Jump to content

இலங்கை - நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக்

18 SEP, 2024 | 12:34 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) 

மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்காட்டி விரலில் வலி தாங்க முடியாதவராக களம் விட்டு வெளியேறினார். அவர் அப்போது 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  

ஆட்டம் பகல்போசன இடைவேளைக்கு நிறுத்தப்பட்டபோது தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.  

சுழல் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ'ரூக் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/194005

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட ஆற்றல் தொடர்கிறது, 7ஆவது டெஸ்டில் 4ஆவது சதம் குவித்தார்; பலமான நிலையில் இலங்கை

Published By: VISHNU   18 SEP, 2024 | 06:22 PM

image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

6_William_O_Rourke__VK95602.jpg

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில்  அதன் முதல் இன்னிங்ஸில்   7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

5_Dinesh_Chandimal_VK9_2914.jpg

மிகத் திறமையாகவும் உறுதியாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் தனது 7ஆவது டெஸ்டில் 8ஆவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்று 4ஆவது சதத்தைப் பூர்திசெய்தார்.

4_Angelo_Mathews__VK94463.jpg

கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார்.

1_Kamindu_Mendis_100_runs__VK96923.jpg

இன்றைய போட்டியில் ஆட்காட்டி விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் ஓய்வு பெற்ற ஏஞ்சலோ மெத்யூஸ், 4ஆவதாக தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் களம் புகுந்து துடுப்பெடுத்தாடினார்.

3_Kusal_Mendis_50_runs__VK97104.jpg

மெத்யூஸுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

கமிந்து மெண்டிஸைவிட குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 36 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/194049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனை ஒன்றை சமன் செய்தார் கமிந்து : காலியில் பெற்ற சதம் சிறப்பு வாய்ந்தது என்கிறார் கமிந்து மெண்டிஸ்

19 SEP, 2024 | 05:08 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அசத்தினார்.

ஏழாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதுடன் மற்றொரு உலக சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

Copy_of_Kamindu_Mendis_100_runs__VK96923

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கமிந்து மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்கள் கடப்பதை உறுதிசெய்தார்.

கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைக் குவித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.

1809_kamindu_mendis_world_record_equal.p

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய முதல் 7 டெஸ்ட்களிலும் ஒரு இன்னிங்ஸிலாவது 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை 8 சந்தர்ப்பங்களில் பெற்று, பாகிஸ்தான் வீரர் சவூத் ஷக்கீல் கடந்த வருடம் ஏற்படுத்திய  உலக  சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

இதனிடையே சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கமிந்து மெண்டிஸ் சதங்கள் குவித்ததுடன் மென்செஸ்டர், காலி ஆகிய அரங்குகளிலும் சதங்கள் குவித்துள்ளார்.

ஆனால், அவற்றில் காலியில் குவித்த சதமே சிறப்பு வாய்ந்தது என கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

'இது (காலி) எனது சொந்த ஊர். அத்துடன் நான் கல்வி கற்ற றிச்மண்ட் கல்லூரியும் இங்குதான் அமைந்துள்ளது' என முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் கமிந்து மெண்டிஸ் குறிப்பிட்டார்.

'இங்கு சதம் குவிக்க வேண்டும் என எனது உள்மனம் கூறிக்கொண்டே இருந்தது. நேர்மையாகக் கூறுவதென்றால் 100 ஓட்டங்களுடன் மாத்திரம் சந்தோஷம் அடைந்துவிடக் கூடாது. அதற்கும் அப்பால் கடந்து செல்லவேண்டும். துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டம் இழந்துவிட்டேன்' என கமிந்து மெண்டிஸ் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள கமிந்து மெண்டிஸ் மொத்தமாக 809 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது சராசரி வியத்தகு 80.90 ஆக அமைந்துள்ளது.

சேர் டொனல்ட் ப்றட்மனுக்கு அடுத்ததாக குறைந்த பட்சம் 10 இன்னிங்ஸ்களில் அதிசிறந்த சராசரியைக் கொண்டிருப்பவர் கமிந்து மெண்டிஸ் ஆவார்.

