Jump to content

மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இலங்கை பெண்கள் அணியுமா......... இலங்கை ஆண்கள் அணி உலக கோப்பையில் விளையாடின போது, நாங்கள் தான் சூனியம் வைத்தோம், அப்படியே ஆண்கள் அணி மிக மோசமாய் விளையாடி தோற்றது.

வைத்ததை எடுக்க மறந்து போனோம்........😜

ஜ‌க்க‌ம்மாவிட‌ம் சொல்லி உங்க‌ட‌ சூனிய‌த்தை எடுப்ப‌து தான் என் ல‌ச்சிய‌ம் லொள்😁😛.............................

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

அன்மைக் கால‌மாய் உட‌ல் நிலை ச‌ரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட‌ தூக்க‌ம்  காலையில் எழுந்த‌தும் இஸ்கோர் பார்ப்பேன்  ஆம் நீங்க‌ள் சொல்லும் அணி நேற்று ப‌டு தோல்வி....................NFL ச‌ம‌ ப‌ல‌

ரசோதரன்

🤣............ பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந

வீரப் பையன்26

இங்கை பார‌டா இவ‌ருக்கு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌ தெரியாது😁 ச‌சிக‌லா அன்ரின்ட‌ அழ‌கை ர‌சிக்க‌ தெரியுது😁   நான் அழ‌கை ர‌சித்தால் ந‌க்க‌ல் அடிக்கிறார் ளொள்😁😛..............

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌க்க‌ம்மாவிட‌ம் சொல்லி உங்க‌ட‌ சூனிய‌த்தை எடுப்ப‌து தான் என் ல‌ச்சிய‌ம் லொள்😁😛.............................

🤣.........

பையன் சார், நீங்கள் அமெரிக்கன் புட்பால் பார்ப்பீங்களா.......... நேற்று Dallas Cowboys அணியை வைத்துச் செய்தார்கள் Detroit Lions. கொடுமையாகவும், பாவமாகவும் இருந்தது.

அரைநேர இடைவெளியில் போனவர்கள் அப்படியே  தலைமறைவாகி இருக்கவேண்டும், ஆனால் திரும்ப வந்து திரும்பவும் மிதிபட்டார்கள்............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

🤣.........

பையன் சார், நீங்கள் அமெரிக்கன் புட்பால் பார்ப்பீங்களா.......... நேற்று Dallas Cowboys அணியை வைத்துச் செய்தார்கள் Detroit Lions. கொடுமையாகவும், பாவமாகவும் இருந்தது.

அரைநேர இடைவெளியில் போனவர்கள் அப்படியே  தலைமறைவாகி இருக்கவேண்டும், ஆனால் திரும்ப வந்து திரும்பவும் மிதிபட்டார்கள்............

அன்மைக் கால‌மாய் உட‌ல் நிலை ச‌ரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட‌ தூக்க‌ம் 

காலையில் எழுந்த‌தும் இஸ்கோர் பார்ப்பேன் 

ஆம் நீங்க‌ள் சொல்லும் அணி நேற்று ப‌டு தோல்வி....................NFL ச‌ம‌ ப‌ல‌மான‌ இரு அணிக‌ள் விளையாடும் போது பெரிய‌ புள்ளி வித்தியாச‌த்தில் தோப்ப‌து சில‌ ச‌மைய‌ம் ஏற்று கொள்ள‌ முடியாது 😒

 

 

அதே போல் NBAயில‌ இதே போல்  நிறைய‌ வாட்டி ந‌ட‌ந்து இருக்கு😁.........................

 

என‌க்கு NFLவிட‌  NBAதான் அதிக‌ம் பிடிக்கும் கிரிக்கேட்டுக்கு அடுத்த‌ ப‌டியா நான் விரும்பி  பார்க்கும் விளையாட்டு அது வாஸ்கேட்வோல் தான்🙏😍......................

 

 

56புள்ளி NFL அதிக‌ம் என்று தான் சொல்லுவேன்..................

Edited by வீரப் பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குள் 2ஆவது அணியாக நுழைந்தது நியூஸிலாந்து

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) இரவு நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 2ஆவது அணியாக மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

1410_nz_into_the_semis.jpg

இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டிருந்தது.

1410_player_of_the_match.jpg

இதேவேளை, அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்புகிறது.

பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் மோசமான களத்தடுப்பு காரணமாகவே நியூஸிலாந்து 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது.

