Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20241102-WA0223.jpg?resize=750,375&s

முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு  நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுவதோடு குறித்த பகுதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி வாகனம் மூலம் துப்பரவு செய்யும் பணி தற்போது நடைபெற்றன.

இந்நிலையில், தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை விளம்பரப்படுத்தும் முகமாக பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் தேர்தல் விதிமுறையினை மீறி காணப்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்ததனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து நேரடியாக வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பதாகைகளை உடனடியாக அகற்றியிருந்தார்கள்.

https://athavannews.com/2024/1406884

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை... முல்லைத்தீவு தொகுதி தமிழ் கட்சிகளிடம் இருந்து பறி போகப் போகின்றது போலுள்ளது. ஜனாதிபதி தேர்தலிலேயே... பெருமளவான வாக்குகள் அனுரவுக்குத்தான் கிடைத்தது. இப்போ... பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அம் மக்களை குறி வைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளளார்.

தமிழரசு  கட்சி...  போன பஸ்ஸுக்கு,  கை காட்டிக் கொண்டு நிற்கத்தான் லாயக்கு. 😂

 animiertes-hand-bild-0061.gif animiertes-hand-bild-0061.gif animiertes-hand-bild-0061.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவரைத்தொடர்ந்து சில நாட்களில் அனுரா, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வரவுள்ளார். மக்கள் அவருக்கு கொடுக்கவிருக்கும் வரவேற்பைப் பாருங்கள்!

9 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு  கட்சி...  போன பஸ்ஸுக்கு,  கை காட்டிக் கொண்டு நிற்கத்தான் லாயக்கு.

இப்படியொரு நெருக்கடி அவர்களுக்கு வரும் என்று அவர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இறுதியில் இருந்த வீட்டையும் உடைச்சுக்கொண்டு நிக்கிறார்கள். இவர்கள் தங்கள் கட்சியை தக்க வைக்க முடியவில்லை, இதில மக்களை எங்கே தக்க வைப்பது? மக்கள் முடிவு செய்தபின், அதை மாற்ற இவர்களிடம் என்ன துருப்பு இருக்கிறது அவர்கள் வரவழைக்க? ஒருவரை ஒருவர் தூற்றுவதுதான் இவர்களின்  சாதனை. அனுரா, மக்களின் வேண்டுகோளை நிஞாயமாக அணுகினால்,இதுவே  இவர்கள் போட்டியிடும்  கடைசிதேர்தலாக அமையும். ஒருதடவை மஹிந்த சொன்னார், நாங்கள் தமிழ் மக்களிடம் நேரடியாக பேசுவோம், தலைவர்கள்  தேவையில்லை என்றார், அவர் சொன்னது வேறு பிரச்சனை, ஆனால்  அது இன்று நிறைவேறப்போகிறது.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.