Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் தசுன் ஷானக்க இல்லை

image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 17 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக கண்டியில் ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 தொடரில் 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்து சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்கவுக்கு  மிண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி  ரி20  போட்டியில் அறிமுகமான சமிந்து விக்ரமசிங்க அப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரண, நுவன் துஷார, துடுப்பாடட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இடைக்காலப் பயிற்றுநராக இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய சனத் ஜயசூரிய, முழு நேரப் பயிற்றுநராக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருடன் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார்.

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும். அப் போட்டிகள் அக்டோபர் 13, 15, 17ஆம் திகதிகளில் இரவு போட்டிகளாக நடத்தப்படும்.

இலங்கை குழாம்

சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, ஜெவ்றி வெண்டசே, சமிந்து விக்ரமசிங்க, நுவன் துஷார, மதீஷ பத்திரண, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ.

https://www.virakesari.lk/article/195902

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ரி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் சரித்த அசலங்க அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோமாரியோ ஷெபேர்ட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ப்ரண்டன் கிங்க் அதிகபட்சமாக 63 ஓட்டங்களையும், இவின் லெவிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கை அணி சார்பில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்த ரி 20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

https://thinakkural.lk/article/310673

  • கருத்துக்கள உறவுகள்

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌ ப‌டியால் தான் இல‌ங்கை அணி நேற்று தோத்த‌து...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுழற்சியில் மண்டியிட்டது மே. தீவுகள்: தொடர் 1 - 1 என சமனானது

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தனது சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளை திணறச் செய்த இலங்கை 73 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என இலங்கை சமப்படுத்தியது.

இடதுகை சுழல் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே தனது ரி20 அறிமுகப் போட்டியில் முன்வரிசை வீரர்கள் மூவரின் விக்கெட்களைக் கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆட்டங்காணச் செய்தார்.

அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட மற்றைய சுழல்பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் 6 விக்கெட்களைப் பகிர்ந்தனர். வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண  எஞ்சிய விக்கெட்டைக் கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் இரட்டை இலக்க மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் பவர் ப்ளேயில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் இன்றைய போட்டியில் பவர் ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்து 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அணித் தலைவர் ரோவ்மன் பவல் (20), அல்ஸாரி ஜோசப் 16 ஆ. இ.) ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் (14) ஆகிய மூவரே மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக இரட்டை  இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஸ் தீக்ஷன 3.1 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  மதீஷ பத்திரண 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கையின் ஆரம்பம் ஆக்ரோஷமாக இருந்தபோதிலும் 13 ஓவர்களுக்கு பின்னர் ஓட்ட வேகம் சிறிது மந்தமடைந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 10 ஓவர்களில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குசல் பெரேரா 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பெத்தும் நிஸ்ஸன்க 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

முதலாவது போட்டியில் அரைச் சதங்கள் பெற்ற கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த இப் போட்டியில் அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

https://www.virakesari.lk/article/196392

  • கருத்துக்கள உறவுகள்

தெட‌ரை வென்ற‌து இல‌ங்கை அணி

 

இல‌ங்கை அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏😍................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத்  தீவுகளை  நையப்புடைத்து 9 விக்கெட்களால் வென்ற இலங்கை தொடரையும் (2 - 1) கைப்பற்றி வரலாறு படைத்தது

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3ஆவதும் திர்மானம் மிக்கதுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் முன்வரிசை வீரர்களின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 9 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.

1710_kusal_perera.png

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது.

1710_kusal_mendis_mom.png

அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் இலங்கை வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.

1710_pathum_nissanka_mos.png

2016இல் நடைபெற்ற தோடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் 2020இலும் 2021இலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு  இரண்டாவது போட்டியில்   நிர்ணயித்த 163 ஓட்டங்கள் என்ற அதே வெற்றி இலக்கை நோக்கி இந்தப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 32 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 22 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஆரம்பத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை வேகமாக பெற்றார். அவருக்கு இணையாக குசல் பெரேராவும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 76 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை இலகுவாக்கினர்.

குசல் மெண்டிஸ் 50 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 68 ஓட்டங்களுடனும் குசல் பெரேரா 36 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

இரண்டாவது போட்டியில் அரைச் சதம் குவித்த எவின் லூயிஸ் முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய 12ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களாக இருந்தது.

