Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்; அரசியல் தலைவர்கள் கூட வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்படும் - இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர்

image

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையேற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுரமத்தேகொட  தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கேள்வி ; ஒவ்வொரு வருடமும் இலங்கை ஜெனீவாவில் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றது-ஐக்கிய நாடுகளின் ஹேக் தீர்ப்பாயத்தில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வை காணத்தவறியதன் மூலம் நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என நீங்கள் கருதுகின்றீர்கள்? நாங்கள் என்ன செய்யவேண்டும்?

பதில் ; இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய பின்னர் நான் ஹேக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இணைந்துகொண்டேன்.

முன்னைய யுகொஸ்லோவியாவில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் இசர்வதேச சட்டங்கள் பாரதூரமான முறையில் மீறப்பட்டமைக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்காக அந்த தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டது.

யுகொஸ்லோவியாவில் ஜனாதிபதி ஸ்லோபடான் மிலோசெவிக் காலத்தில் - 1990 - 91 இல் யுத்தம் மூண்டது உங்களில் பலருக்கு தெரியும்.

ஜனாதிபதி டிட்டோ உயிரிழந்த பின்னர்இயுகொஸ்லோவிய கூட்டமைப்பு பல துண்டுகளாக சிதறியதுஇஅவற்றிற்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இது யுத்த குற்றங்களிற்கு வழிவகுத்ததுஇஇந்த விவகாரம்  குறித்தும் பாரதூரமான மீறல்கள் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து  ஆராய்வதற்காக ஐக்கியநாடுகள் தீர்ப்பாயமொன்றை ஏற்படுத்தியது.

நான் அந்த தீர்ப்பாயத்தின் வழக்கறிஞர் அலுவலகத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றினேன்.

ICTY-Full-Form.jpg

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே இலங்கைக்கு  எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் வெளியாக  ஆரம்பித்தன.

அமெரிக்க காங்கிரசில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது .அந்த அறிக்கை அப்போதைய இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன்இநாங்கள் அந்த அறிக்கையை ஆராய்;ந்து  ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தோம்.

யுத்த குற்றங்கள் குறித்த எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால்இகண்மூடித்தனமான கொலைகள்இசர்வதேச சட்டங்களை பாரியளவில் மீறுதல்இயுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

சர்வதேச சட்டங்களின் கீழ் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு எங்களிற்குள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் விசாரணைகைள முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கும் ஆய்வுக்கட்டுரையொன்றை நான் 2010 இல் இடம்பெற்ற தேசிய சட்டமாநாட்டில் சமர்ப்பித்திருந்தேன்.

ஆயுதபடையை சேர்ந்தவர்களோ அல்லது வேறு யாரோ யுத்த குற்றங்களிற்கு காரணமாகயிருந்தால் அவர்களை விசாரணை செய்யவேண்டும்.

இதனை மூடிமறைக்க முயல்வதால் எந்த பயனும் ஏற்படாது.

யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை உலகின் எந்த மூலையிலும் கைதுசெய்யலாம்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் இந்த விடயத்தினை கவனத்தில் எடுத்தால் இஅந்த நபரை கைதுசெய்யலாம்.

அவர்கள் பொதுமக்கள் அல்லது அதிகாரிகளாயிருந்தாலும் சரி படைத்தரப்பினராகயிருந்தாலும் சரி அவர்களை கைதுசெய்யலாம்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு என்ன நடந்தது என பாருங்கள்இயுத்த குற்றங்களிற்காக சர்வதேச நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.

அவரது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  பிடியாணையை பயன்படுத்தி நபரை கைதுசெய்யலாம்.

யுத்த குற்றங்களிற்காக தண்டனை அனுபவிக்கும் ஏனைய தலைவர்கள் உள்னனர்.

அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்இஅவர்கள் விசாரணை செய்யப்பட்டனர் தற்போது யுத்த குற்றங்களிற்காகவும் ஜெனீவா சாசனத்தின்  ஏனைய மீறல்களிற்காகவும்  தண்டனையை அனுபவிக்கின்றனர்.

