Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே! சாத்தியமே. - பட்டிமன்றம்

Featured Replies

'இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே? சாத்தியமே?'

வணக்கம்..

எல்லாரும் இந்த வீடியோவ பொறுமையா பார்க்க சந்தர்ப்பம், வசதி கிடைத்ததோ தெரியாது. சுருக்கமாக இந்த பட்டிமன்றத்தில் என்ன நடந்தது என்பதையும், அங்கு நடுவரால் கொடுக்கப்பட்ட தீர்ப்பையும் கூறி, எனது கருத்தையும் வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இங்கு தமிழ்ப்பெண்கள் என்று நடுவரால் விளக்கம் கூறப்பட்டவர்கள் தாயகத்திலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ்ப்பெண்கள் ஆவார். மேலும், இன்றைய உலக ஓட்டம் என்றால் முதலாளித்துவ பொருளாதார நிலமைகள் என்றும், மற்றும் பெண்கள் காலம், காலமாக இரண்டாம் தரபிரஜைகளாக நடத்தப்பட்டு வந்தமையும், மற்றும் இதற்காக பெண்கள் மேற்கொண்ட போராட்டங்கள் பற்றியும் நடுவரால் சுருக்கமாக உதாரணங்களுடன் கூறப்பட்டது.

சவால் என்ற தரப்பில் வாதாடியவர்கள் சீதனம் வாங்குதல், கணவனுக்கு சேவை செய்தல், மற்றும் அரசியல், சினிமாவில் பெண்களின் நிலமைகள் இவற்றை சுட்டிக்காட்டி தமது வாதத்தை முன்வைத்தார்கள். மேலும், அரசியலில் பெண்களின் நுழைவு தந்தை, கணவரின் இறப்பு.. இவற்றால் வந்த அனுதாபங்கள் காரணமாகவே நிகழ்ந்தன. பெண்களின் சுய ஆற்றல், ஆளுமை வெளிப்பாடு மூலம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு அரசியலில் 50:50 சமபலம் இல்லை.. இவ்வாறு கூறினார்கள்..

சாத்தியம் என்ற தரப்பில் வாதாடியவர்கள் சொத்துடமை - அதாவது பெண்களின் பொருளாதார மேம்பாடுகள், உடைகள் அணிவதில் பெண்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் இவை பற்றி பேசினார்கள். வெளிநாடுகளில் எமது தமிழ்ப்பெண்களின் அரசியல் பிரவேசம், மற்றும் அதில் கிடைத்துள்ள வெற்றிகள். அதுவும் மிகவும் இளம்வயதில் அரசியலில் நுழையக்கூடியதாக இருப்பது. மற்றையது, அரசியல் என்பதே ஒரு சாக்கடை, எனவே இதில் நுழைய பெண்கள், அதுவும் தமிழ்ப்பெண்கள் நுழைவதற்கு இதுவரை காலமும் ஆர்வம் காட்டாததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் ஆளுமைகள் - அவரால் நிகழ்த்தப்பட்ட சாத்தியப்பாடுகள் பற்றியும் கூறப்பட்டது..

இனி...

விவாதத்தில் பேசப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்:

  • யானையை அடக்கிய ஈழத்து பெண் ஒருவருக்கு நிகழ்ந்த கதி. அவர் ஊரில் இருந்த ஆண்களால் கூட முடியாத நிலையில் தனது புத்திசாதுர்யத்தையும், பலத்தையும் பாவித்து மதம் பிடித்த யானை ஒன்றை அடக்கி இருந்தார். ஆனால், சில நாட்களில் மிகவும் மர்மமான முறையில் இறந்துவிட்டார். பெண்கள் இப்படி ஆண்களால் முடியாத ஒன்றை செய்துவிட்டால் அவர்கள் கடவுளர்களாகவோ அல்லது தெய்வீக சக்தி பெற்றவர்களாகவோ இனம்காட்டப்பட்டு, சாதனைகள் செய்யும் பெண்களின் திறமைகள் எமது சமூகத்தினால் மூடிமறைக்கப்படுகின்றன என்று கூறப்பட்டது.