முன்வரிசையில் ப்றெண்டன் கிங் 23 ஓட்டங்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட ஷாய் ஹோப் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் ரோவ்மன் பவல், குடாக்கேஷ் மோட்டியும் ஆகிய இருவரும் 26 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிது தெம்பைக் கொடுத்தனர்.

மோட்டி 15 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ரோவ்மன் பவல் 7ஆவது விக்கெட்டில் ரொமாரி ஷெப்பர்டுடன் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ரோவ்மன் பவல் 27 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்; தொடர்நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க

https://www.virakesari.lk/article/196537

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த‌ ம‌ண்ணில் இல‌ங்கைய‌ அன்மைக் கால‌மாய் வெல்வ‌து சிர‌ம‌ம்

 

பெரிய‌ ம‌லையான‌ இந்தியாவை ஒரு நாள் தொட‌ரில் வென்றார்க‌ள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டக்வேர்த் லூயிஸ் முறைமையில் மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட்களால் வென்றது இலங்கை; மதுஷ்க, அசலன்க ODI வெற்றியை சுலபமாக்கினர்

image

(நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 5 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றிகொண்டது.

2010_nishan_madushka_sl_vs_wi.png

அறிமுக வீரர் நிஷான் மதுஷ்க, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 137 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன.

2010_sherford_rutherford_wi_vs_sl.png

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என  இலங்கை  முன்னிலை வகிக்கிறது.

2010_rain_interupted_play_for_3and_half_

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 38.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

2010_charith_asalanka_sl_vs_wi.png

ஷேர்ஃபேன் ரதபர்ட் 74 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரைவிட கியேசி கார்ட்டி 37 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பிற்பகல் 5.00 மணிக்கு தடைப்பட்ட ஆட்டம் 3 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் இரவு 8.25 மணிக்கு தொடர்ந்தபோது இலங்கைக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இல க்கு  37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 31.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை துடுப்பெடுத்தாடியபோது முன்வரிசை வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (5), குசல் மெண்டிஸ் (13), சதீர சமரவிக்ரம (18) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (45 - 3 விக்.)

அறிமுக வீரரரும் ஆரம்ப வீரருமான நிஷான் மதுஷ்கவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 109 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபமாக்கினர்.

நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 69 ஓட்டங்களையும் சரித் அசலன்க 71 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே (18 ஆ.இ.), கமிந்து மெண்டிஸ் (30 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

https://www.virakesari.lk/article/196738

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவு அணி வீர‌ர்க‌ள் இல‌ங்கை அணியிட‌ம் தொட‌ர்ந்து தோல்வி அடையின‌ம்........................சொந்த‌ தீவுக‌ளில் அங்கினேக்க‌ ந‌ல்லா விளையாடுவின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு போனால் தோல்வியுட‌ன் நாடு திரும்புவின‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ரை இல‌ங்கை சிம்பிலா வென்று விட்டின‌ம்......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 5 விக்கெட் வெற்றியில் முக்கிய பங்காற்றிய தீக்ஷன, ஹசரங்க, அசலன்க; தொடரும் இலங்கை வசமானது

image

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

கண்டி, பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதம் இருக்க 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை தனதாக்கிக்கொண்டது.

மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகளும் அணித் தலைவர் சரித் அசலன்கவின் திறமையான துடுப்பாட்டமும் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.

இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் ஆட்டத்தை ஆரம்பிப்பதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

போட்டி பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அணிக்கு 44 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளால் நிர்ணயிக்கப்பட்ட 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 38.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இலகுவாக வெற்றிபெற்றது.

அவிஷ்க பெர்னாண்டோ (9) குசல் மெண்டிஸ் (3) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். (25 - 2 விக்.)

இந் நிலையில் நிஷான் மதுஷ்கவும் சதீர சமரவிக்ரமவும் ஜோடி சேர்ந்து 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

நிஷான் மதுஷ்க 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 112 ஓட்டங்களாக இருந்தபோது சதீர சமரவிக்ரம (38) அநாவசியமாக சுவீப் ஷொப் அடிக்க விளைந்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

தொடர்ந்து அணித் தலைவர் சரித் அசலன்கவும் ஜனித் லியனகேயும் 5ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜனித் லியனகே 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸுடன் இணைந்து வெற்றியை உறுதிசெய்தார்.

