Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றின் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இறக்கு செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  

அத்தோடு அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு கட்டம் கட்டமாக 25,000 ரூபா உர மானியக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விரைவில் மீனவர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.  

இன்று  செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

தற்போது வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

எனவே தான் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரியை 50 ரூபாவிலிருந்து 60 ரூபா வரை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கும், வெங்காயதுக்கான இறக்குமதி வரியை 10 ரூபாவிலிருந்து 30 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இந்த தீர்மானத்தால் தேசிய உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியும்.  

அத்தோடு விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. எனினும் தேர்தல் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியது. எவ்வாறிருப்பினும் விவசாயிகள் மற்றும் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய தேர்தல் ஆணைக்குழு அதற்கு அனுமதியளித்துள்ளது.  

அதற்கமைய தற்போது ஒரு ஹெக்டயாருக்கு 10,000 ரூபாவாகக் காணப்படும் உர மானியம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான நடவடிக்கை அடுத்த வாரம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமாக 15,000 ரூபாவும், இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்கப்படும்.  

அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை, மகாவலி வலயத்திலுள்ள விவசாயிகளுக்கு படிப்படியாக உர மானியக் கொடுப்பனவு வழங்கப்படும். இதுவரையில் 2 பில்லியன் ரூபா அந்தந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய தொகையும் விரைவில் வழங்கப்படும். மேலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்களால் மீனவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.  

எனினும் கடந்த வாரம் டீசல்மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டன. விலை குறைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நிவாரணத்துக்கு அப்பால், எரிபொருள் விலை நிவாரணத்தை வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நியாயமான முறையில் இந்த எரிபொருள் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது ; அடுத்த வாரம் முதல் 25 000 ரூபா உர மானியம் - அரசாங்கம்! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.