Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்றுக்கள் பரவும் அபாயம் ; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் சிறிதரன் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 Nov, 2024 | 05:44 PM
image
 

 

 (நா.தனுஜா) 

வடக்கில் அநேக இடங்களில் வெள்ளநீர் வடிந்தோட இடமின்றித் தேங்கி நிற்பதால், அங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாகவும், எனவே இதற்குத் தீர்வுகாண்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையாலும், வெள்ளத்தினாலும் வட, கிழக்கு மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கின் வெள்ளப்பேரிடர் பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று  வெள்ளிக்கிழமை (29) காலை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது இம்முறை ஏற்பட்டிருக்கும் வெள்ளம் இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் இன்னமும் வடியாமல் தேங்கி நிற்பதாகவும், குறிப்பாக கொடிகாமம், தவசிகுளம் ஆகிய பகுதிகள் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டிய சிறிதரன், இதன் விளைவாக மக்களுக்கு நோய்த்தொற்றுக்கள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாக விசனம் வெளியிட்டார்.

அதேபோன்று வடக்கில் வெள்ளநீர் புகுந்த வீடுகள் கிணறுகளை சுத்தப்படுத்தி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்டு தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதுமாத்திரமன்றி திடீர் அனர்த்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது தொழில் மற்றும் அதன் மூலமான வருமானத்தை இழந்திருப்பதால், அவர்களுக்கு குறிப்பிட்டளவு உதவித்தொகையொன்று வழங்கப்படவேண்டியது அவசியம் எனவும் சிறிதரன் வடக்கு ஆளுநர் வேதநாயகனிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான இயற்கைப்பேரிடர்களை எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.  

வடக்கில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்றுக்கள் பரவும் அபாயம் ; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் சிறிதரன் வலியுறுத்தல் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.