  • இந்தியா கணணித்துறையில் வேலை செய்வதற்கு 20 இலட்சம் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும், ஆனால், இரண்டு லட்சம் பேரை மாத்திரமே இந்தியாவில் இருந்து திரட்ட முடிந்துள்ளது என்றும், மிகுதி 18 லட்சம் தொழில்வாய்ப்புக்கள் தமிழீழ பெண்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கின்றது எனவும் கூறப்பட்டது. தமிழீழத்தில் திரும்பும் திசையெங்கும் கணணித்துறையில் கல்வி கற்ற போதனை நிலையங்கள் உருவாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த சவால் தரப்பில் பேசியவர், தமிழீழத்தில் மின்சாரம் இல்லை, பாதுகாப்பு இல்லை.. இப்போது கூட பதுங்குகுழிக்கு அருகில் இருந்து வாதம் செய்கின்றோம்.. இந்தியாவிற்கு போவதற்கு முதலில் வீசாவே கிடைக்காது... எமக்கு என்று ஒரு நாடு இல்லை. போர் நடைபெறுகின்றது. எனவே, இவற்றை சவாலாக எடுத்தால் மட்டுமே எதையும் சாதிக்கலாம் என்று கூறினார்.

  • 150 வருடங்களிற்கு முன் பெண்களிற்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை, வாக்குரிமை கேட்டு தெருவில் போராட்டம் செய்த பெண்கள் ஆண்களினால் கற்களால் வீசப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள். ஆனால், இன்று 17% அளவிற்கு அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது பெரிய விடயம் எனக்கூறப்பட்டது.

  • தமிழீழப் பெண்களிற்கு பல்வேறு துறைகளில் வாய்ப்புக்கள் கொடுப்பதற்கு தலைவர் பிரபாகரன் கதவுகளை அகலத்திறந்து உள்ளார் என்றும், போராளிப்பெண்களை தொடர்ந்து சாதாரண பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு சாதனைகள் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. எதிர்காலத்தில் தமிழீழம் ஏற்படும்போது பெண்கள் சகலதுறைகளிலும் கால்பதித்து மிளிர்வார்கள் என்றும் கூறப்பட்டது.

  • ஆண்களை விட பெண்களே பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பதாகவும், உலகில் உள்ள கோடீஸ்வரர்களில் பெண்களே அதிகளவில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

  • சவால் என்பது எப்போதும் 'ஆணாதிக்கத்தை எதிர்த்தல்' என்று தப்புக்கணக்கு போடுவது தவறானது என்று கூறப்பட்டது. ஆணாதிக்கம் மட்டுமே சவால் அல்ல என்றும், அதைவிட பல்வேறு முக்கியமான சவால்களை பெண்கள் எதிர்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டது.

நடுவரின் முடிவு?

இன்றைய உலக ஓட்டம் பெண்களுக்கு சவாலே! என்று தீர்ப்பு கூறப்பட்டது.

சரி இனி எனது தீர்ப்பு..

'இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே? சாத்தியமே?'

இந்த தலைப்பில் சிறு மாற்றம் செய்தபின், அதாவது 'இன்றைய உலக ஓட்டம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே? சாத்தியமே? என்று பார்த்தால் எனது தீர்ப்பு..

இன்றைய உலக ஓட்டம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப்பெண்களிற்கு சாத்தியமே!

சவால் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு குழந்தை என்று உலகில் பிறக்கின்றதோ அன்று தொட்டு அது இறந்துமடியும் வரை வாழ்க்கையில் தொடர்ந்து பல்லாயிரம் சவால்களை எதிர்நோக்கவேண்டும். தாயை அணைத்து பால் குடிப்பதில் இருந்து, தவழ்ந்து நடைபயிலுதல், பேசுதல், பள்ளிக்கு போதல், பெரிய ஆளாய் வளர்தல்.. இவை எல்லாமே சவால்களே. சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. சவால்களை எதிர்கொள்ளாமல் எதுவுமே சாத்தியப்படாது என்பது வெளிப்படை.

