Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவணைப் பரீட்சையில் வெற்றிபெற்றுவிட்டு மார்தட்டாதீர்கள் தேசிய பரீட்சையில் யாருக்கு வெற்றியென்பதைப் பார்ப்போம்

Featured Replies

ஜெயானந்த மூர்த்தி எம்.பி.தெரிவிப்பு

அரசாங்கம் இதுவரை தவணைப் பரீட்சைகளில் மட்டும் வெற்றிபெற்று மார்தட்டிக் கொள்வதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, விரைவில் தேசிய பரீட்சையாக வரவிருக்கும் யுத்தத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றது என்பது தெரிய வருமெனக் கூறினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ஜெயானந்த மூர்த்தி எம்.பி.இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"மக்களின் அவல நிலைமை தொடர்பாக முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் எந்த அக்கறையும் இன்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசாங்கம் அவசரகால சட்டத்தையும் அமுல்படுத்திக் கொண்டு வடக்கு, கிழக்கில் மக்களை அழிக்கும் நடவடிக்கைகளையே மேற் கொண்டு வருகிறது.

மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்யாத அரசாங்கம் சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக பாரிய பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக காட்டிக் கொள்கிறது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசினால் எந்த வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

வேலைத் திட்டங்களுக்கான வரைபுகள் கொழும்பில் வரையப் படுகிறபோதிலும் அவை அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. அங்கு வாழ்வாதார பிரச்சினைகள் கூட மக்களுக்கு நிறைவேற்றப்படவில்லை. மின் வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

வெறும் பருப்பையும் கோதுமை மாவையும் மட்டும் வழங்கிவிட்டு மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பரப்புரை செய்கிறது. அங்குள்ள மக்களுக்கு எந்த நிவாரணங்களும் வழங்காமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களை அரசுடன் ஒத்துழைத்து செயற்பட வருமாறு அழைப்பதில் எந்த நியாயமும் இல்லை.

இந்த அரசாங்கம் தான் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கை பிரித்தது. கிழக்கில் பாரிய வளமிருப்பதாக பசில் ராஜபக்ஷ கூறுகிறார். ஆனால், அந்த கிழக்கை அபிவிருத்தி செய்யாமல் அபகரிப்பதே அரசின் நோக்கம்.

இவ்வாறான நிலையில் எம்மை அழைத்தால் நாம் அதற்கு ஒரு போதும் சம்மதிக்கப் போவதில்லை. நாம் தமிழினத்தை காட்டிக் கொடுக்க மாட்டோம். விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று தமிழ் மக்கள் வாக்களித்தமையினாலேயே நாம் இந்தச் சபைக்கு வந்திருக்கிறோம். எனவே, நாம் எமக்கு வாக்களித்த மக்களை காட்டிக் கொடுத்து ஆசைவார்த்தைகளுக்கு ஏமாந்து உங்கள் பக்கம் வந்து விடமாட்டோம். எம்மை விலைக்கு வாங்க முடியாது.

விடுதலைப் புலிகள் ஆதரவு இல்லாமல் அரசாங்கத்தால் தனித்து பேச்சுகளை நடத்த முடியாது. வடக்கு-கிழக்கில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து எந்த பலனும் கிடையாது. ஏனெனில் அங்குள்ள மக்கள் அபிவிருத்தியை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையுமே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

விமல் வீரவன்ச பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருப்பது போல, அரசாங்கத்திலுள்ளவர்கள் முதல் தர பரீட்சைகளில் மட்டுமே சித்தியடைந்துள்ளனர். அதுவும் தவணைப் பரீட்சையில் மட்டுமே. இன்னும் தேசிய பரீட்சை ஒன்று இருக்கிறது. விரைவில் தேசியப் பரீட்சையாக வரவிருக்கும் அந்த யுத்தத்தில் தெரியும் யார் உண்மையில் வெற்றி பெற்றது என்பது. அப்போது உண்மையை உணர்ந்து கொள்வீர்கள் என்றார்.

http://www.thinakkural.com/news/2007/10/11...s_page38157.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவணைப்பரிட்சையிலும் இராணுவத்திற்கு கிடைத்தது வெற்றியல்ல. அதிக இடங்களைப்பிடிப்பது வெற்றியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.