப்பிடுகிறது. ஆகவே அது சிந்து சம வெளியையோ அல்லது இந்தியாவையோ பரிந்துரைப்பதாக நாம் இலகுவாக கருதலாம். அது மட்டும் அல்ல, சிந்து சமவெளி முத்திரைகள் ஊர் [Ur] மற்றும் பல மெசெப்பொத்தோமியா நகரங்களில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் மேல் கூறிய பரிந்துரையை ஆதரிக்கின்றன. மேலும் மெசெப்பொத்தோமியா கைவினை பொருள்கள், அதாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள், சிந்து சம வெளியில் காணப்பட்டது. இவை மெசெப்பொத்தோமியா ஒரு பழமை வாய்ந்ததாக, தனது வர்த்தக நாடான சிந்து சம வெளி காலத்துடன் ஒத்ததாக அல்லது அதற்கும் முந்தியதாக, இருக்கலாம் என எடுத்து காட்டுகிறது. மேலும் 'டில்முன்' எந்த நாட்டை அல்லது இடத்தை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் இன்றும் உண்டு. 'சாமுவேல் நோவா கிராமர்' என்ற புகழ் பெற்ற அறிஞர் இதையும் சிந்து சம வெளியுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு சுமேரிய இலக்கியத்தில் [கில்கமெஷ் காப்பியம்] இது சூரியன் உதிக்கும் திசையில் இருப்பதாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் 'தில்முன்' [டில்முன்] என்பது 'தில்', 'முன்' ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு. ‘தில்’ என்ற சொல் சங்கஇலக்கியத்தில் ‘வாழ்க தில்' என்றவாறு காணப்படுகிறது. இங்கு ‘தில்’ என்றால் வாழ்தல் ஆகும்." வாழ்க தில் அம்ம" என்பன போன்ற சங்கத் தமிழ் வழக்குகளை உதாரணமாக கூறலாம்.  "நலமே வாழ்க" என்பதாக இதன் பொருள் இருக்கலாம். இந்த சொல் இப்ப 'தின்' என காணப்படுகிறது. அதாவது  தில்>தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு ஆகும் மேலும் ‘தீனி’= தீன்= சாப்பாடு, இரை ஆகும். இவ்வாறாக ‘வாழ்க தில் / தின்' என்பதை நலமுடன் வாழ்க [நல்ல சாப்பாடு உண்டு] என கருதலாம். 'முன்' என்பது முன்னுக்கு என்பதாகும். இது மேலும் 'முன்னைய, முன்னர், ஆரம்ப' என்பதையும் குறிக்கும். இதன் படி, தில்-முன் என்பதை வாழ்ந்த முன்னைய இடம் என எடுக்கலாம். எனவே இந்த கருத்தின் படி நாம் இன்றைய வழக்கத்தில் கூறும் 'தாய் நாடு' என இதற்கு பொருள் கொள்ளலாம். அதாவது நாம் முதல் தோன்றிய இடம் என கருதலாம். ஆகவே சுமேரியன் சிந்து சமவெளியில் இருந்து வந்தவர்கள் என எடுத்து கொண்டால், சாமுவேல் நோவாகிராமர் [S. N. Kramer] மற்றும் டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr Clyde Ahmad Winters] போன்றோர் தில்முன் என்பதை ஹரப்பா என உரிமைகோரியது  சரி போல இருக்கும். ஏனென்றால், தங்களது மூதாதையார் பிறந்த, வாழ்ந்த இடத்தின் ஞாபகார்த்தமாக ஹரப்பானை 'தாய் நாடு' எனபொருள் படும் 'தில்முன்' என்ற சொல்லால் அழைத்திருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. மேலும் தொல் பொருள் சான்றின்படி, திராவிட மக்களால், அதாவது ஆதிதமிழர்களால் குடியேறிய சிந்து சமவெளியில் வைடூரியம் இருந்தது தெரிய வருகிறது. இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுரங்கம் வெட்டி எடுக்கப் பட்டுள்ளது. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரிகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த வைடூரியம் தான் தில்முன்னை முதன்மை ஆக்கியது. அது மட்டும் அல்ல இந்த இரண்டு நாகரிகங்களுக்கும் இடையில் வலுவான பண்பாட்டு தொடர்பு / பரிமாற்றம் இருந்ததை தொல்பொருள் ஆராச்சி மேலும் உறுதிப் படுத்துகிறது. சுமேரியன் நூலில் பதினொன்று இடங்களில் 'மேலுஹா' என்ற சொல்வருகிறது [சம்பவிக்கிறது]. அதன் ஒரு உதாரணம் கிழே தரப்படுகிறது. "என்னை காண [அறிய] மேலுஹா, மகன், டில்முன்  மக்களை விடு.  டில்முன்னுடன் வர்த்தகம் செய்யும் படகுகளில், மரக் கட்டைகளை ஏற்ற விடு.  மகனுடன் வர்த்தகம் செய்யும் படகுகளில், வாண் உயரத்திற்கு  ஏற்ற விடு.  