Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா

உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

https://x.com/SriLankaTweet/status/1859483335610991059

 

நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை அறிவிக்குமாறு கோரிய அவர், அந்த ஆசனத்திலிருந்து நகர மறுத்ததுடன் நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தார். 

https://ibctamil.com/article/dr-archchuna-sits-in-opposition-leader-s-chair-1732175189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசனத்தால் கோபமடைந்த அர்ச்சுனா - பாராளுமன்றில் நடந்தது என்ன?

ஆசனத்தால் கோபமடைந்த அர்ச்சுனா- பாராளுமன்றில் நடந்தது என்ன?

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (21) இடம்பெற்றது.

இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கிருந்த பாதுகாவலர்கள் வேறு ஆசனத்தில் அமரச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்கள் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"இங்கு வேறு ஆசனத்தில் அமர வேண்டுமென எங்காவது எழுதி உள்ளதா, எதிர்க்கட்சித் தலைவருக்கு வேண்டுமெனில் அவரைச் சென்று எங்காவது அமரச் சொல்லுங்கள். நான் இங்குதான் இருப்பேன்" என்றார்.

பின்னர், தான் எந்தக் கட்சியிக்கு ஆதரவு வழங்கினாலும், சஜித் பிரேமதாசவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன் எனவும் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

இவரது இந்த செயல்பாடானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

https://www.facebook.com/eagle.feder.3/posts/pfbid0guQcx1Svt2Rj32zKiArZPf6aSQcYRdJPm377G6Px8zEVbcA4xQtJ8u3e1zEZ5eZFl?rdid=ivdtXOUp93lyIpSW

https://tamil.adaderana.lk/news.php?nid=196216

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எதில் தவறு எங்கே உள்ளது.

யாருக்காவது தனிஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தால் அதிலே எழுதி ஒட்டியிருக்கலாமே?

இல்லாதவிடத்து புதிதாக போகிறவருக்கு எப்படி தெரியும்?

அர்ச்சுனா பிரச்சனை கிளறியபடியால் இனிமேல் அப்படி செய்வார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

எதில் தவறு எங்கே உள்ளது.

யாருக்காவது தனிஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தால் அதிலே எழுதி ஒட்டியிருக்கலாமே?

இல்லாதவிடத்து புதிதாக போகிறவருக்கு எப்படி தெரியும்?

அர்ச்சுனா பிரச்சனை கிளறியபடியால் இனிமேல் அப்படி செய்வார்கள் என எண்ணுகிறேன்.

ஒம்.  இது முதல் நாள் அமர்வு    எவரும் விரும்பும் இடத்தில் இருக்கலாம்  எனவேதான் அதை அர்ச்சுனா   பயன்படுத்தினார்.  

 

3 hours ago, ஏராளன் said:

இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது

 

மட்டுமல்ல தனது   செயலாளர் சட்டத்தரணி  காதலியுடன். பாராளுமன்றம் போய்யுள்ளார்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

ஒம்.  இது முதல் நாள் அமர்வு    எவரும் விரும்பும் இடத்தில் இருக்கலாம்  எனவேதான் அதை அர்ச்சுனா   பயன்படுத்தினார்.  

 

 

அப்புறமா ஏன் எல்லோரும் அவரை வாங்குவாங்கென்று வாங்குகிறார்கள்?

ஏதோ மானத்தை கெடுக்கப் போகிறார் அது இது எது என்று நடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 5 வருடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்களையும் மகிழ்வூட்ட ஒரு clown 🤡 ஆக இருக்கப் போகிறார் அர்சசனா.   

ஒரு சர்க்கஸிற்கே  மகிழ்வூட்ட ஒரு clown தேவைப்படும் போது 
தொடர்சசியாக சீரியஸாக பேசி டென்சன் ஆகும் உறுப்பினர்களுக்கும்  தேவை தான். 

 NPP க்கு ஆதரவு நல்கிய யாழ்ப்பாண மக்கள்   அவர்களை மகிழ்விக்க ஒரு clown ஐயும் அனுப்பியுள்ளனர். 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறமா ஏன் எல்லோரும் அவரை வாங்குவாங்கென்று வாங்குகிறார்கள்?

ஏதோ மானத்தை கெடுக்கப் போகிறார் அது இது எது என்று நடக்குது?

அவர்கள் செய்தியை பூரணமாக வாசிக்கவில்லை     பாராளுமன்றத்தில் முதலாவது நாள்  விரும்பி இடத்தில் அமரலாம். என் அறிவித்தல் இருந்தது    ஆனால் பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலிருக்கூடாது   என்று  எழுதவில்லை  இது எதிர்கட்சிதலைவர். ஆசனமென்றும். எழுதவில்லை   

அதை   அர்ச்சுனா   கேட்கிறார்  பணியாளர்களிடம்.  எங்கே எழுதப்பட்டுளளது என்று    ஆகவே அவர் விரும்பிய இடத்தில் முதல் நாள் இருந்தது சரியாகும்    

அடுத்த முறை  தனக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் இருப்பார் 🤣

மகிந்த ராஜபக்ஷ 2015 ஆண்டில் எதிர்கட்சியில். பலமுடனிருக்க.  

பலமில்லாத. சம்பந்தன்  அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்து கொண்டு   எதிர்கட்சி தலைவராகவும். இருந்தார்   

உண்மையில் மகிந்த ராஜபக்ஷ தான்  எதிர்கட்சி தலைவராக இருந்து இருக்க வேண்டும்    சம்பந்தன்.  சுமத்திரன்  குறுப். அரசாங்கத்துக்குள் இருந்து இருக்க வேண்டும்    அமைச்சர்கள் ஆகி அபிவிருத்தி செய்திருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அர்ச்சுனா

 

மன்னார் மக்களே ஒருநாள் பொறுங்கோ என்று சொல்லியிருக்கிறார்.

நாளைக்கு மன்னாரில் சம்பவம் இருக்கு.

இனிமேல் வைத்தியசாலைக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.