Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்

இலங்கை மனித புதைக்குழி
படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியிலிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகப் பகுதியிலுள்ள பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த 5ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை நடத்திய தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது?

இந்த மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது என்பது தொடர்பில் இதுவரை சரியாக அனுமானிக்க முடியவில்லை என பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார்.

''இங்குள்ள குழப்பகரமான நிலைமையால், இந்த இடம் மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது. இங்கு வீதிகள் இரண்டு முறை அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்ற பகுதியாகவும் இது இருக்கிறது. அதனால், இந்த விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்றாகியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

 
இலங்கை மனித புதைக்குழி
படக்குறிப்பு, இந்தப் புதைகுழி எந்த காலப் பகுதி சேர்ந்தது எனத் தெரிய வரவில்லை

''காலப் பகுதி தொடர்பில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கும் வரை, காலப் பகுதி குறித்து எதையும் எம்மால் கூற முடியாது. நாங்கள் இன்னும் எலும்புக் கூடுகளை முழமையாகக் காணக்கூடிய அளவிற்குக்கூட வரவில்லை.

மேல் பகுதியை மாத்திரமே அகழ்ந்து கொண்டிருக்கின்றோம். எலும்புக் கூடுகளை முழுமையாக எடுப்பதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் எடுக்கும்," என அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் புதைந்துள்ளனரா?

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் தலையீடு செய்துள்ளனர்.

''இந்த இடத்தில் கடற்படை முகாமொன்று இருந்தது. துறைமுக போலீஸ் என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது.

இதனாலேயே, இந்த மனிதப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

 
இலங்கை புதைக்குழிகள்
படக்குறிப்பு, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையடுத்து, இவ்விவகாரத்தில் அவர்களின் உறவினர்கள் தலையிட்டுள்ளனர்

அரசாங்கத்திற்கு உண்மையைக் கண்டறியும் அரசியல் தேவை இல்லாமை காரணமாகவே, கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகள் நடத்தப்பட்டவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார்.

அரசாங்கத்திற்கு எதிராக வன்முறைகள் அல்லது எதிர்ப்புகள் எழும் பட்சத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த அடக்குமுறையாக இந்தக் காணாமல் ஆக்குதலைப் பயன்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்.

இலங்கையில் இதுவரை 22 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

'கார்பன் ஆய்வுகள் தொடர்பில் நம்பிக்கை இல்லை'

இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வுகள் குறித்து நம்பிக்கை இல்லை என காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

''குறிப்பாக அண்மைக் காலத்தில் கார்பன் ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்ட மனித எச்சங்கள் சரியாக ஆய்வு நடத்தப்பட்டது என நம்ப முடியவில்லை. அரசாங்கத்தின் தேவைகளுக்கு அமைய தீர்மானங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையே எமக்குள்ளது" என அவர் கூறுகின்றார்.

கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி

''இந்த மனித எச்சங்களிலுள்ள டி.என்.ஏவுடன், ஒப்பிட்டுப் பார்க்கும் வகையிலான உறவினர்களின் டி.என்.ஏ வங்கியொன்று கிடையாது. அதனால், இந்த மனித எச்சங்கள் யாருடையது என்பதை அடையாளம் காணும் வகையிலான உபாயங்கள் இல்லை. அத்துடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் ஊக்கமளிப்பதில்லை. அந்தந்த குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தலையீடு செய்வதற்கான ஊக்குவிப்பு இல்லை. அதனால், இந்த விடயம் வெற்றியளிக்கவில்லை," என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள்

இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் மாத்திரம் சுமார் 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நான்கு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம், 20 மனிதப் புதைகுழிகள் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி மற்றும் கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

'மனிதப் புதைகுழிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது'

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக மனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

 
இலங்கை மனித புதைக்குழிகள்
படக்குறிப்பு, இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்)

''கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிக்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புப் கூடுகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிடுகிறார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை, தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனிதப் புதைகுழி 1994ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியைக் கொண்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே கொழும்பிலும் தற்போது மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/310019

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.