மேலுஹாவுடன் வர்த்தகம் செய்யும், மகிழும் [magilum] படகுகளில்,  பெரும் மதிப்புள்ள தங்கம், வெள்ளிகளை அனைத்து நாட்டின் அரசனான என்லில்லுக்கு கொடுப்பதற்காக, நிப்பூருக்கு  கொண்டு வர விடு"  [என்கியும் உலக விதிமுறையும் / Enki and the world order 123-130 ]  "Let the land of Meluha, Magan, and Dilmun look upon me.  Let the boats that trade with Dilmun be loaded with timber.  Let the boats that trade with Magan be loaded sky high.  Let the magilum [ma-gi-lum] boats that trade with Meluha,  transport gold and silver and bring them to Nibru for Enlil, king of all lands." [Enki and the world order 123-130 ] சார் C.லியோனர்ட் வூல்லே [Sir Charles Leonard Woolley (17 April 1880 – 20 February 1960)] தனது "சுமேரியன்" என்ற புத்தாகத்தில், மெசெப்பொத்தோமியாவில் கடைசியாக குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்றும் அவர்கள் கறுத்த முடியுள்ளவர்கள் என்றும் ஒட்டு நிலை மொழியை (Agglutinative language / நேரடியாக ஒட்டும் இயல்புடைய, சொற்களை கொண்ட ஒரு மொழி] பேசினார்கள் என்றும் குறிப்பிடப் பட்டு உள்ளது. ஒட்டு நிலை மொழி, ஒருவகைப் பிணைப்பு நிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்பு நிலை மொழிகளில் ஒவ்வொரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. உதாரணமாக திராவிட மொழிகள் ஒட்டு நிலை மொழிகள் ஆக கருதப் படுகின்றன. மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறந்த சொல் கூறு 'உருபன்' ஆகும். இதனுடன் ஒட்டுகள் சேரும். ஒட்டும் உருபன்கள், ஒட்டு உருபன்கள் எனப்படும். உதாரணமாக "செய்தான்" என்றசொல்லில் செய்- வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன். த்       - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன் ஆன்  - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன். எனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது.  சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி [hebrew language], அக்காத் மொழி [Akkadian language], அறமைக்மொழி [Aramaic  language], போன்ற செமிடிக் மொழி (Semitic languages) களிலிருந்து வேறுபட்டதாகும். பண்டைய துருக்கிமொழி (Turanian) போன்று காணப்பட்டாலும் சொற்பிறப்பியலில் (etymology) அப்படி அல்ல. தொடக்கத்தில் இந்த எழுத்து அமைப்பு முறைக்கு வரலாற்று ஆசிரியர்களால் பொருள் கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டது. இறுதியாக அவர்கள் அங்கு ஒரு நாகரிகம் இருந்தது என்றும் சுமேரியன் என்ற ஒரு மொழி பேசப் பட்டதாகவும் உறுதி படுத்தினார்கள். மிக முந்தய தமிழ் சங்கம் பழமை [தொடக்கநிலை] தமிழையே பாவித்தது. சுமேரிய மொழி ஒரு பண்டைய அல்லது பழைய முதல் சங்கத்திற்கு உரிய தமிழ் என இப்ப ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அது மட்டும் அல்ல இவர்கள் சுமேரியானை சுமேரிய தமிழ் எனஅழைக்கின்றனர். J.V.கின்னியர் வில்சன் [J.V.Kinnier Wilson] என்பவர்  ஹரப்பானும் சுமேரியானும் ஒரே இன மக்கள் என கூறுகிறார். சுமேரியன் ஒரு இந்தோ- சுமேரியன் என்றும், மூல கூட்டமான ஹரப்பானில் இருந்து பிரிந்த ஒரு சிறு கூட்டமே அங்கு குடியேறி சுயாதீனமாக வளர்ந்தது எனவும் கூறுகிறார். மேலே நாம் கூறிய 'தில்முன்' விளக்கத்துடன் ['தாய் நாடு'] இது ஒத்து போவதைக் கவனிக்க. பண்டைய சுமேரியா திராவிட மொழிகளுக் கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதாக அருட் தந்தை ஞான பிரகாச அடிகளார் நம்புகிறார். அப்படியான ஒற்றுமைகளை AS தியகராஜா, மலேசியா முனைவர் கி.லோகநாதன் ஆகியோர் சுட்டிக் காட்டி உள்ளார்கள். மேலும் ராமசுவாமி ஐயர், ஒரே மாதிரியான தொடர்புகள் உடைய  சுமேரியா, தமிழ் நிலவியற் சொற்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். நான் இப்ப அப்படியான ஒற்றுமையுள்ள 15 சொற்களை கிழே தருகிறேன். இப்படி ஏராளமான சொற்கள் உள்ளன.  