Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது.

அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார்.

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் ஆரம்பிக்கப்படும்.

பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அரசியல்வாதியுமான நிஹால் கலப்பதியை நியமிப்பதற்கு ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் ஆகிய பதவிகளை தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்படவுள்ளனர்.

பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு பிரதானமானதொரு விடயமாகும். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார்.

சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டவுடன் சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர்.

சபாநாயகர் தெரிவு இடம்பெற்றதன் பின்னர் சபை நடவடிக்கைகளின் பொறுப்புகள் சபாநாயகருக்கு பொறுப்பாக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆசனங்களில் இருந்து எழுந்தவாறு கூட்டாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இன்று முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், மரியாதை அணி வகுப்பு, மரியாதை வேட்டு ஏதுவுமில்லாமல் ஆரவாரமற்ற முறையில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளார்.

பாராளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தி அவரை சபா மண்டபத்துக்கு அழைத்துச் செல்வர்.

ஜனாதிபதி முற்பகல் 11.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார். அதனைத் தொடர்ந்து அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைப்பார்.

https://www.virakesari.lk/article/199285

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பம் - நேரலை...

image

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் ஆரம்பமாகிய பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார்.

https://www.virakesari.lk/article/199288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

image
 

ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர்  அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

https://thinakkural.lk/catagory/world_news

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாராளுமன்ற அமர்வில் சத்தப்பிரமாணம் எடுத்தார் அர்ச்சனா இராமநாதன். large.IMG_8029.jpeg.94c46262d2e5bfce208284e2481f8834.jpeg

தமிழ் தேச வீரர்கள் பலர் இவ்வாறு சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு தான் வெளியில் துள்ளித்திரிந்து வேஷம் போடுகிறார்கள்  😂 அரச்சனாவுக்கு  நன்றி  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்திற்குள் இப்படியும் நடந்தது

467748935_1270307343984188_3375304411945615353_n.jpg

 

பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்.

 

 

 

அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள்  என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார் அர்ஜுனா..

 

 

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால் ஜனாதிபதி , பிரதமர் ,  எதிர்க்கட்சித் தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என்கிறார் அர்ஜுனா...

 

அநேகமாக இனி சபைக்குள் சரவெடிதான்...

 

(நன்றி - Siva Ramasamy) 

https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_129.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.