ஜோர்ஜியா ப்ளிமர் (28), சுஸி பேட்ஸ் (17) ஆகிய இருவரும் 39 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரைத் தொடர்ந்து அமேலியா கேர் (9) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்தின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது.

எனினும் அணித் தலைவி சொஃபி டிவைன் (19), ப்றூக் ஹாலிடே (22) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 96 ஓட்டங்களாக இருந்தபோது அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்நது மெடி க்றீன் (9), இஸபெல்லா கேஸ் (5 ஆ.இ.) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 110 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

முனீபா அலி 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. நால்வர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஈடன் காசன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஈடன் காசன்

கடைசி லீக் போட்டி

இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டி பி குழுவிலிருந்து எந்த இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.

இக் குழுவில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் 6 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/196305

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ம‌க‌ளிர் அணி சிமி பின‌லுக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்

 

வெஸ்சின்டீஸ் ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடுகின‌ம்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன்

காய‌ம் அடைந்து விளையாட‌ முடியாம‌ல் போய் விட்ட‌து

ந‌ல்ல‌ இஸ்கோர் அடிச்சும் தோல்வி அடைந்து விட்டின‌ம்

 

இங்லாந் ம‌க‌ளிர் அணி ராசி இல்லாத‌ அணி.....................20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இங்லாந் ம‌க‌ளிர் அணி தூக்கி 15வ‌ருட‌த்துக்கு மேல் ஆகி விட்ட‌து

திற‌மையான‌ ம‌க‌ளிர் அதிக‌ம் அவுஸ்ரேலியா ம‌ற்றும் இங்லாந்திட‌ம்

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் 6 த‌ட‌வை கோப்பை வென்று விட்டின‌ம் . இங்லாந் ம‌க‌ளிர் 1முறை தான்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வெளியேற்றி அரை இறுதிக்குள் நுழைந்தது மே.தீவுகள்: தென் ஆபிரிக்காவும் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்  செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

1510_eng_player_disappointed.png

இப் போட்டியில் இங்கிலாந்து தொல்வி அடைந்ததால் பி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பை பெற்றுக் கொண்டது. தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 2ஆம் இடத்தைப பெற்றது.

1510_windies_celebrate_victory.png

அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்களைக் குவித்ததுடன் ஆரம்ப விக்கெட்டில் 74 பந்துகளில் பகிர்ந்த 102 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுபடுத்தியது.

1510_quiana_joseph_windies_vs_eng.png

அத்துடன் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டது அதன் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது.

1510_sara_glenn_engladn_disgusted_vs_win

பி குழுவில் தோல்வி அடையாத அணியாக இருந்த இங்கிலாந்து கடைசிப்  போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது.

1510_hayley_mathews_windies_vs_eng.png

ஆனால், இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

1510_windies_through_to_semis.jpg

ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 67 ஓட்டங்களை விளாசியதன் பலனாக மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் அமோகமாக இருந்தது.

1510_sa_too_qualify_to_play_in_semis.jpg

மொத்த எண்ணிக்கை 102 ஒட்டங்களாக இருந்தபோது கியானா ஜோசப் முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

1510_nat_sciver_brunt_eng_vs_wi.png

சொற்ப நேரத்தில் ஹெய்லி மெத்யூஸ் 38 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (104 - 2 விக்.)

மொத்த எண்ணிக்கை 136 ஓட்டங்களாக இருந்தபோது ஷேர்மெய்ன் கெம்பல் (5), டியேந்த்ரா டொட்டின் (27) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆனால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 5 ஓட்டங்களை ஆலியா அலின் (8 ஆ.இ.) 2 பவுண்டறிகளை விளாசி பெற்றுக்கொடுத்தார்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஏழாவது ஓவரின் முதல் பந்தில் அதன் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களாக இருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த நெட் சிவர் ப்ரன்ட், அணித் தலைவி ஹீதர் ப்ரன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளான ஹீதர் நைட் 21 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேர்ந்தது.

அது இங்கிலாந்துக்கு பெரும் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதன் பின்னர் சீரான இடைவெளியில் 4 விக்கெட்கள் சரிந்தன.

ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நெட் சிவர் ப்ரன்ட் 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அஃபி ஃப்ளெச்சர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகி: கியானா ஜோசப்.

https://www.virakesari.lk/article/196393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா அவுஸ்திரேலியா?