சரித் அசலன்க 61 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 36 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகியோரின் சுழற்சியில் சிக்கித் திணறிய மேற்கிந்தியத் தீவுகள் 16ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 58  ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

முன்வரிசையில் ப்றெண்டன் கிங் (16) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களாக இருந்தபோது அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி (31) கொடுத்த மிக உயரமான, ஆனால் இலகுவான பிடியை ஜனித் லியனகே தவறவிட்டது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட், குடாகேஷ் மோட்டி ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 119 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக ப்றிஜ்டவுனில் 2022இல் அல்ஸாரி ஜோசப், யனிக் காரியா ஆகியோர் பகிர்ந்த 85 ஓட்டங்களே இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளின் 9ஆம் விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்ட சாதனையாக இருந்தது.

ரதர்ஃபர்ட் 82 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் மோட்டி 6 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மஹீஷ் தீக்ஷன

https://www.virakesari.lk/article/196956

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ர் ம‌ழையால் தொட‌ர்ந்து த‌டை ப‌டுது😉.....................

  • கருத்துக்கள உறவுகள்

................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லூயிஸ், ரதஃபர்ட் அதிரடிகளால் மே. தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி; ஒருநாள் தொடர் 2 - 1 என இலங்கை வசமானது

image

(நெவில் அன்தனி)

கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (26) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 8 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பறிகொடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்திருக்கும் என்பது நிச்சயம்.

இப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்த இலங்கை 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது.

இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை தம்புள்ளையில் ரி20 வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 2 ரி20 போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவி இப்போது கடைசிப் போட்டியில் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது.

ஒருநாள் தொடரின் கடைசிப்  போட்டியில்   உபாதைக்கு மத்தியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி ஓட்டங்களுடன் சதத்தைப் பூர்த்தி செய்த எவின் லூயிஸும் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற ஷேர்ஃபேன் ரூதஃபர்டும்  பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர்.

மழை காரணமாக நாணய சுழற்சி தாமதிக்கப்பட்ட போதிலும் போட்டி சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது.

உபாதையிலிருந்து முழுமையாக குணமடைந்த பெத்தும் நிஸ்ஸன்க மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் நிஷான் மதுஷ்கவுக்கு விடுகை வழங்க்பபட்டது.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே நீக்கப்பட்டு நிஷான் மதுஷன்க இணைத்துக்கொள்ளப்பட்டார்.

மழையினால் ஆட்டம் 5 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றபோது 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 23 ஓவர்களில் 193 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு அமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 196  ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

எவின் லூயிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மூன்று இணைப்பாட்டங்களில் பங்கேற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது 5.4 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் எவின் லூயிஸ், அணித் தலைவர் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷாய் ஹோப் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 2 விக்.)

எனினும் எவின் லூயிஸ், ஷேர்ஃபேன் ரதஃபர்ட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர்.

எவின் லூயிஸ் 61 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடனும் ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 26 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

எவின் லூயிஸ் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் அவற்றில் 3 சதங்கள் இலங்கைக்கு எதிராக குவிக்கப்பட்டவையாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் 81 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓடட்ங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் மழை பெய்ததால் பிற்பகல் 3.42 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஒய்ந்த பின்னர் ஆட்டம் இரவு 8.50 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 23 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அதிரடியில் இறங்கிய குசல் மெண்டிஸ் தொடர்சியாக 4 பவுண்டறிகளை விளாச இலங்கையின் ஓட்ட வேகம் அதிகரித்தது.

அணியில் மீண்டும் இணைந்த பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவரும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 26 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் சரித் அசலங்க ஓட்ட வேகத்தை அதிரிக்க விளைந்து சிக்ஸ் ஒன்றை மட்டும் விளாசி ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 22 பந்துகளில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகன்: எவின் லூயிஸ், தொடர்நாயகன்: சரித் அசலன்க.

https://www.virakesari.lk/article/197206

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ கிழ‌மை 

இங்லாந் அணி கூட‌ வெஸ்சின்டீஸ் அணி அவ‌ர்க‌ளின் தீவுக‌ளில் விளையாட‌ போகின‌ம்.................பாப்போம் ஒரு நாள் தொட‌ரையும் 

 

20ஓவ‌ர் தொட‌ரை சொந்த‌ தீவில் வெல்லுவின‌மான்னு...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.