Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால்  ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத்துக்கு வந்தால் செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் மேடைகளில் வாய்சவடால்  அரசாங்கம் செய்ய முடியாது. அது மிகவும் கஷ்டமானதாகும். மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு காலமும் அரசாங்கத்தை விமர்சித்து வந்து. தற்போது மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் செய்வதை மக்களுக்கு தற்போது கண்டுகொள்ளலாம்.

அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பாரிய விடயமா என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால்  அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அது மாத்திரமல்லாது பணம் அச்சிட்டுள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க பணம் அச்சிடாமலே மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இந்தளவு வாகனம் எதற்கு என அவர் கேட்டிருந்தார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயற்படுகிறார்கள்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்து ஒரு தாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை.  அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இயலாமையை மக்கள் தற்போது கண்கிறார்கள். அதனால் அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டி வரும் என்றார்.

https://www.virakesari.lk/article/197682

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும்

ரணிலாரினதும் அவரது ஆதரவாளர்களினதும் பிரார்த்தனையும்  அதுவே. இவ்வளவு காலமும் திருட்டு, ஊழல் என்று உழன்ற நாடு, வேறு திசையில் சென்றால் இவர்களெல்லாம் எப்படி சீவிப்பது?

6 hours ago, ஏராளன் said:

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திரும்பிச்செல்ல முடியாதென்றால் எப்படி வந்தார்களாம்?

6 hours ago, ஏராளன் said:

தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார்.

இவர், தற்போதைய ஜனாதிபதி. ஆறு வாகனம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அதை விட பல மடங்கு வாகனங்கள் எதற்கு? ஒரே நேரத்தில் ஒருவர் இத்தனை வாகனங்களிலா பயணம் செய்வார்? அதுமட்டுமல்ல பயங்கரவாதத்தை வேரோடு அழித்து விட்டோம் என்று மார்தட்டியவர்கள், இப்போ பாதுகாப்பு வேண்டுமென்று கேட்ப்பது எந்த வகையில் நிஞாயம்? சரி..... அனுரா, பாதுகாப்பான ஒரு வீட்டில் உங்களை வாடகைக்கு அமர்த்துவார், உங்களுக்கு வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு, வாகன வசதி செய்து தருவார், உங்களுக்கு மட்டும். ஏற்றுக்கொள்ள தயாரா? ஆனால், அதன் சம்பளம், பராமரிப்பு, வாடகை, நீங்களே செலுத்த வேண்டும். மக்கள் வாக்குகளினாலே வந்து, அவர்கள் பணத்தில் நீங்கள் மட்டும் சலுகை அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொல்ல காசா பணமா? எடுத்து விடுங்கோ விருப்பமானதை ...பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்க தொடங்கினால் சில சமயம் கருத்து சுதந்திரம் இல்லாமல் போகலாம் ....ஊழல் அதிகம் நடை பெறுவதக்கு முக்கிய காரணம் கருத்து சுதந்திரம் எண்டு சொல்லி தடை போட்டாலும் போடலாம்..

6 minutes ago, satan said:

திரும்பிச்செல்ல முடியாதென்றால் எப்படி வந்தார்களாம்?

தமிழ் புலம் பெயர்ஸ் மீது  எதற்கு எடுத்தாலும் சில தாயக அரசியல்வாதிகள் கை காட்டு போல் ...
இப்ப சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள புலம் பெயர்ஸ் மீது கை காட்ட தொடங்கி விட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

இப்ப சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள புலம் பெயர்ஸ் மீது கை காட்ட தொடங்கி விட்டினம்

அதுதான்! கோத்தாவுக்கு வாக்குப்போட லட்ஷக்கணக்கில் முண்டியடித்து வந்தவர்கள், பிறகு நாட்டுப்பக்கம் திரும்பியே பாத்திருக்க மாட்டார்கள். அப்படி இவருக்கும் வந்திருந்தால்; இவர் எண்ணிக்கை அறுபத்தொன்பது லட்ச்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் அனுராவை பாத்து இப்படி பயப்படுகிறார்கள்? ஊழல் ஒழிப்பு, விசாரணை இப்படி பலதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

அதுதான்! கோத்தாவுக்கு வாக்குப்போட லட்ஷக்கணக்கில் முண்டியடித்து வந்தவர்கள், பிறகு நாட்டுப்பக்கம் திரும்பியே பாத்திருக்க மாட்டார்கள். அப்படி இவருக்கும் வந்திருந்தால்; இவர் எண்ணிக்கை அறுபத்தொன்பது லட்ச்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் அனுராவை பாத்து இப்படி பயப்படுகிறார்கள்? ஊழல் ஒழிப்பு, விசாரணை இப்படி பலதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.

அதுதான் காரணம் ...மகிந்தா & கொமபனியை ஊழல் குற்றசாட்டில் உள்ளே போடுவது இலகுவான விடய‌மில்லை ...சட்ட சிக்கல் வராத மாதிரி தான் ஊழல் செய்திருப்பார்கள் ...சட்ட சிக்கல் வந்தால் நம்ம சட்டத்தரணிகள் காப்பாற்ற சென்றுவிடுவார்கல் அதுமட்டுமல்ல சீனா லெசில் மகிந்தாவை கைவிடாது ...

ரணில் கோஸ்டி பெரிதாக ஊழல் செய்திருக்காது அவரின் குடியுரிமையை எடுக்க வாய்ப்புண்டு 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.