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (17) இரவு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா எதிர்த்தாடுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக அவுஸ்திரேலியா  காணப்படுகி ன்   றபோதிலும் தென் ஆபிரிக்கா இப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை.

ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான அவுஸ்திரேலியா 8ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்காவை அவுஸ்திரேலியா சந்திக்கிறது.

கேப் டவுன், நியூலண்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 19 ஓட்டங்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக மகளிர் ரி20 உலக கிண்ண சம்பியனானது.

மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் 9 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில்   அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

உலகக் கிண்ணத்தில் விளையாடப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா தோல்விகளையே தழுவியுள்ளது. 

இதேவேளை, அவுஸ்திரேலிய அணித் தலைவி அலிசா ஹீலி இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

லீக் சுற்று போட்டியின்போது காயமடைந்த அவர் இதுவரை பூரண குணமடையவில்லை எனவும் பயிற்சிளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் விளையாடாத பட்சத்தில் அணியின் தலைவியாக தஹிலா மெக்ரா செயற்படுவார். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் மெக்ராதான் தலைவியாக விளையாடினார்.

download.png

அணிகள்

அவுஸ்திரேலியா மகளிர்: அலிஸா ஹீலி (தலைவி), பெத் மூனி, எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர், க்றேஸ் ஹெரிஸ், அல்லது ஃபோப் லிச்ஃபீல்ட், தஹிலா மெக்ரா, ஜோர்ஜியா வெயாஹாம், அனாபெல் சதர்லண்ட், சொஃபி மொலினொக்ஸ், மெகான் சூட், தய்லா விலேமின்க்.

தென் ஆபிரிக்கா மகளிர்: லோரா வுல்வார்ட் (தலைவி), தஸ்மின் ப்ரிட்ஸ், ஆனேக் பொஷ், மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், ஆன்எரி டேர்க்சன், சுனே லுஸ், நாடின் டி கேர்க், சினாலோ ஜஃப்டா, நொன்குலுலேக்கோ மிலாபா, அயாபொங்கா காக்கா.

download__1_.png

https://www.virakesari.lk/article/196513

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் முறை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணிய‌ வென்று பின‌லுக்கு போய் இருக்கு🙏😍

வாழ்த்துக்க‌ள் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணிக்கு..........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி இறுதியில் நுழைந்தது தென் ஆபிரிக்கா

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை நொக் - அவட் செய்து ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட  தென் ஆபிரிக்கா தகுதிபெற்றது.

1710_anneke_bosch_sa_player_of_the_match

கடந்த வருடம் மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

1710_sa_into_final.jpg

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

தென் ஆபிரிக்காவின் வெற்றியில் அயாபொங்கா காக்காவின் துல்லிய பந்துவீச்சு, ஆன்எக் பொஷ் குவித்த அரைச் சதம், லோரா வுல்வார்டின் சிறந்த துடுப்பாட்டம் என்பன முக்கிய பங்காற்றின.

தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தஸ்மின் ப்றிட்ஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.)

ஆனால், லோரா வுல்வார்ட் ஆன்எக் பொஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 65 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

லோரா வுல்வார்ட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (121 - 2 விக்.)

வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 14 ஓட்டங்களை ஆன்எக் பொஷ், க்ளோ ட்ரையொன் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.

இப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய   ஆன்எக் பொஷ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ளோ ட்ரையொன் ஆட்டம் இழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

க்றேஸ் ஹெரிஸ் (3), ஜோர்ஜியா வெயாஹாம் (5) ஆகிய இருவரினது விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது.

பெத் மூனியும் பதில் அணித் தலைவி தஹிலா மெக்ராவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.

தஹிலா மெக்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார்.

16.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னரே அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது.

எலிஸ் பெரி 23 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஃபோப் லிச்ஃபீல்ட் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அயாபொங்கா  காக்கா 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நொன்குலுலென்கோ 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஆன்எக் பொஷ்

https://www.virakesari.lk/article/196539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெஸ்சின்டீஸ் ம‌க‌ளிர் நியுசிலாந் ம‌க‌ளிர‌ வென்று பின‌லுக்கு போக‌ கூடும்

 

நியுசிலாந் ம‌க‌ளிர் ம‌ற்றும் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் இர‌ண்டு அணிக‌ளும் கோப்பை தூக்கின‌து இல்லை

 

