Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும்  திங்கட் கிழமை அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற மேஜனர் ஜெனரல் சுரேஸ் சாலேயின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுரேஸ் சாலே ஓய்வு

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே நேற்றையதினம் முதல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம் | Director Of State Intelligence Resigns

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் இணைப்பாளர் ஆசாத் மௌலானாவை கோடிட்டு, சுரேஸ் சாலே மீது குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் அதனை சுரேஸ் சாலே மறுத்திருந்தார்.

அத்துடன் அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சுரேஸ் சாலே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்கத்கது.

https://tamilwin.com/article/director-of-state-intelligence-resigns-1728121177

 

  • கருத்துக்கள உறவுகள்

அரச புலனாய்வு சேவைகளின் தலைவராக கடமையாறிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இலங்கையில் நடைபெற்ற பலவேறு குற்றச்செயல்களின் சூத்திரதாரியாக கருதப்படுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கை பாராளமனறத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது அமைச்சர் மனுஷ நாணயக்கார முதல் அனுர குமார திசாநாயக்க வரை பலரும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களுக்கு மேற்படி குண்டு தாக்குதல்தாரிகளுடன் இருந்த தொடர்பு குறித்த ஆதாரங்களை முன் வைத்து இருக்கின்றார்கள். குண்டுதாரிகளுக்கும் புலனாய்வு சேவையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற தொடர்பாடல் மற்றும் பயன்படுத்தப்பட்ட Sonic-Sonic என்கிற Code word வரை பல்வேறு தகவல்கள் குறித்த விவாதங்களின் போது வெளியிடப்பட்டு இருக்கின்றன. தென்னிலங்கை செயல்பாட்டாளர்களில் ஒருவரான வண பிதா Cyril Gamini Fernandoஅவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பிண்ணனியில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களுக்கு இருந்த தொடர்பு குறித்த பலவேறு தகவல்களை கடந்த காலங்களில் வெளியிட்டு இருக்கின்றார்

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு வரை பிள்ளையான் குழு , ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுக்கள் போன்று சஹ்ரான் குழுவும் இலங்கை அரச புலானய்வு சேவையில் இணைக்கப்பட்டு இருந்தது தொடர்பான தகவல்களை வெளியிட்டு இருக்கின்றார். இது தவிர, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொட போன்ற பல்வேறு கொலைகளின் பின்னணியிலும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் தான் இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் ஆவா குழு முதல் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட கிரீஸ் மனித தாக்குதல் உட்பட பல சம்பவங்களின் பின்னணியிலும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்கள் இருந்ததாக முன்னாள் சுகாதார அமைச்சர் திரு ராஜித சேனாரத்ன அவர்கள் பதிவு செய்து இருந்தார். இறுதி யுத்தத்தின் பொது கைது செய்யப்பட்ட தமிழ் வைத்தியர்களை துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஊடக பத்திரிகையாளர் மாநாட்டில் பொய் சொல்ல தூண்டிய சூத்திரதாரியாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களை சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான அமைப்பு அடையாளம் காட்டி இருக்கின்றது.

பிள்ளையான் குழுவில் இருந்து தப்பி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்து இருக்கின்ற அசாத் மௌலானா என்கிற முஸ்லீம் நபரும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்கள் பிள்ளையானை பயன்படுத்தி பலவேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார் என வெளியிட்ட செய்திகளை Daily mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது.  கோட்டாபயராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கருதப்படுகின்றார்

மேற்படி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களை காட்டாய ஓவுதியத்துக்கு அனுப்பியது, தற்போதைய அரசாங்கம் சரியான பாதையை நோக்கி பயணிக்கின்றது எனக்கொள்ளலாம்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.