Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் வெள்ளிக்கிழமை (15) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 - 34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 17,483 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/198883

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு

image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளில் ஒரே வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி 1650 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ ஹெரோயின் கைற்றப்பட்டது.

அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை (17) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் திங்கட்கிழமை (18) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் போது குறித்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 46 கிலோ 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 1152 மில்லியன் ரூபாவென கடற்படை தெரிவித்துள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 - 33 வயதுக்குட்பட்ட கந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 18,790 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

https://www.virakesari.lk/article/199114

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலியில் 500 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

image
 

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி மாத்தறை, கந்தர நுன்னவெல்ல பகுதிக்கு படகு மூலம் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்படி, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாபலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வேன் ஒன்றில் போதைப்பொருள் கொண்டு வரப்பட்ட விடயத்தை அறிந்துள்ளனர்.

இதன்போது 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாய்க்கு அதிகளவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/199374

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரியளவான போதைப்பொருளுடன் படகொன்று சிக்கியது

பாரியளவான போதைப்பொருளுடன் படகொன்று சிக்கியது

சுமார் 344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார்124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளையும் ஏற்றிச் சென்ற இந்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த படகில் இருந்த 5 சந்தேகநபர்கள், மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக நேற்று (23) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196348

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக நேற்று (23) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒர் புலனாய்வு புண்ணாக்கு ஒன்றையும் பரிமாறவில்லையா?
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.