கோப்பை தூக்காத‌ அணி ஒன்று கோப்பை தூக்கினால் ம‌கிழ்ச்சி...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வெஸ்சின்டீட் ம‌க‌ளிர் அணி வ‌டிவாய் வெல்ல‌ வேண்ய‌ ம‌ச்சை

 

தொட‌க்க‌ வெஸ்சின்டீஸ் ம‌க‌ளிர் அணி பெண்க‌ள் ஆமை வேக‌த்தில் விளையாடி விக்கேட்ட‌ ப‌றி கொடுக்க‌

 

க‌ட‌சியில் த‌னி ஒரு பெண் ஆக‌ நின்று ஆடின‌ டொட்டின் அவாவும் அடுட் ஆக‌ தோல்வி உறுதியாகி விட்ட‌து

 

சாரா ரெய்ல‌ர் தான் தோல்விக்கு முழு கார‌ன‌ம்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பின‌லில் எந்த‌ ம‌க‌ளிர் அணி வெல்ல‌க் கூடும்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை நொக் அவுட் செய்து இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து

image

(நெவில் அன்தனி)

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை 8 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து, 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இதன் படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியஸிலாந்தும் தென் ஆபிரிக்காவும் விளையாடவுள்ளதுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதியாகி உள்ளது.

மந்த கதி தன்மையைக் கொண்ட ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமம் எதிர்கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

சுஸி பேட்ஸ் (26), ஜோர்ஜியா ப்ளிம்மர் (33) ஆகிய இருவரும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அதனை சாதகமாக்கிக்கொள்ளத் தவறினர்.

அவர்கள் இருவரைவிட இசபெல்லா கேஸ் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் ப்றூக் ஹாலிடே 18 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டியேந்த்ரா டொட்டின் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஃபி ஃப்ளெச்சர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்ப வீராங்கனைகள் அதிரடியில் இறங்கி இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மந்தகதி தன்மைகொண்ட ஆடுகளத்தில் அவர்களால் ஓட்டங்களை சுலபமாக பெறமுடியமால் போனது.

அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் (15), கியான ஜோசப் (12) ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் பிரகாசிக்காதது மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

மத்திய வரிசையில் ஸ்டெஃபானி டெய்லர் (13), டியேந்த்ரா டொட்டின் (33), அஃபி ஃ;ளெச்சர் (17), ஸாய்டா ஜேம்ஸ் (14) ஆகியோர் கடுமையாக போராடிய போதிலும் அவர்களால் அணியை வெற்றி அடையச் செய்ய முடியாமல் போனது.

பந்துவீச்சில் ஈடன் கார்சன் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஈடன் கார்சன்.

