Jump to content

‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,DOORDARSHAN

படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா
18 அக்டோபர் 2024, 13:23 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’, என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட பிரசார் பாரதி

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து பிரசார் பாரதி இது குறித்து ஒரு விளக்கக் குறிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'தவறுக்கு மன்னிப்பு கோருவதாக' அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பித்த, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில், ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார்’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழையோ, அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவரிடம் இல்லை. வேண்டும் என இதனை யாரும் செய்யவில்லை,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இனவாதக் கருத்து’ - ஆளுநரின் பதில்

இந்தச் சர்ச்சை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டாலினின் குற்றச்சாட்டு ‘பொய்யானது’ என்றும், ‘இனவாதம்’ என்றும் கூறியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் அவரது பதிவில், “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச் சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் [மு.க.ஸ்டாலினுக்கு] நன்றாகத் தெரியும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,” என்று கூறியிருக்கிறார்.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘இனவாதக் கருத்துக்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் தான் இருப்பதாக’ ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரலாறு

இந்நிலையில், 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? என்பதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கலாம்.

இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891-இல் வெளியான தமது 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா.

1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

அன்றே நீக்கப்பட்ட வரிகள்

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்

உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்"

என்பவையே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்
படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்...

மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், இந்தப் பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.

மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89

படக்குறிப்பு, 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது

பாரதிதாசன் பாடல் பரிசீலனை

பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானது

இதற்கு முந்தைய சர்ச்சை

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைச் சுற்றி அரசியல் சர்ச்சை உருவாவது இது முதல்முறை அல்ல.

2018-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றிவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து அப்போது பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். "மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்" என்று கூறிய அவர் "இது எங்கள் சம்பிரதாயம்" என்றும் தெரிவித்தார்.

தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்" என்று கூறிய அந்த நிர்வாகி, "தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து 2021-ஆம் ஆண்டு, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

(இந்தக் கட்டுரையில் 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானபோது பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து தகவல்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
இப்பாடலில் இரண்டாம் பத்தியில்....
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே"
என தனித்தே வருகின்றது.
இவ்வரிகளை சேர்த்துப் பாடினால் முன்னுள்ள திராவிட திருத்தம் தெரிந்துவிடும் அபாயம் தவிர்க்கவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
"தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்" என்பதை.
"திராவிடநல் திருநாடும்" என மாற்றி பாடபட்டிருக்கிறது.
அறத்தோடு சிந்தியுங்கள்
அடையாளம் மறைக்கும் சூழ்ச்சி யாரால் இயற்றப்பட்டது என்பதை அறிந்துத் தெளிக தமிழினமே.?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் எனும் சொல் தமிழ்நாட்டிற்கு ஏன்?
தேவையில்லாத ஆணிய புடுங்குவதே சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது? டிடி தமிழ் சொல்வது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம்,DD TAMIL

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 18 அக்டோபர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

"தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை," என டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக அந்த விழாவில் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

'தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்' என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின் .

டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழாவில் என்ன நடந்தது? ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தி.மு.க கொதிப்பது ஏன்?

 

என்ன நடந்தது?

சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதைப் பாடியவர்கள், 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடினர். டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

'தேசிய கீதத்தில் திராவிடம்' - ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்' எனப் பதிவிட்டுள்ளார்.

'சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்' என ஆளுநர் ஆர்.என்.ரவியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின், 'இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் ஆளுநர் இழிவுபடுத்துகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

'திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?' என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம்,X/MKSTALIN

டிடி தமிழ் அளித்த விளக்கம்

இதுகுறித்து, டிடி தமிழ் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. " ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்' என்று சக ஊழியர்கள் வந்து கூறினர்.

அவர்கள் பாடும்போது மேடையின் பின்பக்கம் ஏதோ இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்த வார்த்தை தவிர்க்கப்பட்டுவிட்டது" என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடர்ந்து, டிடி தமிழ் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

'தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச் சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டுவிட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளது.

மேலும், 'தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இதுதொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம்,X/DDTAMILOFFICIAL

ஆர்.என்.ரவி பேசியது என்ன?

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, "தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு உள்ளது என நினைத்தேன். இங்கு பரவலாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சென்று பேசும்போது, அவர்கள் இந்தி மொழியை ஆர்வத்துடன் கற்று வருவது தெரிந்தது.

