Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்தின் பதில்தான் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-17

தொடரும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்தின் பதில்தான் என்ன?

இலங்கையில் அரசுப் படைகளின் பின்புலத்தில் அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான ஈடுபாடு கிடையாது என்பது தொடர் பான அரசின் "பொட்டுக்கேடு' மீண்டும் ஒரு தடவை அம்பலமாகி யிருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட தரப்புகளே இது விடயத் தில் அரசின் உள்ளார்த்தங்களை அம்பலமாக்கும் விவகாரம் மீண் டும் அரங்கேறியிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் இலங்கையில் மனித உரிமை மீறல் கள் மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்றன. இது தொடர்பாகத் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பரவலான குற்றச்சாட்டு களும், கண்டனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இவற்றைச் சமாளிப்பதற்காக இலங்கை அரசு அவ்வப்போது கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுவதில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுக்களை அமைத்தல், இவ்விவகாரங்களில் ஈடுபாட்டைக் காட்டும் சர்வதேசப் பிரதிநிதிகளை இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட அழைத்தல் என்று பல்வேறு நாடகங்கள் அவ்வப்போது அரங்கேற்றப்படும். ஆனாலும் களத்தில் நிலைமை மோசமாக இருப்பதால் மனித உரி மைகளைப் பேணுவதில் அரசு திடசங்கற்பம் பூணாமல், அத்த கைய மனித உரிமை மீறல் போக்குக்கு அரசுத் தலைமையே பின்ன ணியில் செயற்படுவதால் இத்தகைய நாடகங்கள் அரசுக்கே அதன் தலையில் மண் அள்ளிக் கொட்டும் அங்கங்களாக நடந்து முடிந்து விடுகின்றன.

மனித உரிமைகள் விவகாரங்களில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு அரசு நியமித்த குழுவின் நான்கு முக்கிய உறுப்பி னர்களான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமது அந்தப் பொறுப்பிலிருந்து தாங்களாகவே விலகியிருக்கின்றனர் என்று அறிவித்திருக்கின்றமை அரசுக்கு வீழ்ந்த நல்ல "அடி' யே ஆகும்.

தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இடம்பெற்றவை எனக் கூறப்படும் பதினாறு முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங் கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடத்தில் நியமித்தார். அத் தகைய ஆணைக்குழுவால் பயன் ஏதும் விளையப் போவதில்லை உண்மைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வரு வதற்கு இக்குழு ஆக்கபூர்வமாக ஏதும் சாதிக்காது என்று விச னம் தெரிவிக்கப்பட்ட பின்னணியில் இக்குழுவின் விசாரணை களைக் கண்காணிப்பதற்காக சர்வதேசப் பிரமுகர்கள் அடங்கிய அவதானிகள் குழு ஒன்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார்.

எதிர்பார்க்கப்பட்டபடி, மேற்படி ஆணைக்குழு பயனுள்ள நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவேயில்லை என்பதை சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் குழுவின் தலைவரான இந்தியா வின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.என்.பகவதி அடுத்தடுத்து மூன்று அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தினார். இவ்வாரத்திலும் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி யில், இவ்விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேயில்லை என்பதை அவர் மீளவும் அம்பலப்படுத்தியிருக் கின்றார்.

கடந்த வாரம் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து நிலைமை களைப் பார்வையிட்ட மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரும் இதையே தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் பேணும் விவகாரத்தில் அரசின் மனித உரி மைகள் அமைச்சுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக் கப்பட்ட பத்துப் பேர் கொண்ட ஆலோசகர் குழுவிலிருந்து நான்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இப்போது விலகும் சமயத் திலும் அதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருக்கின்றார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.