https://www.virakesari.lk/article/196616

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுக்காவலில் உலா வரும் புலிவீரன் உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி 23/05/2006   கிளிநொச்சியிலிருந்த வீதி ஒன்றில் சுற்றுக்காவலின் போது அமுக்கவெடிகளை கண்டறியும் நோக்கோடு செல்லும் புலிவீரன் 21/05/2006    
    • அனுதாபிகள் --------------------- ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அனுதாபம் என்றார்   இன்னொரு மனிதனும்  அதையே சொன்னார்   இப்படியே இன்னொன்று இன்னொன்று என  அனுதாபங்கள் இலையுதிர் கால பழுத்த இலைகள் போல இடைவெளி இல்லாமல் விழுந்து கொண்டிருந்தன   சலித்துப் போன அந்த ஒரு மனிதன் ஒளித்துக் கொள்ள இடம் தேடினான்   இன்னும்  ஒளித்துக் கொள்ள தேவை வராதவர்கள் இன்னொரு இடம் தேடினர் அவர்களின் அனுதாபங்களை சொல்ல   அனுதாபங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது அதைச் சொல்லும் மனிதர்களை.
    • கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டாரா யகியா சின்வார்? எந்த ஒரு செய்தியானாலும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்ற விடயத்தைக் கடந்து, அந்தச் செய்திக்கு ஏதாவது பின்னணி இருக்கின்றதா என்று தேடுவது அவசியம். யகிகா சின்வார் கொலை தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளைக் கடந்து அந்தச் செய்திகளின் பின்னணியில் வெளியே சொல்லப்படாத பக்கங்கள் என்று ஏதாவது இருக்கின்றனவா? 'connect the dots' என்று கூறுவார்களே, அப்படி இணைத்துப் பார்க்கக்கூடிய புள்ளிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக யகிகா சின்வாரின் மரண விடயத்தில் ஏதாவது இருக்கின்றனவா?   https://tamilwin.com/article/yakima-sinvar-assainartion-1729328170#google_vignette
    • அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்திய சமவுரிமைக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் இந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி. எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது, இருக்கிறது.  இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன். இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது. மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் சமவுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது. தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம். இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது.  இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்! பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம்.  அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. * 19102024 ravindran pa   https://sudumanal.com/2024/10/19/அலைகளின்-நடுவே/#more-6566
    • பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது. விமல் மீண்டும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், வாகை சூடவா படத்தைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதா? படத்தின் கதை என்ன? அரசு உதவி பெறும் பள்ளிக்கு வரும் புதிய ஆசிரியர் அங்குள்ள பிரச்னைகளை எவ்வாறு கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை. "வறுமையில் இருந்து வெளியேற கல்வி மட்டுமே உதவும்," என்பது தான் படத்தின் ஒன்லைன் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. புதுக்கோட்டையில் உள்ள மாங்கொல்லை பகுதியில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக மாற்றும் முனைப்பில் இருக்கிறார் விமல். "அப்பா பின்பற்றும் வழி நிராகரிக்கப்பட்டு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு வழக்கமான அப்பா - மகன் கதை தான் இது," என்றும் படம் குறித்து குறிப்பிடுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. "காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவே நிற்கிறது. இதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் எப்படி முன்னேறுகிறார்கள்? அவர்களுக்கு எப்படி கல்வி கிடைக்கிறது என்பதுதான் ‘சார்’ படத்தின் கதை," என்று கூறுகிறது தி இந்து தமிழ் திசையின் காமதேனு.   பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி படம் விறுவிறுப்பாக நகர்கிறதா? கல்வி கற்க விரும்பும் பட்டியல் பிரிவை சார்ந்த மக்களை ஒடுக்க நினைக்கின்றனர் ஆதிக்க சாதியினர். "சாதி, மதம், கல்வி என மிகவும் பழமையான திரைக்கதையை தன்னுடைய பாணியில் அழகாக இயக்கியுள்ளார் போஸ் வெங்கட்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. "கல்வி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்ற விஷயத்திற்கு சாதி பெருமையும், கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் எப்படி தடையாக இருக்கின்றன என்பதையே படத்தில் சொல்ல வருகிறார்கள். ஆனால், அது திரைக்கதையில் இருந்து படமாகி இருக்கும் விதம் பயங்கரமான சறுக்கலை சந்தித்திருக்கிறது. சீரியஸான கதைக்களம் எடுத்திருப்பதால் ஆடல், பாடல், காதல் என முதல் பாதியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வோம் என எடுத்திருக்கும் விஷயம்தான் சொதப்பல். இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது," என படத்தின் குறைகளை பட்டியலிடுகிறது காமதேனு.   பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது இதர கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? "படத்தில் ஞானம் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விமல். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரவணன், சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்," என்கிறது காமதேனு. "விமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எளிமையான, தீவிரமான காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகையாக சாயா தேவி போட்டிபோட்டு நடித்துள்ளார்," என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. படத்தில் கதாநாயகியாக வரும் சாயாதேவியின் கதாபாத்திரம் வழக்கமான சினிமா நாயகியாக அணுகப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறது, என்கிறது காமதேனு. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் விமர்சனம், படத்தின் முரண்களைப் பற்றி குறிப்பிடும் போது, "விமல், படத்தில் நாயகியாக வரும் சாயா தேவியை பார்வை மோக நடத்தையுடன் (voyeuristic) அணுகுகிறார். இருப்பினும் அந்த பெண் இவரை விரும்புவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காட்சிகளில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவரும் விமல், சாயாவை அணுகும் முறையை ஒரு குறும்புத்தனமாக காட்டியிருப்பது பிரச்னையாக இருக்கிறது," என்று கூறியுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். "80களில் அமைந்த கதைக்களத்தை ஒளிப்பதிவு நேர்த்தியாக செய்திருந்தாலும், எடிட்டிங் தொடர்பற்றதாக இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு பாடல்களை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. . இனியன் ஜே ஹரிஸின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. கிராமப்புறத்தின் நிலப்பகுதிகளை அழகாக படமாக்கியுள்ளார், என்று விமர்சனம் செய்துள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly60rygvylo
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.