Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது

Featured Replies

அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது

நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டப் பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை 93 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஜாதிக கெல உறுமய, ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தது

பதிவு

  • தொடங்கியவர்

அருட்தந்தை பாக்கியரஞ்சித் படுகொலை தொடர்பில் விடுதலைப்புலிகள் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்

கிளேமோர் தாக்குதல் ஒன்றில் அருட்தந்தை பாக்கியரஞ்சித் கொல்லப்பட்டமை தொடர்பாக விடுதலைப்புலிகள் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணுக்கு மூன்று இலட்சம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் ஆழஊடுருவும் அணியினரே அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சபையில் குற்றம் சாட்டியுள்ளார்.

அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

தமிழ் மக்களை அடக்கி, கடத்தி, கொலை செய்து பாரிய மனித உரிமை மீறல்களில் அரசாங்கம் ஈடுபடுவதாகவே சர்வதேச மனித நேய அமைப்புகள் கருதுகின்றன. மன்னாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் விட்டுச்சென்ற உடமைகளும் காணாமல் போயுள்ளன.

வன்னியில் மக்கள் வாழும் பிரதேசங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.மாணவர்களின் கல்வியும் விவசாயமும் பாதிக்கப்படுகின்றது. மீனவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளும் எரிபொருள் விலை அதிகரிப்புகளும் கிளிநொச்சியில் பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நீதிபதி இளஞ்செழியனும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் மக்களுக்கு பெரும் சேவை புரிந்து வருகின்றனர்.

தமிழ்வின்

செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்

தமிழ் மக்களை அடக்கி, கடத்தி கொலை செய்வதையே தென்னிலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் மனிதாபிமானமாகவும் மனிதநேயமாகவும் கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களை அடக்கி, கடத்தி கொலை செய்வதையே மனிதாபிமான, மனிதநேயமென ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இடம்பெயர்ந்த மக்களைக் கூட அரசாங்கம் பலாத்காரமாக கிழக்கில் மீளக்குடியேற்றி வருகிறது.

மன்னாரில் இராணுவ நடவடிக்கை காரணமாக ஏராளமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் உடுத்த உடையுடன் இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விட்டுச்சென்ற உடைமைகளும் காணாமல்போயுள்ளன.

வன்னியில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது பல்குழல் ரொக்கட் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர

தமிழ் கிறிஸ்தவ மதகுருக்கள் சிங்கள அரசினால் தொடர்ந்து திட்டமிடப்பட்ட வகையில் கொல்லப்படுவது சிறீ லங்கா இராணுவத்தில் உள்ள பெளத்த மதவாதிகளின் வழிநடத்தலில் நடாத்தப்பட்டிருக்கலாம். இதற்கான யோசனையை, ஆலோசனைகளை ஹெல உறுமய போன்ற கட்சிகள், பெளத்தபீடம் பின்னால் இரகசியமாக நின்று வழங்கிக்கொண்டு இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.