எனது அம்மா, அக்காமார், அண்ணி, உறவுப்பெண்கள், எனக்கு தெரிந்த இதர தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்தபின் வெளிநாடுகளில் எப்படி வாழ்கின்றார்கள் என்று பார்த்தால், மற்றும் இவைபற்றிய செய்திகளை அறியும் போது... இவர்கள் எவை, எவற்றையெல்லாம் சாதித்து உள்ளார்கள், சாத்தியமாக்கி உள்ளார்கள் என்று பிரமித்துப் போவேன். ஆண்களால் முடியாத பல வேலைளை, காரியங்களை இவர்கள் சாத்தியமாக்கி உள்ளார்கள்.

மற்றும் விவாதத்தில் கூறப்பட்ட ஒரு கருத்தை நான் எதிர்க்க விரும்புகின்றேன். தமிழீழப்பெண்கள் திருமணத்தின்பின் அம்மிக்கல் போல் சமையல் செய்து அரைபடுவதற்கு கனடா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றார்கள் என்று கூறப்பட்டது. நான் அறிந்தவரையில் எனக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது இப்படி நடக்கவில்லை. இங்கு ஆண்கள் பெண்களிற்கு சரிசமமாக சமையல் செய்கின்றார்கள். மனைவி வேலைக்கு போகும் நேரங்களில் வீட்டில் நிற்கும் கணவன் சமையல், குழந்தைகளை கவனிக்கின்றான்.

இங்கு ஒரு விடயம் கவனிக்கவேண்டும், தமிழீழத்தில் இருந்து கனடாவுக்கு வரும் பெண்கள்விடும் தவறுகளுக்காக இங்குள்ள ஆண்களை குற்றம் சொல்வதில் பயன் இல்லை. இவர்கள் விடுகின்ற பெரிய தவறு திருமணத்தின்பின் அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நினைப்பது. திருமணத்தின்பின் தமது ஆற்றல்களை தமிழ்ப்பெண்கள் விருத்தி செய்ய, வெளிப்படுத்த முயற்சி செய்யாமல் இருப்பது ஆண்களின் தவறல்ல, பெண்களின் தவறே!

இறுதியாக, இந்த தலைப்பில் இன்னுமொரு சிறு மாற்றம் செய்தபின், அதாவது 'இன்றைய உலக ஓட்டம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ஆண்களுக்கு சவாலே? சாத்தியமே? என்று பார்த்தால் எனது தீர்ப்பு..

'இன்றைய உலக ஓட்டம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ஆண்களுக்கு சவாலே!'

இதை விளங்கப்படுத்தத் தேவையில்லை. சற்று யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.

எனவே ஆரம்பத்தில் நான் இன்றைய உலக ஓட்டம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப்பெண்களிற்கு சாத்தியமே! என்று கூறிய தீர்ப்பின் தாற்பரியம் உங்களுக்கு இப்போது விளங்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த பட்டிமன்றத்தில் பங்குபற்றியவர்கள், தொலைக்காட்சி நிறுவனம் என்பனவற்றுக்கும், இதை இங்கு இணைத்த நிருவாகிக்கும் நன்றிகள்! வணக்கம்!

தெளிவற்ற தலைப்பின் கீழ் பட்டிமன்றம் நடத்தப்பட்டுள்ளது. இதன் தலைப்பை இன்னும் தெளிவாக்கி இருக்கலாம். அசாத்தியம் சவால் மூலமே சாத்தியமாகின்றது. எனவே சவாலே, சாத்தியமே என்று வினாவுவதில் அர்த்தம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.