Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லெபனானில் ஹெஸ்புலா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

“இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

 

இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ராக்கெட்டுகள் குறித்து மக்களை எச்சரிக்கும் சைரன்கள் வடக்கு இஸ்ரேல் முழுவதும் கேட்கப்பட்டன.

இத்தாக்குதலில் யாரேனும் காயமடைந்தனரா, உயிரிழப்புகள் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.

இந்நிலையில், அரசின் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

- இந்தச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவிப்பு!

48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவிப்பு!

 

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது.

இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 40,000 க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகி விட்டது.

இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு ஈரான் பெருமளவில் உதவி வருகிறது.

ஹமாஸ் ஒரு பக்கம் தலைவலியை கொடுத்துவர, ஹிஸ்புல்லா அவ்வப்போது குறுக்கே சில தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.

இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. அதற்கேற்றார் போல, ஹிஸ்புல்லாவும் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை வீசியும் தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பெய்ரூட் மீது தனது போர் விமானங்களை கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. அதேபோல் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், தனது நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

https://tamil.adaderana.lk/news.php?nid=191978

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

ப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், தனது நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

ஒருவேளை தற்போதைய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் அழிவோடுதான் மத்திய கிழக்குக்கு விடிவுபோலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்புலா பதில் தாக்குதல்

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் பிராந்தியத்தில் லெபனானில் இருந்து ஹெஸ்புலா சுமார் 150 எறிகணைகளை ஏவியுள்ளதாக” தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் விமானப்படையின் ஜெட் விமானங்கள் தற்போது தெற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் இலக்குகளைத் தாக்கி வருகின்றன” என்று டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

இதனிடையே, தாங்கள் ஏற்கெனவே 320-க்கும் மேற்பட்ட கத்யுஷா ரக ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும், அவை 11 இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ குடியிருப்புகளைத் தாக்கி வருவதாகவுவும் ஹெஸ்புலா தெரிவித்துள்ளது.

ஹெஸ்புலா மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, லெபனானில் இருந்து ஏவப்பட்ட எறிகணையை இடைமறிக்கும் இஸ்ரேலிய விமானம்

டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ராணுவ தளத்தில் இருந்து பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் இருவரும் “நிலைமையைக் கண்காணித்து வருவதாக” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் மீதான தங்களின் தாக்குதல், “சியோனிச (இஸ்ரேலின் முதன்மைத்துவத்தை ஆதரிப்பது) தாக்குதல் காரணமாக ஃபவுத் ஷுக்கரின் உயிர்த் தியாகத்திற்குப் பதிலடி” என ஹெஸ்புலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹெஸ்புலாவின் மூத்த தளபதியான ஃபவுத் ஷுக்கர், கடந்த ஜூலை மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

- இந்தச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

https://www.bbc.com/tamil/articles/c5y8pxx2ze9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீதான பாரிய தாக்குதல் ஆரம்பம் - ஹெஸ்புல்லா

Published By: RAJEEBAN   25 AUG, 2024 | 10:51 AM

image

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ள தாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு 350 ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

GVzZf8CWQAAMCf_.jpg

இஸ்ரேலின் 11 இலக்குகளை இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம் ஆளில்லா விமானங்களையும் கட்டுசா ரொக்கட்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலின் முதற்கட்டம் பூர்த்தியாகியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது இஸ்ரேலின் தளங்கள் முகாம்களை இலக்குவைக்கும் தாக்குதல் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191909

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் பதற்றம்; தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; ‘இதுதான் முதல் கட்டம்’ – எச்சரித்த Hezbollah

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் - தென் லெபனான் மீது தாக்குதல்

Published By: RAJEEBAN   25 AUG, 2024 | 11:01 AM

image

ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு தயாராக உள்ளதை நாங்கள் அவதானித்தோம் அதனால் எங்கள் பொதுமக்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள இஸ்ரேல் தென் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தனது விமானங்கள் தாக்குதல்களை மேற்கொள்கின்றன என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191911

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீதான தாக்குதல் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் தாக்குவோம் - ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்

Published By: RAJEEBAN   26 AUG, 2024 | 11:35 AM

image
 

இஸ்ரேல் மீது நாங்கள் மேற்கொண்ட தாக்குதல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்

தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பாதிப்புகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வோம், எதிர்பார்த்த சேதங்கள் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார்.

எங்கள்  அமைப்பின் இராணுவநடவடிக்கை திட்டமிட்டபடி துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலிற்குள் 110 கிலோமீற்றர் உள்ளே உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின்  உட்கட்டமைப்புகளை இலக்குவைத்தோம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அயர்ன் டொமை நோக்கி கெட்டுசா ரொக்கட்களை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சிரேஸ்ட தளபதியை இஸ்ரேல் கொலை செய்தமைக்கு பழிவாங்குவதற்காக பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்குவைக்க நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேலின் உட்கட்டமைப்பை இலக்குவைக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/191996

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.