Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சில பத்திரிகைகளை பார்க்கும் போது புலிகள் தான் அவற்றை நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் வருகிறது

Featured Replies

எழுதும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாமென்கிறார் ஜனாதிபதி

எமது நாட்டில் வெளியிடப்படும் சில பத்திரிகைகளை பார்க்கும் போது அதனை புலிகள் தான் நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, எதனையும் எழுதுவதற்குள்ள சுதந்திரத்தை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தினார்.

பெல்வத்தை சீனித் தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது;

"நான் யுத்தத்தை விரும்புவன் அல்ல. ஆனாலும், பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை எம்மால் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தற்போது வெகுதூரம் சென்றுவிட்டது.

பயங்கரவாதிகளின் கொலை வெறியினால் எமது பாதுகாப்புப் படையினர் பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவ்வேளையிலும் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வினை ஏற்படுத்த முயற்சி செய்தோம். அதுவும் பயனளிக்காததாலேயே, பதிலடியினை பயங்கரவாதிகள் மீது மேற்கொண்டோம்.

உலகில் எந்தவொரு நாட்டிலாவது, பயங்கரவாதிகளுக்கு உணவு வழங்கப்பட்டதா? சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டதா? காயப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அரச மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டதா? இல்லை. ஆனால், எமது நாட்டில் மேற்கூறப்பட்டவைகள் அனைத்துமே பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகளானது எமது மனித நேயத்தின் வெளிப்பாடேயாகும்.

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைக்கு பயங்கரவாதிகளே முக்கிய காரணகர்த்தாக்களாவர். இந்நிலையிலும், எமது நாட்டைச் சேர்ந்தவர்கள், புலிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு நல்லுறவுகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச நாடுகளுக்கும் இவர்கள் சென்று, இலங்கைக்கு எவ்வகையிலும் நிவாரணங்களையோ, கடனையோ வழங்க வேண்டாம். இலங்கை இன்று வங்குரோந்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றனவென்றெல்லாம் அந்நாட்டுத் தலைவர்களுக்கு கூறி வருகின்றனர்.

இத்தகைய துரோகிகளுக்கு, இந் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தினைப் புகட்ட வேண்டும்.

இத்துரோகிகளுக்கு ஊடகங்கள் சிலவும் உதவிகளைச் செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. எமது நாட்டில் பிரசுரமாகும் சில பத்திரிகைகளை பார்க்கும் போது புலிகள் இவற்றை நடத்துகின்றனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.

பத்திரிகைகளை பிரசுரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் அனைவருக்கும் உரிமையுண்டு. எதையும் எழுதுவதற்கும் சுதந்திரம் உண்டு.

இருக்கும் அச் சுதந்திரத்தினை தப்பான வழிக்கு பயன்படுத்தக்கூடாது. நாம் பிறந்த மண்ணுக்கும் இந்நாட்டிற்கும் துரோகமிழைக்க கூடாது.

பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்வதற்கு பெருமளவிலான நிதி செலவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையிலும் நாட்டின் துரித அபிவிருத்தியை முன்வைத்து பாரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கென பெருந்தொகைப் பணத்தை விரயம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

நாம் பதவியேற்ற இக்குறுகிய காலத்தில் இரண்டு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், பொருட்களின் தீர்வை வரியை அகற்றி, இயன்றளவில் பொருட்களின் விலையினைக் குறைப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளேன். அதற்கென கூட்டுறவுச் சங்கக்கடைகளை சக்திமயப்படுத்தி, அக்கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் என்மீது வைத்துள்ள அபார நம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. அரச நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்படமாட்டாது. புதிதாக மேலும், அரச நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கென, சர்வதேச நாடுகளின் உதவிகள் எமக்கு தேவைப்படுகின்றன. அதற்காக எட்டு சர்வதேச நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளேன். எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி சிங்கப்பூர், மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளேன்.

கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இன்று கிராமங்கள் வரை சென்றுவிட்டன. இதன்மூலம் கிராமங்களில் புத்தெழுர்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

வருடக் கணக்காக கைவிடப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவற்றுக்கு ஆரம்ப விழாவினை நடத்தி வருகின்றோம்.

என்னால் இந்நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறையவேயுள்ளன. அப்பணியினை மேற்கொள்வதற்கு மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை முறைப்படியும், கிரமமாகவும் ஆற்றுவேன்.

ஐக்கிய தேசியக்கட்சியினர் சமஷ்டி முறையினை விட்டு விலகிச் சென்றுள்ளனரென்று அறிய முடிகின்றது. இனியும் அவர்கள் காலம் தாழ்த்தக்கூடாது. இந்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் தேசியப் பிரச்சினைக்கு எம்முடன் ஐ.தே.கட்சியினரும் இணைந்து பொதுவானதோர் தீர்வினை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

அரசியல் ரீதியிலான கருத்து முரண்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு, தேசியப் பிரச்சினைக்கு, முற்றுப்புள்ளி வைக்க ஐ.தே.கட்சியினரும் எம்முடன் இணைய வேண்டும். ஏற்கெனவே, ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் அனைவரும், இந்நாட்டை கட்டி எழுப்புவதற்கும், தேசிய பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்துவதற்குமே எம்முடன் இணைந்துள்ளனர். இவர்கள் போன்று ஏனையவர்களும் எம்முடன் இணைய வேண்டியது காலத்தின் அவசியமாகவுள்ளது.

இன்று ஆளும் கட்சி சார்பாக 119 பேர் பாராளுமன்றத்தில் இருந்து வருகின்றனர். பலம் பொருந்திய அரசாகவே எமது அரசு இயங்கிக் கொண்டிருக்கின்றது".

மற்றும் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா, மகளிர் விவகார அமைச்சர் சுமேத ஜி ஜயசேன, அமைச்சர் தர்மதாச பண்டா, ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்

http://www.thinakkural.com/news/2007/10/11...s_page38152.htm

நியாயத்தைச் சுட்டிக்காட்டுவதும், அநியாயத்தைத் தட்டிக் கேட்பதும், பத்pதரிகைத்தருமம். மகிந்தவிற்கும் இந்த விடயம் தெரிந்ததினால்தான் இந்தக் கருத்து வெளிவந்தது. நியாயம் தமிழர் பக்கம் இருப்பதில் எந்த சந்தேகமுமில்லை. பத்திரிகைகளுக்கும் அது தெரிந்தேயிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.