Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுர நிகழ்த்தவுள்ளதாக தகவல்

November 16, 2024

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார் என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை

பிரகடன உரை நிகழ்த்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு மையங்களைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி,25, 26, 27 ஆகிய திகதிகளில் செயலமர்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.11) வெளியிடப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

https://www.ilakku.org/it-is-reported-that-president-anura-will-deliver-the-policy-declaration-speech/

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையார் சந்திரிக்கா 1994 இல் பதவிக்கு வந்த போது வடக்குக் கிழக்கில் பொங்கல் பொங்கினவை.. சமாதான தேவதையாகக் காட்டிக் கொண்டிச்சினம். புலிகளும் மறைமுகமாக ஆதரவளிச்சவை.

கடையிசில்.. அதே சந்திரிக்கா தான் போர்ப் பிசாசானது. கடைசியில் குண்டு வைச்சு காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியது.

எந்த சிங்களத் தலைமையும் தமிழர்களுக்கு அவசியமானதை கண்டறிந்து தாமாக தரப் போவதில்லை. நாமாகப் போராடிப் பெற்றால் அன்றி.

அதுவும் சிங்களத்தோடு சமரசம் செய்து... தாஜா பண்ணி பெறலாம் என்பது.. வெறும் பகற்கனவே ஆகும்.

அனுர ஆட்சி... தமிழர்களுக்கு  அரசியல் உரிமை ரீதியில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது.. நாம் தருவார்கள் என்று காத்திருப்பின்.

சர்வதேச நேச சக்திகளோடு.. அனுர ஆட்சிக்கு எதிரான சக்திகளோடும் இணைந்து கொடுக்கக் கூடிய அழுத்தங்ளின் தாக்கம் ஒன்றே ஏதாவது நன்மையை தமிழர்களுக்கு தேடித்தரும்.

அதற்காக...

இன அழிப்பு போர்க்குற்ற விசாரணைகயை கைவிடுவதோ... சொறீலங்காவை நீதிக்கு முன் நிறுத்துவதையோ
வடக்குகிழக்கு இணைந்த தமிழர் தாயக நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவதையோ..
இன அழிப்புக்குள்ளான இனம் என்ற ரீதியில் சர்வதேச பாதுகாப்பை வேண்டிய நிலையில் சுதந்திர தமிழீழத்துக்கான ஐநா மத்தியஸ்த சர்வசன வாக்கெடுப்பை வடக்குக் கிழக்கில் நிகழ்த்துவதையோ.. கிழக்கு திமோர்... தென் சூடான்.. கொசாவோ... போன்று,,,, தடுக்கவோ... கைவிடவே முனையக் கூடாது,

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

உடான்ஸ் லீக்ஸ் இணையதளம் அதிரடியாக அனுரவின் கொள்கை பிரகடனத்தை லீக் செய்துள்ளது, இதன் முக்கிய விபரங்கள்:

1. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம்

2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்

3. தமது பிரதேசங்களில் மத ஸ்தலங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் தொல்பொருட்கள் உட்பட எந்த அரச திணைக்களமும் மாகாண சபையை மீறி செயல்பட முடியாது.

4. கடந்த 5 வருடத்தில் கட்டப்பட்ட அனுமதியில்லா மததலங்கள் இடிக்கப்படும்.

5. போர் இல்லை, இப்போ மூவின மக்களும் ஒண்டுக்கு இருக்கிறார்கள், எனவே முப்பட்டைகள் 1/3 ஆல் குறைக்கப்படும். இந்த பணம் வைத்திய, கல்வி துறைக்கு நேரடியாக ஒதுக்கப்படும். முப்படை முகாம்கள் 1983 க்கு முந்திய நிலைக்கு போகும்.

6.  1948 இல் இருந்து இலங்கை அரசுகள் கடைபிடித்த இன ஒதுக்கலுக்கு அரசு சார்பாக சிறுபான்மையினரிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

7. இலங்கைக்கு உழைத்த, இங்கே பிறந்து இந்தியாவுக்கு அனுப்பபட்டவகளிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

8. மாகாண சபைகளுக்கு வரி விதிக்கும், வெலிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படும்.

(யாவும் கற்பனை)

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.