Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் சுயநிர்ணயம், அடையாளம், இனம் சார்ந்த எந்தத் தெளிவும் இன்றி அவர் அவர் உயரங்களுக்கு தகுந்த மாதிரி எழுதியும் பேசியும் வருகிறார்கள். 

நாம் வாழும் நாடு நோர்வேயிலே அவர்கள் தமது முழுமை பெற்ற சுதந்திர தினத்தை கொண்டாடும் போது சிறுவர் முதல் பெரியோர் வரை தமது தேசியக் கொடியை தோழில் காவியபடி நாங்கள் எல்லோரும் நமது தேசத்தியும் மண்ணையும் மொழியையும் நேசிக்கிறோம் என்று ஒரே மக்களாக ஒரே திரட்ச்சியாக வானுயர பாடியபடி போவார்கள். இப்படி ஒன்று பட்ட திரட்சியினால் தான் பிரான்சுப் புரட்சியில் இருந்து ரஷியாவின் சிவப்பு சுதந்திர சதுர்க்கம் வரை விடுதலை பெற்ற வரலாற்றை உலகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. ஒரு இனம் ஒடுக்கு முறைக்கு எதிராக தனது இருப்பு தனது சுதந்திரம் வேண்டிப் போராடுவது எல்லாம் இனவாதம் இல்லை. இனவாதம் என்பது தத்துவார்த்த ரீதியிலான பல கருத்துக்களை கொண்டது அதில் ஒன்று  சிறு பான்மை இனத்தின் உரிமை மறுக்கப்படுவதும் சொந்த இனத்தை உயர்வாகக் பார்த்து பிற இனத்தை ஏற்றுக்கொள்ளாமல் தாழ்வாகக் கருதுவது போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தில் வாழும் தேசிய இனங்களை மரத்தை சுற்றிப் படரும் கொடி என்று பெரும்பான்மை சமூகம் கூறுவதும் தான் இனவாதம். தன்னாட்சி கோருவது பிரிவினைவாதம் அல்ல. சட்டப்படி உரிமைகளை கோருவது இனவாதம் அல்ல. உரிமைகளை மறுப்பதே இனவாதமாகும்.

ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய சிறு பான்மை இனம் சுய நிர்ணயம், தன்னாட்சி, உரிமைகள் மற்றும் சமத்துவம் சட்டப்படி தமது உரிமைகளை கோருவது பிரிவினைவாதம் இனவாதம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. கொல்லப்பட்ட எம் மக்களுக்கும் தொலைந்து போனவர்களுக்கும் நீதி கேட்பது இனவாதமா அதற்கு மாறாக, அந்த உரிமைகளை மறுப்பது முறையாக மதிப்பீடு செய்யப்படாத செயலாகும் மற்றும் சமத்துவத்தை மறுக்கும் ஒரு நிலையை பிரதிபலிக்கிறது. தமது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் உரிமைக் குரலை மறுத்து பிரிவினை வாதம் இனவாதம் என்று கதைப்பது வாதிடுவது தான் இனவாதம். இதை சரியாக விளங்கிக் கொண்டே ஆளும் கட்சியாக இருந்தாலும் எவரும் எந்தக் கருத்தையும் கூற வேண்டும். ஆழமாக எதையும் விளங்கி சரியானவைகளை எழுத வேண்டும் பேச வேண்டும். பிளவு படாத ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழ்வோம் என்பதை விட அந்த மக்களின் உரிமைகளை அங்கீகரித்து விட்டு அனைவரும் சமத்துவமாக வாழ்வோம் என்று அழைப்பது தான் உண்மையான சமத்துவம். தமிழர் தேசங்களில் உரிமைகள் மதிப்பு, நீதி, நிர்வாகம், சட்டம், பாதுகாப்பு முறை என்பன அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மரியாதையுடன் சமத்துவமாகவும் நடைமுறைப் படுத்த வேண்டும். 

இன்று இலங்கையில் பல மாற்றம் நடந்திருக்கிறது குறிப்பாக தெற்கு அரசியல் வாதிகளே முழுக்கு முழுக்கு இனவாதம் பேசியவர்கள் அந்த முகங்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறார்கள் இது வரவேற்கத் தக்க மாற்றமாகும். சமத்துவமான சமுதாயமாகவும் நாம் எல்லாம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடக இலங்கை இருக்க வேண்டும் என்ற கனவு கண்டால் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினையாகும். இதன் மூலம் நாம் எல்லோரும் ஒன்றாக சமத்துவமான ஊழல் அற்ற ஒரு கனவுத் தேசத்தை கட்டி எழுப்ப முடியும் என்ற யதார்த்தத்தை ஆளும் தரப்பினர் சரியாகப் புரிய வேண்டும். நாமும் இனி வரும் காலத்தில் ஒற்றுமையோடு பயணித்தால் தான் எமக்கான விடுதலையும் அடைய முடியும் என்பதையும் தமிழர் தரப்பும் உணர வேண்டும்.

பா.உதயன் ✍️
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.