Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது.

https://thinakkural.lk/article/309094

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிவில் சமூகம் கண்காணிக்கப்படுகிறது; துன்புறுத்தப்படுகிறது - ஜெனீவாவில் பிரிட்டன்

Published By: RAJEEBAN

09 SEP, 2024 | 04:21 PM
image
 

இலங்கையில் சிவில்சமூகம் கண்காணிக்கப்படுகின்றது துன்புறுத்தப்படுகின்றது என பிரிட்டன்  தெரிவித்துள்ளது.

மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் அதற்கு தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/193247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்மை - ஐரோப்பிய ஒன்றியம் கவலை

09 SEP, 2024 | 04:27 PM
image
 

இலங்கையில் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நோர்டிக் நாடுகள் சார்பில் உரையாற்றிய பின்லாந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காகவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவும் இலங்கை உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஆதரிப்பதாக பின்லாந்து தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/193248

மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை தெரிவிப்பு

Published By: RAJEEBAN   09 SEP, 2024 | 04:46 PM

image
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற  ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் சம்மதம் இன்றி அவை நிறைவேற்றப்பட்டமையினால் அவற்றை நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை பல தசாப்தகால மோதல்களினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193250

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நில அபகரிப்பை நிறுத்துங்கள் - ஜெனீவாவில் அமெரிக்கா வேண்டுகோள் - சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை

09 SEP, 2024 | 04:47 PM
image

இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

நிலங்களை மீள ஒப்படைப்பதை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா நீண்டகாலமாக காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் நல்லிணக்கத்திற்கான தடையாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/193252

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் துரத்திக்கொண்டேயிருக்கும் -  வோல்கர் டர்க் 

Published By: VISHNU   10 SEP, 2024 | 02:22 AM

image

(நா.தனுஜா)

தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறும் புதிய அரசாங்கம் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரiவின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Nவுhல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, கலந்துரையாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

இலங்கை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருப்பதாகத் தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாமையும், அவை மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான மறுசீரமைப்புக்கள் பூர்த்திசெய்யப்படாமையும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டார்.

விசேடமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு முகங்கொடுத்திருந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த அவர், அதன்விளைவாக உருவான மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் இன்னமும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் வறுமை மட்டம் இரு மடங்காக அதிகரித்திருப்பதுடன், பல குடும்பங்கள் கல்வி, சக்திவலு உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் புறந்தள்ளி நாளாந்த உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன எனவும் கரிசனை வெளியிட்டார். 

அதேபோன்று அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட அடக்கமுறைச் சட்டமூலங்கள், சட்டங்களை நினைவுகூர்ந்த வோல்கர் டர்க், அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புத்தரப்பினருக்கு மிகையான அதிகாரங்களை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடியவாறு அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிவில் சமூக இடைவெளி மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன முடக்கப்படக்கூடும் என எதிர்வுகூறிய அவர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் மீதான தொடர் கண்காணிப்புக்கள் குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார்.

 அத்தோடு முத்தூர் படுகொலை, திருகோணமலை ஐவர் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் பதிவான மிகமுக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வோல்கர் டர்க், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் விவகாரத்திலும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை என்றார்.

 மேலும் ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக அவர்களது அன்புக்குரியவர்கள் தொடர்ச்சியாகக் காத்திருப்பதாகவும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.

அத்தோடு தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை அடுத்து ஆட்சிபீடம் ஏறுகின்ற புதிய அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/193278

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவதானத்தைத் தக்கவைப்பதற்கு இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் அவசியம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 7   03 OCT, 2024 | 08:45 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வழக்குத் தொடரக்கூடியவகையில் ஆதரங்களைத் திரட்டுதல் மற்றும் கண்காணித்தல், அறிக்கையிடல் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைப்பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவருவதன் மூலமும் இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளிலிருந்து அவர் விலகி செயற்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்யும் வகையில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் எதிர்வரும் வாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் இலங்கை தொடர்பான புதிய அறிக்கையில் 'பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் மறுசீரமைப்புக்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை.

மாறாக அடிப்படை சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடிய புதிய அச்சுறுத்தல்கள் தோற்றம் பெற்றுள்ளன' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் மீறல்களுடன் தொடர்புடைய அதிகாரிகளைப் பொறுப்புக்கூறவைப்பதற்குத் தவறியிருக்கின்றன.

இருப்பினும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நீதியை நிலைநாட்டும் அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதன் ஊடாக அந்த வரலாற்றை மாற்றியமைக்கமுடியும்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானத்தைத் தக்கவைப்பதற்கும், நீதிக்கான எதிர்பார்ப்பைப் பேணுவதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைத்திருப்பை உறுதிசெய்வதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இன்றியமையாதவையாகும்.

எனவே இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஆணையை ஏற்கனவே வழங்கியிருக்கும் தீர்மானத்தை (51/1) மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/195331

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.