Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 AUG, 2024 | 05:53 PM
image
 

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் பிரித்தானியக் கொடியை ஏந்தி பயணித்த 180 அடி உயரமுடைய சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த படகில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா , இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 பேர் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, படகில் பயணித்த நான்கு பிரித்தானியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.

படகிலிருந்த  பயணிகளைக் காப்பாற்றும் பணிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து செயற்பட்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/191474

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொகுசு படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் காணாவில்லை

Published By: VISHNU   20 AUG, 2024 | 03:18 AM

image
 

இத்தாலியில், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேரை காணவில்லை.

பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியே இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் பயணித்தவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரித்தானிய, அமெரிக்க மற்றும் கனேடிய பிரஜைகள் அடங்கிய குழுவொன்று சொகுசு படகில் பயணித்துள்ளதுடன், விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

காணாமல் போன 06 பேரை தேடும் பணியை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/191484

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
சிசிலியில் பிரிட்டிஷ் படகு மூழ்கியதில் காணாமல் போனவர்களில் மோர்கன் ஸ்டான்லி இன்டர்நேஷனல் வங்கியின் தலைவர் ஜொனாதன் ப்ளூமர், அவரது மனைவி ஜூடி மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் வழக்கறிஞர் கிறிஸ் மோர்வில்லோ ஆகியோர் அடங்குவர். பிரிட்டிஷ் தொழில்நுட்ப அதிபர் மைக் லிஞ்ச் மற்றும் அவரது 18 வயது மகள் ஹன்னாவையும் காணவில்லை. திங்கட்கிழமை அதிகாலை மோசமான வானிலையில் படகு மூழ்கியது - 15 பேர் மீட்கப்பட்டனர், ஆறு பேர் காணவில்லை, ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது சடலம் முறையாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் இது கப்பலின் சமையல்காரர் என்று பலேர்மோ கடலோர காவல்படை கூறியது செவ்வாய்க்கிழமையும் தேடுதல் தொடர்கிறது - படகின் அறைகளுக்கான அணுகல் தளபாடங்களால் தடுக்கப்பட்டுள்ளது தனித்தனியாக, சமீபத்திய பெரிய சட்ட வழக்கில் மைக் லிஞ்சின் இணை பிரதிவாதியான ஸ்டீபன் சேம்பர்லைன் சனிக்கிழமை சாலை விபத்தில் இறந்தார் என்பது வெளிவந்துள்ளது.
 
 
பெரிய பணக்காரர்கள் பயனித்த படகு.

Edited by Ahasthiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இடிமின்னல், அலைகளால் படகு தத்தளித்தது அது உலகின் முடிவை போல தோன்றியது இரண்டு செகன்ட்கள் எனது மகளை கடலில் தொலைத்தேன்" - சிசிலி படகு விபத்தில் சிக்கிய பெண்

20 AUG, 2024 | 04:35 PM
image
 

சிசிலியில் உல்லாசப்பயணிகளின் ஆடம்பர படகு நீரில் மூழ்கியவேளை தனது இரண்டு வயது மகளை காப்பாற்றுவதற்காக தான் மேற்கொண்ட போராட்டத்தினை தாய் ஒருவர் விபரித்துள்ளார்.

sisili_yacht.jpg

சிசிலியில் கடலில் பெயேசியன் என்ற ஆடம்பர படகு மூழ்கியவேளை காப்பாற்றப்பட்ட 15 பேரில்; ஒருவரான  சார்லொட்டே  கொலுன்ஸ்கி என்ற பெண் தனது நீரின் மேற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது இரண்டு வயது மகளை காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட போராட்டத்தினை விபரித்துள்ளார்.

பிரிட்டனின் தொழிலதிபர் மைக் லிஞ் உட்பட ஆறு பேர் காணாமல்போயுள்ளனர், ஒருவரின் உடலை சிதைவுகளின் உள்ளேயிருந்து மீட்டுள்ளனர்.

22 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த படகு புயலை எதிர்கொண்டதால் நீரில் மூழ்கியது.

கப்பல் மூழ்கியவேளை நாங்கள் மேற்தளத்தில் இருந்ததால் உயிர்பிழைத்தோம் என சார்லொட்டே  கொலுன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாங்கள் இடிமுழக்கம் மின்னல் எங்கள் படகை தள்ளாடச்செய்த அலைகள் காரணமாக உறக்கத்திலிருந்து விழித்தோம், அது உலகின் முடிவை போல காணப்பட்டது. பின்னர் நாங்கள் நீரிற்குள் தூக்கி வீசப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இரண்டு செகன்ட்கள் நான் எனது மகளை நீரில் தவறவிட்டேன், ஆனால் சீற்றத்துடன் காணப்பட்ட அலைகளின் மத்தியில் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

GVYFxM8XoAAloAZ.jpg

எனது பலம் முழுவதையும் பயன்படுத்தி எனது குழந்தையை மிதக்கவைத்தேன், அவள் நீரில் மூழ்காமலிருக்க எனது கைகளை மேல்நோக்கி நீட்டினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களை சுற்றி முழுவதும் இருட்டாகயிருந்தது, நீரில் என்னால் எனது கண்ணை திறந்து வைத்திருக்க முடியிவில்லை, நான் உதவிக்காக அலறினேன். ஆனால் என்னை சுற்றிலும் ஏனையவர்களின் அலறலையே கேட்டேன் என சார்லொட்டே  கொலுன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உயிர்காக்கும் படகை பயன்படுத்தியதால் அவரும் 11பேரும் மேலே ஏறமுடிந்தது.

9nH16Z8v.jpg

குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனது படகின் பணியாளர்கள் சிலரை காப்பாற்றினார்கள் என அருகில் பயணித்துக்கொண்டிருந்த படகின் கப்டன் தெரிவித்துள்ளார். அவர்களில் மூவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191537

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு - அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

22 AUG, 2024 | 11:06 AM
image
 

இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.

ஆடம்பர படகின் சிதைவுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுழியோடிகள் காணாமல்போன ஆறுபேரில் ஐவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

GVjcQ03bUAIzFgi.jpg

பெயேசியனின் சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை இத்தாலிய கடற்படையினர் இன்னமும் அடையாளம் காணவில்லை.

படகு கவிழ்ந்ததை தொடர்ந்து  பிரிட்டனை சேர்ந்த நால்வரையும் அமெரிக்காவை சேர்ந்த இருவரையும்  சுழியோடிகள் தேடிவருகின்றனர்.

காணாமல்போனவர்களில் பிரிட்டனின் செல்வந்தரும் அவரது மகளும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குள்ளான படகு அவரது மனைவிக்கு சொந்தமானது.

முதலில் புதன்கிழமை மதியம் இரண்டு உடல்கள் போர்ட்டிசெலோ துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/191683

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.