Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images-2.jpg?resize=302,167

எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்!

ஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் “கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது” விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Prestige Falcon எனும் பெயருடைய குறித்த கப்பலில், 13 இந்திய பிரஜைகள் மற்றும் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1392498

  • கருத்துக்கள உறவுகள்

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை பணியாளர்களுடன் கடலில் மூழ்கியது!

Published By: VISHNU   16 JUL, 2024 | 11:41 PM

image
 

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் 13 பேர் இந்தியர்கள். மற்ற மூவர் அவர்கள் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/188640

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை - கடற்படை கப்பலை அனுப்பியது இந்தியா

17 JUL, 2024 | 12:17 PM
image

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க்கப்பல் கவிழ்ந்ததில் காணாமல்போன 16 பேரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை இந்தியா தனது கடற்படை கப்பலான ஐஎன்எஸ் டெக்கினை ஈடுபடுத்தியுள்ளது.

இந்தியா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தனது பி81 கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.

கொமொரோஸ் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் மூன்று இலங்கையர்கள் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் காணாமல்போயுள்ளனர்.

பிரெஸ்டிஜ் பல்கன் என்ற கப்பலே கவிழ்ந்துள்ளது.

https://www.virakesari.lk/article/188660

  • கருத்துக்கள உறவுகள்

ஒமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் கப்டன் இலங்கையை சேர்ந்த தமிழர் - தந்தை உட்பட காணாமல் போயுள்ளவர்கள் குறித்து மகள் துளசி கவலை

Published By: RAJEEBAN   19 JUL, 2024 | 11:58 AM

image

ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் தலைமை மாலுமியான கே.வைத்தியகுமாரின் மகள் துளசி வைத்தியகுமார்  காணாமல்போனவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

கப்பலின் 16 பணியாளர்களில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ship_oman.jpg

ஒருவரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையர்களும் உள்ளதாக இந்திய கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவர்களிற்கு தற்போது மருத்துவசிகிச்சை வழங்கிவருவதாகவும் உயிர்காக்கும் படகில் புறப்பட்ட ஆறு பேரையே காணவில்லை எனவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன கப்பல் பணியாளர்கள் குறித்து தலைமை மாலுமியின் மகள் (கப்டன் வைத்தியகுமார்) துளசி வைத்தியகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.

GSvI-8_WkAA8Rw_.jpg

கப்பலின் கப்டன்  எனது அப்பா என தெரிவித்துள்ள அவர் அவரது கப்பலில் 16 பேர் பணியாற்றினார்கள், அவர்களில் மூவர் இலங்கையர்கள் 13 பேர் இந்தியர்கள் என  துளசி தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார், காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் எட்டு இந்தியர்களும் ஒரு இலங்கையரும் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அவர்களிற்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகின்றது ஏனையவர்கள் உயிர்காக்கும் படகில் தப்பிச்சென்றனர் என தெரிவிக்கின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஓமான் அரசாங்கம் அந்தநாட்டின் கடல்சார் அமைப்பு இந்திய கடற்படை ஆகியன  ஒன்றிணைந்து மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளன, ஆனால் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

GSvI-84XcAAkvFb.jpg

நாங்கள் குழப்பமும் கவலையும் அடைந்துள்ளோம், அந்த ஆறு பேரையும் அவர்களின் குடும்பத்தவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கப்டன் வைத்தியகுமார், தலைமை பொறியியலாளர் தயாநிதி அப்பாசாமி, குகனேசன் மகேசடாசன் ஆகியோரே கப்பலில் பயணித்த இலங்கையர்கள்.

GSvI-8_XwAA8xGG.jpg

https://www.virakesari.lk/article/188836

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

ஒமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் கப்டன் இலங்கையை சேர்ந்த தமிழர் - தந்தை உட்பட காணாமல் போயுள்ளவர்கள் குறித்து மகள் துளசி கவலை

கப்பலின் தலைமை மாலுமியும், மற்றவர்களும் விரைவில் உயிருடன் கண்டுபிடிக்கப் படவேண்டும் என பிரார்த்திக்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல் – 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேரை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

பயணிகளுடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல் - Thinakaran

ஓமான் கடலில் விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து காணாமற்போன 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 கப்பல் ஊழியர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 19 பேர் அதில் பயணித்துள்ளதுடன் இதுவரை 09 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமற்போயுள்ள இலங்கை பிரஜைகளின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஓமான் வௌிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மீட்கப்பட்ட இலங்கை பிரஜை உடல்நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்தத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 9 பணியாளர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் டெக் யுத்தக் கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இலங்கையர் என்பதுடன் ஏனைய 8 பேரும் இந்திய பிரஜைகளாவார். கப்பலின் கெப்டனாக இலங்கையைச் சேர்ந்த வித்யகுமார் கதிர்காமதாசன் செயற்பட்டுள்ளதாக இந்திய கடற்படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களான குகநேஷன் மஹேஷதாசன் கப்பலின் இரண்டாவது அதிகாரியாக செயற்பட்டுள்ளார். கப்பலின் பிரதான பொறியிலாளராக இலங்கையைச் சேர்ந்த தயாநிதி அப்பாசாமி பணியாற்றியுள்ளார்.

காணாமல்போன மற்றைய 06 கப்பல் ஊழியர்களை கண்டுபிடிக்க இந்தியாவும் ஓமானும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கசிந்ததா என்பது குறித்து ஓமான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு இதுவரை எந்த தகவலையும் வௌியிடவில்லை.

கொமொரோஸ் கொடியின் கீழ் பயணித்த 117 மீற்றர் நீளமான பிரஸ்டீஜ் பெல்கன் என்ற எரிபொருள் கப்பல் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஓமானின் கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

https://thinakkural.lk/article/306434

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.