மேலும் தற்போதைய உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் 10 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 748 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள கமிந்து மெண்டிஸின் சராசரி 83.11 ஆகும். நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் ஜோ ரூட் மாத்திரமே 5 சதங்களைக் குறித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் 2022இல் விளையாடிய தனது அறிமுகப் போட்டியில் மத்திய வரசை வீரராக 6ஆம் இலக்கத்தில்  61 ஓட்டங்களைப் பெற்ற கமிந்த மெண்டிஸ், சுமார் 2 வருடங்களின் பின்னர் தனது மீள் வருகையில் 7ஆம் இலக்க வீரராக பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் 7ஆம் இலக்கத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (102 மற்றும் 164) குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து சட்டோக்ராம் அரங்கில் ஆட்டம் இழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 113 ஓட்டங்களைக் குவித்த கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 74 ஓட்டங்களையும் ஓவல் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களையும் பெற்றார்.

7ஆம் இலக்கத்தில் இவ்வாறாக அசத்தி வந்த கமிந்து மெண்டிஸ் இப்போது 5ஆம் இலக்கத்தில் தனது முதல் முயற்சியில் சதம் குவித்து சாதித்துள்ளார்.

இந்த மாதம் 30ஆம் திகதி தனது 26ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள கமிந்த மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரலாற்று நாயகனாக உயர்வார் என நம்பப்படுகிறது.

https://www.virakesari.lk/article/194114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெதம், வில்லியசன் அரைச் சதங்கள் குவிப்பு: பலமான நிலையை நோக்கி நகர்கிறது நியூஸிலாந்து

Published By: VISHNU   19 SEP, 2024 | 07:51 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (20) டொம் லெதம், முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் நியூஸிலாந்து பலமான நிலையை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது.

sri_lanka_vs_nz.jpg

இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 305 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது.

Copy_of_Kane_Williamson___VK99653.jpg

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

William_O_Rourke_5_wickets_VK8_9805.jpg

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கொன்வே 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம் 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் 3ஆவது விக்கெட்டில் ரச்சின் ரவிந்த்ராவுடன் மேலும் 51 ஓட்டங்களை வில்லியம்சன் பகிர்ந்தார்.

வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் ரவிந்த்ரா 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெரில் மிச்செல் 41 ஓட்டங்களுடனும் டொம் ப்ளண்டெல் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இரண்டாம் நாளான நேற்றுக் காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி 3 விக்கெட்களை 3 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

14 ஓட்டங்களுடன் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த ரமேஷ் மெண்டிஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஜாஸ் பட்டேல் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வில்லியம் ஓ'ரூக் தனது 2ஆவது விக்கெட் குவியலை இன்று பதிவு செய்தார்.

https://www.virakesari.lk/article/194128

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுத், சந்திமால், மெத்யூஸ், தனஞ்சய ஆகியோரின் துடுப்பாட்டங்களின் உதவியுடன் முன்னிலையில் இலங்கை; ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளை  ஓய்வு தினம்

Published By: VISHNU   20 SEP, 2024 | 09:44 PM

image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டங்கள்  என்பன இலங்கையை முன்னிலையில் இட்டுள்ளது.

2009_darryl_mitchel.png

இரண்டு அணிகளினதும் முதலாவது இன்னிங்ஸ்கள் நிறைவில் 35 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதம் இருக்க 202 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

2009_dinesh_chandimal.png

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நாளை சனிக்கிழமை (21) நடைபெறுவதால் டெஸ்ட் போட்டியில் நாளைய தினம் ஓய்வு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நான்காம் நாள் ஆட்டம் ஞாயிறன்று தொடரும்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் பெத்தும் நிஸ்ஸன்க (2) மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

திமுத் கருணாரட்னவும் தினேஷ் சந்திமாலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்தனர். அத்துடன் 2ஆவது விக்கெட்டில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன 83 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இருவரும் தலா 6 பவுண்டறிகளை அடித்திருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த கமிந்து மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

ஏஞ்சலோ மெத்யூஸ், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி தலா 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கின்றனர். 