இதுபோன்று நாங்களும் செயற்படவேண்டும்.நான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.ஏனையவர்கள் வேறு கருத்துக்களை கொண்டிருக்கலாம்இ  ஆனால் நாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என  உறுதியான கருத்தினை நான் கொண்டுள்ளேன்.

அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரகைளை முன்னெடுக்கவேண்டும்இ இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் என்ன செய்யும்? எங்கள் குற்றவாளிகளை விசாரணை செய்வதற்காக நாங்கள் சர்வதேச தீர்ப்பாயத்தினை அமைப்போம்.

ஆனால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.இது எங்களிற்கு சிறந்த விடயமாக விளங்கும்.

அனைத்து பிரதிவாதிகளிற்கும் கிடைக்ககூடிய அனைத்து உரிமைகளுடன்இநியாயமான விசாரணைகளை உறுதி செய்துஇஎங்கள் நீதிமன்றங்களில்இஎங்கள் நீதித்துறை அமைப்பிற்குள் இந்த விடயங்களை கையாண்டு வழக்குகளை நடத்துவது இலங்கை நீதிமன்றங்களிற்கு சிறந்த விடயமாக அமையும்.

கேள்வி ; நீங்கள் சரியாக சொன்னது போல எங்கள் இராணுவ அதிகாரிகள் சிலரால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றதுஇ அவர்களிற்கு விசா வழங்க மறுக்கின்றனர்.

தற்போது புதிய அரசாங்கம் உள்ளது இ நாங்கள் ஜெனீவாவிற்கு சென்று வாக்குறுதியளித்துவிட்டு வந்து இங்கு அதனை கைவிடுகின்றோம்இவேறு எதனையோ செய்கின்றோம்- இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?

mullivaikal11.jpeg

பதில் ; நீங்கள் சொன்னது சரிஇஅவ்வேளை ( யுத்தம் இடம்பெற்றவேளை) உயர் பதவிவகித்த சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் பலர் அவர்களிற்கு விசா வழங்கப்படாததால் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

சிலருக்கு எதிராக ஏற்கனவே சில நாடுகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.இதன் காரணமாக இந்த காரணத்திற்காக நாங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்து போதுமான ஆதாரங்கள் இருந்தால்இநீதிமன்ற விசாரணைகளிற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தால்இநாங்கள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.

புதிய அரசாங்கம் இது குறித்து சிந்திக்கவேண்டும் அவர்கள் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கவேண்டும் இது சர்வதேச அளவில் அவர்கள் குறித்த நம்பகதன்மையை உயர்த்தும்.

சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் நாங்கள் செயற்பட்டால் சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கை புறக்கணிக்கப்படும் நிலை மாறும்.

நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதியில்லைஇரோம்சட்டம் குறித்து எனக்கு தெரியும்.

சில சட்ட நிபுணர்கள் இதனை மறுக்க கூடும் ஆனால் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் பொறிமுறை மூலம் இங்கு இழைக்கபட்ட யுத்த குற்றம் குறித்து விசாரணை செய்வதற்கான வழிவகையுள்ளது.

இது இடம்பெற்றால் எங்களின் இராணுவத்தினர் மாத்திரமல்ல அரசியல் தலைவர்களும் வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்படும்.இதன் காரணமாக எங்களின் விடயங்களிற்கு நாங்களே தீர்வை காண்பது சிறந்தது.

இலங்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் வந்து தீர்ப்பு வழங்குவதை விட இலங்கை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடுப்பது சிறந்தது.

புதிய அரசாங்கம் இந்த கோணத்தில் ஆராய்ந்து சர்வதேச அரங்கில் இலங்கை குறித்த நம்பகதன்மை மீண்டும் ஏற்படுவதற்கு வழிசெய்யும் என நம்புகின்றேன்.

https://www.virakesari.lk/article/196031

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.