Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் 

ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Npp Mps Ministers Will Not Get Salary  

கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் விழுந்து விடாது என சுசந்த குமார மேலும் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/npp-mps-ministers-will-not-get-salary-1731898420#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்புக்கு என்னதான் வழி இருக்கு..

1) அமைச்சு  கந்தோர் வாசலில் உண்டியல் வைப்பது...அல்லது கனடா தமிழ் கடைவழிய  உண்டியல் வைப்பது

2) ஐ.எம். எஃப்...இடம் இதற்கென்று தனியாக கடன் வாங்குவது..

இதில் எது சிறந்தது..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

பிழைப்புக்கு என்னதான் வழி இருக்கு..

1) அமைச்சு  கந்தோர் வாசலில் உண்டியல் வைப்பது...அல்லது கனடா தமிழ் கடைவழிய  உண்டியல் வைப்பது

2) ஐ.எம். எஃப்...இடம் இதற்கென்று தனியாக கடன் வாங்குவது..

இதில் எது சிறந்தது..

உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை...

யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்...

புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை...

யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்...

புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...

சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின  நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று

பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின  நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று

பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..

தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே...............

வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும்.

சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின  நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று

பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..

இனி நாங்கள் போனால் நடராசாவில தான்....ஒட்டோ ,கார் எல்லாம் வாடகைக்கு பிடிக்க முடியுமோ தெரியவில்லை...அமைச்சர்மார் வீட்டில இருந்து வேலை செய்யும் பொழுது ....நாங்கள் கண்டபடி காரில் ஒட்டோவில் திரிய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே...............

வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும்.

சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................

மூன்று நாலுநாள்  அந்த ஏரியா சுத்தினனான்...தட்டுப்படவில்லை..பார்ப்பமே வரும்காலத்தில்

3 minutes ago, putthan said:

இனி நாங்கள் போனால் நடராசாவில தான்....ஒட்டோ ,கார் எல்லாம் வாடகைக்கு பிடிக்க முடியுமோ தெரியவில்லை...அமைச்சர்மார் வீட்டில இருந்து வேலை செய்யும் பொழுது ....நாங்கள் கண்டபடி காரில் ஒட்டோவில் திரிய முடியாது

இந்த ரெயினிங்கு ...நான் இந்த தடவை போனவுடனே எடுத்திட்டன்...பஸ் சும் ..நடையும்தான்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.