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இலங்கை முதலாவது இன்னிங்ஸில் சகல விக்டெக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2ஆம் நாளான வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றது.

டெரில் மிச்செல் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் க்லென் பிலிப்ஸ் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 136 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/194214

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் - இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி

23 SEP, 2024 | 10:50 AM
image
 

காலியில் இடம்பெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான  முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63  ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வெற்றிபெறுவதற்கு 274 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 211 ஓட்டங்களிற்கு தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

208 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பிரபாத் ஜெயசூரிய ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/194579

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது

23 SEP, 2024 | 01:22 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (23) காலை நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 பருவகாலத்திற்கான அணிகள் நிலையில் 3ஆம் இடத்திறகு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் தற்போது அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியாவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் சவால் விடுக்கும் வகையில் இலங்கை முன்னேறியுள்ளது.

இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை தனது 26ஆவது வெற்றியை ஈட்டியதுடன் இந்த மைதானத்தில் நியூஸிலாந்து 5ஆவது தொடர்ச்சியான தோல்வியைத் தழுவியது.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் வெற்றிக்கு மேலும் 68 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

ரச்சின் ரவிந்த்ரா 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததால் நியூஸிலாந்துக்கு சிறு நம்பிக்கை இருந்தது.

ஆனால், கடைசி நாள் ஆட்டம் இன்று திங்கட்கிழமை (23)காலை தொடர்ந்தபோது 15 நிமிடங்களில் கடைசி 2 விக்கெட்களை ப்ரபாத் ஜயசூரிய வீழ்த்த இலங்கை வெற்றிபெற்றது.

2309_prabath_jaysuriya.png

ரச்சின் ரவிந்த்ரா மேலதிகமாக ஒரு ஓட்டத்தைப் பெற்று ப்ரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் எல். பி. டபிள்யூ. முறையில் 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இலங்கை வெற்றிபெறுவது உறுதியாயிற்று.

2309_rachin_ravindra.png

மொத்த எண்ணிக்கை 211 ஓட்டங்களாக இருந்தபோது வில்லியம் ஓ'ரூக் கடைசியாக ஆட்டம் இழந்தார்.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய ப்ரபாத் ஜயசூரிய தனது 15ஆவது டெஸ்ட் போட்டியில் 8ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இந்தப் போட்டியில் 9 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றினார்.

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் நான்காம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியிலேயே இலங்கைக்கு சாதகமாக திரும்பியது.

இலங்கை சார்பாக கமிந்து மெண்டிஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம், கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் பிலிப்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வில்லியம் ஓ'ரூக், அஜாஸ் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 305 (கமிந்து மெண்டிஸ் 114, குசல் மெண்டிஸ் 50, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, தினேஷ் சந்திமால் 30, வில்லியம் ஓ'றூக் 55 - 5 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 340 (டொம் லெதம் 70, டெரில் மிச்செல் 57, கேன் வில்லியம்சன் 55, க்லென் பிலிப்ஸ் 49 ஆ.இ., ப்ரபாத் ஜயசூரிய 136 - 4 விக்., ரமேஷ் மெண்டிஸ் 101 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 31 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 309 (திமுத் கருணாரட்ன 83, தினேஷ் சந்திமால் 61, ஏஞ்சலோ மெத்யூஸ் 50, தனஞ்சய டி சில்வா 40, அஜாஸ் பட்டேல் 90 - 6 விக்.)

நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 275) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (ரச்சின் ரவிந்த்ரா 92, கேன் வில்லியம்சன் 30, டொம் ப்ளண்டெல் 30, ப்ரபாத் ஜயசூரிய 68 - 5 விக்., ரமேஷ் மெண்டிஸ் 83 - 3 விக்.)

https://www.virakesari.lk/article/194604

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி கிரிக்கேட் மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைத‌னாம்

5வ‌து நாள் உந்த‌ மைதான‌த்தில் நிலைத்து நின்று விளையாட‌ முடியாது விக்கேட்டுக்க‌ள் அடுத்து அடுத்து விழும்.................

 

இர‌ண்டாவ‌து ம‌ச்சையும் இல‌ங்லை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் மிகவும் பலமான நிலையில் இலங்கை (402 - 5 விக்.)