கருத்து / மொழி: சுமேரியன்    திராவிடன் Tie/bind                       KAD                      கட்டு house/family               GUD                      குடி  mother                        ama                       அம்மா   house                         bitu                        வீடு   five                             ia                           ஐ [ஐயிரண்டு பத்து] the land /place           kalam                    களம்  sheep                         udu                       ஆடு  city                            ur                           ஊர்  love                           am                         அன்பு love                          aka                         அகம்  to grind                     ara                         அரை boat                         kalam                     கலம் quay                        kar-ra                     கரை to make, do             ag, ak                    ஆக்கு  what                        a-na                       என்ன மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழே! என்று நம்புகிறார். தென் இந்தியாவில் புழக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே, அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே. அமலாசிங்க் [Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக் காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும், சாமுவேல் நோவா கிராமர், "சுமேரு மொழி - துருக்கி மொழி, ஹங்கேரி மொழி, சிலகவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும், எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி], இலக்கணம், சொற்புணர்ச்சி [வசனம் அமைத்தல்] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார். தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத் தக்கது. டாக்டர் அசோக் மல்ஹோத்ர, மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு, அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்து வந்தான் என்பதை ஆராயத்  தூண்டுகிறது என்கிறார். இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார். மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters  கறுத்த ஆபிரிக்க மக்கள், திராவிடர், எலமைட்மக்கள், சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம் (Karakoram Mountains) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார். இது  பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத் தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி [caravan route] யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும், சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என்று. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர, இமய மலைத் தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆய்வு செய்து உறுதி படுத்துவதற்கு, இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும். முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன் [தமிழ்] பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் ? இரண்டாவது சுமேரு மக்களின் கிடைக்கப் பெற்ற எலும்பு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவை அந்த மொழி குடும்பத்துடன் ஒத்து போகுது என்பதை கண்டுபிடித்தல் வேண்டும் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 17 தொடரும் படம் 01 : என்லில்லும் அவரின் மனைவி நின்லில்லும் / Enlil with his wife, Ninlil]          
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.