Jump to content

தென் ஆபிரிக்காவை சர்வதேச கிரிக்கெட்டில் முதல் தடவையாக வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 SEP, 2024 | 10:30 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

1909_allah_moahmmed_ghazanfar.png

தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனமுற்றதால் பதில் தலைவராக ஏய்டன் மார்க்ராம் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பத்து ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா 7 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

1909_wiaan_muller_file_photo.png

ஆனால், வியான் முல்டர், 8அவது விக்கெட்டில் பிஜோன் போர்ச்சுய்னுடன் 39 ஓட்டங்களையும் 9ஆவது விக்கெட்டில் நண்ட்ரே பேர்கருடன் 30 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

வியான் முல்டர் 52 ஓட்டங்களையும் பிஜோன் போர்ச்சுய்ன் 16 ஓட்டங்களையும் டொனி டி ஸோர்ஸி 11 ஓட்டங்களையும் கய்ல் வெரின் 10 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

பந்துவீச்சில் பஸால்ஹக் பறூக்கி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும்  அல்லா மொஹமத்   கஸன்பார் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரஷித் கான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 26 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (25 ஆ.இ.), குல்பாதின் நய்ப் (34 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

அவர்களைவிட ரியாஸ் ஹசன், அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பிஜோன் போச்சுய்ன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின், கோலி சாதனைக்கு ஆபத்து; தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க செய்து அபார வெற்றிபெற்றது. முதல்முறையாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க செய்து வரலாற்றில் இடம்பிடித்தது ஆப்கானிஸ்தான்.

அதற்குபிறகு நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். குர்பாஸின் சதத்தால் 311 ஓட்டங்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 73 ஓட்டங்கள் வரை ஒருவிக்கெட்டை கூட இழக்காமல் அபாரமாக விளையாடியது. ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் விக்கெட் வேட்டை நடத்தினார். 73 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த 61 ஓட்டங்களுக்குள் மீதமிருக்கும் 9 விக்கெட்டையும் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

அபாரமாக பந்துவீசிய ரஷித்கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 வயது சுழற்பந்துவீச்சாளரான நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் படைத்த 5 சாதனைகள்..

1. விராட் கோலியின் சாதனை சமன்:

22 வயதான ரஹ்மனுல்லா குர்பாஸ் 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 23 வயதை எட்டுவதற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் (7 சதங்கள்) சாதனையை சமன்செய்துள்ளார் குர்பாஸ்.

முதலிடத்தில் 8 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார், நாளை நடைபெறவிருக்கும் 3வது போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்வார் ரஹ்மனுல்லா குர்பாஸ்.

2. அதிக ஒருநாள் சதங்கள்:

7வது ஒருநாள் சதத்தை அடித்திருக்கும் குர்பாஸ், அதிக சர்வதேச ஒருநாள் சதங்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

3. மிகப்பெரிய ஒருநாள் வெற்றி:

311 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவை 134 ரன்களில் ஆல்அவுட் செய்து 177 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் பெற்ற அதிக ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பு 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான்.

4. பிறந்தநாளில் சிறந்த பவுலிங்:

நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ரஷித் கான், பந்துவீச்சில் 9 ஓவருக்கு 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான நாளை கொண்டிருந்தார். இதன்மூலம் பிறந்தநாளில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்த வீரராக மாறி வரலாறு படைத்தார் ரஷித்கான். 17 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பிலாண்டர் (4/12) வைத்திருந்த சாதனையை பின்னுக்குதள்ளியுள்ளார் ரஷித் கான்.

5. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறை வெற்றி:

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக இதை செய்து சாதனை படைத்துள்ளது.

https://thinakkural.lk/article/309749

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள்! இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும் அநுரவை பிரதான வேட்பாளராக கருதி இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி இரண்டாவது எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்ட போதிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய எங்கள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400688
    • இந்த வரலாறை சுருக்கமாக, வேறு திரியில்  சொல்லியிருக்கிறேன் என்று நினைவு. குயிலி, அப்போதைய (இப்போதும்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் குயிலி வேலுநாகியருக்கும் தெரியாமல், சேலையின் உள்ள மடிப்புகளுக்குள் எண்ணையை பூசிக்கொண்டே சென்றதாகவே வாய்வழிக்கதை இருக்கிறது. இதை கிந்தியா மறைத்துவிட்டது. UK இல் இந்த வரலாற்றை, குறிப்பிட்ட தமிழ் பாடசாலையில்  நடிப்பு வடிவமாகமுன்னறிவித்தல் இன்றி  செய்த போது, அதிபரை தவிர வேறு எவருக்கும்  தெரிந்து இருக்கவில்லை என்பது எப்படி எமது வரலாற்றில் நாம் அக்கறை இல்லை என்பதை பார்க்க கூடியதாக இருந்தது.  
    • தேசிய உணர்வு என்பது அரியத்தாருக்கு ஆதரவு அளிப்பது அல்ல சாத்.  வடக்கு கிழக்கில் அரியத்தாரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள,. அவர்களெல்லாம் "நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வும் இல்லாத ." ஆட்கள் என்கிறீர்களா?  உங்கள் கருத்தின்படி நான் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற தமிழர் திருவிழாவில் பாடகர் சிறீநிவாஸ் அவர்களுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும். அல்லது அரியத்தாருக்கு ஆதரவாக அலட்ட வேண்டும். அப்போதுதான் நான் டமில் தேசியவாதி.  அதாகப்பட்டது மூழையைத் கழட்டி ஒருபக்கம் கடாசிவிட்டு புலம்பெயர்ஸ் போடும் காட்டுக் கூச்சலுக்கு அதலையை ஆட்னால் மட்டும்தான் நான்  டமில்த் தேசியவாதி. சுயமாகச் சிந்தித்தால் துரோகி.  உந்த முட்டாள் கூட்டத்தின் பார்வையில் நான் டமில் தேசியவாதியாய் இருப்பதைவிட இவர்களால்  துரோகியாக கருதப்படுவதே மேல் என நினைக்கிறேன்.  ✋   100% ✅
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.