Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   11 JUL, 2024 | 03:02 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு  தொடர்பில்  ரணில், வஜிர, ரங்கே பண்டார ஆகியோரால் பொருள் கோடல் செய்ய முடியாது. உயர்நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் சட்டமாகுவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார்.

பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற  சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பு மற்றும் ஏனைய  ஏற்பாடுகளுக்கு அமைய  எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்  ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களா? அல்லது ஆறு வருடங்களா?  என்ற சந்தேகத்தை  ஜனாதிபதியின் சகாக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களாக நீட்டிப்பது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து மாளிகை சூழ்ச்சி தற்போது முன்னெடுக்கப்படுகிறது. அதில்  இந்த வஜிர அபேவர்தனவும் உள்ளார்.

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எவ்வித பிரச்சினையும், சிக்கலும் கிடையாது. ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அரசியலமைப்பு தொடர்பில் பொருள்கோடல்  வழங்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அவரது சகாக்களான வஜிர, ரங்கே ஆகியோருக்கு கிடையாது. அரசியலமைப்பின் 125 ஆவது உறுப்புரையின் பிரகாரம்  உயர்நீதிமன்றத்துக்கே  பொருட்கோடல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்   நிறைவேற்றப்பட்டதன்  பின்னர் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளா?  அல்லது ஆறு ஆண்டுகளா? என மூன்று முறை உயர்நீதிமன்றில் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தனது பதவி காலம் குறித்து உயர்நீதிமன்றில்  வியாக்கியானம் கோரினார். பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் சிவில் பிரஜை ஒருவர் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து உயர்நீதிமன்றில் வியாக்கியானம் கோரினார். அப்போதும் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று வியாக்கியானம் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவி காலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்திய நபர் இந்த மாதமும் நீதிமன்றத்தை நாடினார். இம்முறையும் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று உயர்நீதிமன்றம் மூன்றாவது தடவையாகவும் வியாக்கியானம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை உயர்நீதிமன்றம் மூன்று முறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே இனி யாருக்கு என்ன பிரச்சினை பதவி காலத்தில்  சிக்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்து கதிரையை பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்கார தனமானதொரு செயல்.

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும். ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைவார். அமைதியான முறையில் வீடு செல்வார், இதுவே நடக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர். அவர் எவ்வழியிலாவது தேர்தலை பிற்போடுவார் என்று அவருக்கு சார்பானவர்கள் குறிப்பிடுகிறார்கள். அனைவரும் குறிப்பிடுவதை போன்று ரணில்  தந்திரமானவரல்ல,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை நிர்வகித்ததை காட்டிலும்  ஐக்கிய தேசியக் கட்சியை நிர்வகித்துள்ளார். இறுதியில் கட்சி படுதோல்வியடைந்தது. தேசிய பட்டியல் ஊடாகவே பாராளுமன்றம் வந்தார். ஆகவே  ரணில் தந்திரமானவரல்ல, இவரை காட்டிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அரசியல் தந்திரமானவர் என்று குறிப்பிட வேண்டும்.

அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து  வருடங்கள் என்றும், பிறிதொரு இடத்தில் ஆறு ஆண்டுகள்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம்  ஒன்றை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். அமைச்சரவையும்  அங்கீகாரம் வழங்கியள்ளது. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியதன் பின்னர் அமைச்சரவைக்கு ஏன் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சட்ட வரைவை  அவசர சட்டமாக நிறைவேற்ற முடியாது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அவசர சட்டம் இயற்றும் முறைமை நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்தம் ஆகிய விடயங்களுக்கு மாத்திரமே அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு தொட்பான விடயங்களை  அவசர சட்டமாக இயற்ற முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி  தேர்தல் நடத்தப்படும். ஆகவே ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. மக்களை குழப்பி விட்டு அதனுடாக மகிழச்சியடையும் மனநிலை ஜனாதிபதிக்கு உண்டு. தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/188216

  • கருத்துக்கள உறவுகள்

அனுரகுமார வின் கனவு கலைந்தது,..😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

 

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை உயர்நீதிமன்றம் மூன்று முறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே இனி யாருக்கு என்ன பிரச்சினை பதவி காலத்தில்  சிக்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்து கதிரையை பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்கார தனமானதொரு செயல்.

 

🙃..............

'வேலை இல்லாத ஒருவர் பூனையைப் பிடித்து...........' என்று ஊர்ப் பக்கம் ஒரு சொலவடை இருக்கின்றது.  ஊரில் அச்சு அசலாக இப்படியே சொல்ல மாட்டார்கள், நான் கொஞ்சம் மரியாதை கலந்து இங்கே எழுதியிருக்கின்றேன். ரணிலும், அவரின் சகபாடிகளிற்கும் வேற உருப்படியான வேலை எதுவும் நாட்டில் இல்லை போல ........

ஐந்து வருடம், ஐந்து வருடம், ஐந்து வருடம்........... என்று ஏலத்தில் கடைசி விலை கூவுவது போல உயர்நீதிமன்றம் ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்ப்புச் சொல்லி விட்டது. இப்ப எதுக்கு அரசியலமைப்பில் ஐந்து வருடங்கள் தான் என்று மாற்ற வேண்டும் இவர் நிற்கின்றார். அவர்களே குண்டை வைப்பார்களாம், அவர்களே குண்டை எடுப்பார்களாம் என்று போகுது கதை.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.