27 SEP, 2024 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 402 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருக்கின்றது.

இன்று (27) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, ஏஞ்சலோ மெத்யூஸின் விக்கெட்டை முதலாவதாக இழந்தது.

download.jfif

அவர் 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதனிடையே கமிந்து மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸ் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

download__1_.jfif

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களை கமிந்து மெண்டிஸுடன் பகிர்ந்தார்.

பகல் போசன இடைவேளையின்போது உலக சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194900

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் மிகவும் பலமான நிலையில் இலங்கை (402 - 5 விக்.)

27 SEP, 2024 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 402 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருக்கின்றது.

இன்று (27) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, ஏஞ்சலோ மெத்யூஸின் விக்கெட்டை முதலாவதாக இழந்தது.

download.jfif

அவர் 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதனிடையே கமிந்து மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸ் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

download__1_.jfif

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களை கமிந்து மெண்டிஸுடன் பகிர்ந்தார்.

பகல் போசன இடைவேளையின்போது உலக சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194900

இல‌ங்கை அணி பெரிய‌ இஸ்கோர‌ நீண்ட‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு அடிச்சு இருக்கின‌ம் நியுசிலாந் ஒன்றில் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ பார்க்க‌னும் இல்லையேன் இல‌ங்கை வென்று விடும்..............................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள்

28 SEP, 2024 | 11:54 AM
image
 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது

காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார்.

அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/194977

இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து

Published By: DIGITAL DESK 3   28 SEP, 2024 | 01:46 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மைக்கல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

514 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன்முறையில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து மதிய போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் ஓவரை வீசிய நிஷான் பீரிஸ் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஒட்டங்களைக் குவித்து டிக்ளயா செய்தது.

https://www.virakesari.lk/article/194984

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியாயம்... அவர்,  பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே  அதை செய்யலாம். பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி  உங்கள் கதை இருக்கு.
    • தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.
    • "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/ பகுதி: 05     வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன், ஒரு மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ராமர்,   ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான்.   உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை - நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன்.   இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டி ருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்?   கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ? அவனைப் பாராட்டி னார்களாம்? எப்படி இருக்குது ராமன் கதை? இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவனைத்தான் கடவுளாம்? இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்? எப்படியிருக்குது வேடிக்கை?   திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக 'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது. அதில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார், ஆனால் அவன் தந்தையையே கொன்று விட்டு, தனது காம பசி தீர்க்க, தாயை இழுத்துச் சென்று விட்டான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.     இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார்.   எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?   இந்த அறிவுரை எமக்கு தேவைதானா? இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா?   பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும். இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின் நாகரிகக் கலப்பால், தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.   இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி யானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களா லும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்? மேலும் தீபாவளிப் பண்டிகை, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை. ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.   "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்" [அகநானூறு 141]   உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடு வார்கள். இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.   உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை. ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது. அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே. ராவணன் அரக்கனும் அல்ல, கடவுளும் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவறுகள் விட்டுள்ளான். நான் அவனை மூடிமறைக்க முயலவில்லை. நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன். அவ்வளவுதான்.   கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது , ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான். மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள், பண்புகள் கொண்டுள்ளனர். ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்?   ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள். ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா? இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு, எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?   ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம். இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு! அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?   ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை, மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை! இளைஞனாக இருக்கும் பொழுது, அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை, ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை, 'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டு வருகிறேன்.   இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து, காடு சென்று, இறுதியாக தற்கொலை செய்கிறாள். அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது, 'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே! தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை?   அவன் வாழ் நாள் முழுவதும், பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே, எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!!     [இதுவரையில் நாம் அறிந்ததிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவாக, தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப + ஆவளி', அதாவது, 'தீப' (என்னும் வடசொல்லும்) + 'ஆவளி' என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     [முற்றிற்று]      
    • தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு.  அவர் நாடாளுமன்ற  பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால்.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி.  உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.