"அனைத்து மொழிகளும் பாரத நாட்டின் மொழிகள் தான். காலனி ஆதிக்க காலத்தில் இந்திய மொழிகளைச் சிறுமைப்படுத்தும் வேலைகளை ஆங்கிலேயர்கள் செய்தனர். ஆங்கிலத்தை மட்டும் மொழியாக பார்த்தனர்.

"நமது மொழிகளை 'வெர்னாகுலர்' (vernacular) என அழைத்தனர். நமது மொழிகளை அடிமைகளின் மொழி என அழைத்தனர். அந்த வார்த்தையை தற்போதும் பயன்படுத்துகிறோம்," என்றார்.

அடுத்து, சமஸ்கிருதம் குறித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்த சமஸ்கிருத துறைகள் மூடப்பட்டுவிட்டன. சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த சமஸ்கிருத துறையையே அழித்துவிட்டனர்," என சாடினார்.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா எப்போதும் ஒன்றாக இருந்துள்ளது. பிரித்தாளும் கொள்கை இங்கு வெற்றி பெற்றதில்லை. நாட்டின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு தமிழ் குறித்துப் பேசுகிறவர்கள், இந்தியாவை விட்டு தமிழைக் கொண்டு செல்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்தனர்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ் இருக்கை, திருவள்ளூவர் இருக்கை ஆகியவற்றைப் பிற பல்கலைக்கழகங்களில் அமைப்பதற்கு மோதி அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, தி.மு.க

பட மூலாதாரம்,RAJIVGANDHI

படக்குறிப்பு, தி.மு.க மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி

துணை முதல்வர் கருத்து

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், "டிடி தமிழ் தரப்பு மன்னிப்பு கேட்டுவிட்டனர் என்று செய்திகளில் கேட்டேன். இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி "ஒரு சில சமுதாயத்தினரை புண்படுத்தக் கூடாது என்பதற்காகச் சில வரிகளை நீக்கினார்" என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், "இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்ற வார்த்தையைத் தெரிந்தோ தெரியாமலோ நீக்கியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்றும் உதயநிதி தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தி.மு.க

பட மூலாதாரம்,UDAYSTALIN@X

படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

சீண்டுகிறாரா ஆளுநர்?

ஆளுநரின் பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, "இந்தியை எதிர்த்து தமிழ்நாடு நீண்டகாலமாகப் போராடி வருகிறது. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு இந்தி பொருந்தாது என விதிவிலக்கு பெறப்பட்டது.

"கடந்த பத்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியது. தமிழ் உள்பட சில மொழிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்," என்றார்.

"தமிழ்நாட்டில் இந்தி மாதம் கொண்டாடப்படும் என அறிவித்து நிகழ்ச்சிகளை நடத்துவது தமிழர்களைச் சீண்டிப் பார்க்கும் வேலை. இதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னின்று நடத்தி வருகிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்," என்கிறார் ராஜிவ்காந்தி.

 

சமஸ்கிருத மொழி சர்ச்சை

சமஸ்கிருதம் குறித்து ஆளுநர் பேசியதற்கு பதில் அளித்த ராஜிவ்காந்தி, "சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் பிறந்த மொழி அல்ல. இன்றும் தமிழகக் கோயில்களில் சமஸ்கிருதம் இருக்கிறது. அதை 'தேவபாஷை' எனக்கூறி ஒதுக்கி வைத்தது தான் சிதைவடையக் காரணம். அதற்கு நாங்கள் காரணம் அல்ல. கல்விரீதியாக சமஸ்கிருதத்தைச் சிதைக்கும் வேலையை தி.மு.க செய்ததில்லை," என்கிறார்.

"மக்களிடம் சென்று தங்கள் கொள்கைகளைக் கூறி வெற்றி பெற்ற பிறகு இவர்கள் இந்தியை உயர்த்திப் பேசட்டும். அதைவிடுத்து, ஆளுநர் மூலமாக இந்தியை உயர்த்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்க முடியாது," என்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், “சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி மாத நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, பா.ஜ.க

பட மூலாதாரம்,S R SEKHAR

படக்குறிப்பு, தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

'தோல்வியை மறைக்க நாடகம்'

"தி.மு.க., ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கு இந்தி எதிர்ப்பை மீண்டும் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்," எனக் கூறுகிறார் தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை மறைப்பதற்கு இந்தி விழாவில் ஆளுநர் பேசியதை பெரிதுபடுத்துகிறார்கள்," என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாஸ் ஏன்  பைபிளைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? அது வெறும் புத்தகம்தானே?  🤣
    • நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்!  வணக்கம் வாருங்கள்.
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்   உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்..   by Karunya.                                                                              
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்  உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன்  காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...                                                                              
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.