Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ''அம்மா, எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது, நான் தோற்று விட்டேன். என் தைரியம் எல்லாம் உடைந்து விட்டது, எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம், 2001-2024'' என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

''நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மன்னித்து விடுங்கள்'' எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் “வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்தது.

''வினேஷ் போகாட்டின் எடை 50 கிலோ 100 கிராம் சோதனையின் போது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது'' என்று வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று பேசினார்.

உலகப் பிரபலங்களின் ஆதரவு

உலகப் பிரபலங்களின் ஆதரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வினேஷுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “வினேஷ் நீங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீங்கள் எப்போதும் எங்களுக்கு வெற்றியாளர் தான். நீங்கள் இந்தியாவின் மகள் மற்றும் இந்தியாவின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி மாலிக் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீ தோற்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்காகவும் தான் நீ போராடிக் கொண்டிருந்தாய், இன்று அவர்கள் தோற்றுவிட்டனர். இது ஒட்டுமொத்த இந்தியாவின் தோல்வி. நாடு உன்னுடன் உள்ளது. ஒரு சக வீராங்கனையாக உனது போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் கடந்த ஆண்டு அப்போதைய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஜ்பூஷன் சரண் சிங் நிராகரித்து வருகிறார்.

அந்த நேரத்தில் வினேஷ் போகாட் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பெரிய முகமாகவும் இருந்தார். அவர்கள் பல மாதங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறுகையில், “இந்த பெண் (வினேஷ்) அரசு அதிகாரத்துடன் போராடி களைத்துவிட்டாள்” என்றார்.

உலகப் பிரபலங்களின் ஆதரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பாரோவும் வினேஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், ஒலிம்பிக் விதிகளை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“போட்டியின் இரண்டு நாட்களிலும் எடை சோதனை செய்யப்படுகிறது அத்தகைய சூழ்நிலையில், இரண்டாவது நாளில் எடையில் ஒரு கிலோ வரை தளர்வு அளித்திருக்க வேண்டும்.” என்கிறார் ஜோர்டன்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை எடை சோதனை நடைபெறும்.

அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இரண்டாவது நாளில் எடை அளவை எட்டாவிட்டாலும் பதக்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள் இருந்த வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டாலும், வினேஷ் போகாட்டுக்கே வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜோர்டன் வலியுறுத்தினார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘நான் தொடர்ந்து போராடுவேன்’ - வினேஷ் போகாட் தனது அறிக்கையில் என்ன சொன்னார்?

வினேஷ் போகாட், ஒலிம்பிக், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 ஆகஸ்ட் 2024
புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்திருந்தது.

இதைத் தொடர்ந்து அவர், இன்று (வெள்ளி, ஆகஸ்ட் 16) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மூன்று-பக்கங்கள் உள்ள உணர்வுப்பூர்வமான அந்த அறிக்கையில், தனது குடும்பத்தார், மருத்துவர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதில், “எனக்கு பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், அதற்கு வார்த்தைகள் போதுமானதாக இல்லை. சரியான நேரத்தில் நான் மீண்டும் பேசுவேன் என நினைக்கிறேன்,” என்றிருக்கிறார்.

“ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு மற்றும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை நானும் எனது அணியினரும் எங்களது முயற்சிகளைக் கைவிடவில்லை. நாங்கள் சாதிக்க நினைத்ததை எங்களால் சாதிக்க முடியவில்லை. அது எப்போதும் ஒரு குறையாகவே இருக்கும். வேறு வகையான சூழ்நிலைகளில், நான் 2032 வரை விளையாடியிருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்குள் போராட்ட குணமும் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும்,” என்று அவ்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

“எதிர்காலம் எனக்காக என்ன வைத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், நான் எதை நம்புகிறேனோ அதற்காகவும் சரியான காரியத்துக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்,” என்றும் தெரிவித்திருக்கிறார்.

விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கூறியது என்ன?

ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மறுநாள் இறுதிப்போட்டி என்ற நிலையில், அன்றைய தினம் காலையில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்தார்.

இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவரால் இறுதிப்போட்டிக்கு பங்கேற்க முடியாமல் போயிற்று. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதன் மீதான தீர்ப்பை இருமுறை ஒத்திவைத்த நடுவர் மன்றம், கடைசியாக நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் வரும் 16-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், திடீரென இன்றைய தினம் விளையாட்டுக்கான நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

வினேஷ் போகாட்டின் மேல் முறையீட்டை நிராகரிப்பதாக நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், "ஆகஸ்ட் 7-ஆம் தேதி வினேஷ் போகாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது," என்று கூறப்பட்டிருப்பதாக ஸ்போர்ட்ஸ்டார் இணையம் கூறுகிறது.

வினேஷ் போகாட், ஒலிம்பிக், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வினேஷ் மேல் முறையீட்டில் நடந்தது என்ன?

தனது தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து, கடந்த வாரம் வினேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வினேஷ் கூறியிருந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, வினேஷின் சட்டக் குழுவில் பிரெஞ்சு வழக்கறிஞர்கள் ஜோயல் மோன்லூயிஸ், எஸ்டெல் இவனோவா, ஹபைன் எஸ்டெல் கிம் மற்றும் சார்லஸ் ஆம்சன் ஆகியோர் இருந்தனர். இது பாரிஸ் ஒலிம்பிக் குழுவால் வழங்கப்பட்ட சட்ட உதவிக் குழுவாகும்.

இந்த வழக்கில் அவருக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக நியமிக்கப்பட்டனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

வினேஷின் 100 கிராம் கூடுதல் எடை என்பது அவர் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் கூடிய எடை தானே தவிர, அவர் மோசடி செய்யவில்லை என்று வழக்கறிஞர்கள் வாதிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

வினேஷ் போகாட், ஒலிம்பிக்,இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்தது என்ன?

வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போது, அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம், முதல் நாளில் அவர் பெற்ற அடுத்தடுத்த மூன்று வெற்றிகள்.

குறிப்பாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் மல்யுத்த வீராங்கனை யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்திருந்தார்.

சுசாகி நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருப்பவர். சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் அதுவரை தோல்வியையே சந்திக்காதவராக அவர் வலம் வந்தார்.

அவரது சாதனைகளை பார்க்கும் போது, பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை உணர முடியும்.

அதைத் தொடர்ந்து காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சையும், அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோனையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் வினேஷ்.

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிக எடையுடன் இருந்தார் என்ற காரணத்திற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகாட் செய்த மேல் முறையீட்டை விளையாட்டிற்கான நடுவர் மன்றம் நிராகரித்திருப்பதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.