Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தர்களை பிரிக்க பெரும் சதி முயற்சி; புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிதி உதவி

Omalbe-Sobitha-thero.jpg

பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்தொகை நிதியளித்து வருகின்றனவென கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சில கட்டுக்கதைகளால் மத நம்பிக்கைகளை மட்டுப்படுத்த முடியாது . இவ்வாறான மட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு சில சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .இந்த வேலைத்திட்டத்தின் முதற்படியாக பௌத்தர்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே, சிங்கள இனத்தவர்களுக்கு இடையிலான பலம்வாய்ந்த பிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .எனினும், கட்டுக்கதைகளை நம்பும் போது, மகாவம்சம், தீபவம்சம், சூலவம்சம் என்பன செல்லுபடியற்ற நூல்களாகி விடுகின்றன அதன்பின்னர், வரலாறு பொய்யாகிப் போவதுடன், இந்த மண்ணின் மூத்த குடிகளான சிங்களவர்களுக்கு உள்ள உரிமையும் இல்லாது போகும்

பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்தொகை நிதியளித்து வருகின்றன.இந்தப் பிரிவினை செயற்பாடுகளுக்காகப் புத்தகங்கள் அச்சிடுதல் உள்ளிட்ட பல திட்டங்கள், பாரிய நிதிச் செலவில் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்கிரியாகம பகுதியில் பல ஏக்கர் கணக்கில் ஹெலகம என்ற குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்துள்ளன இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=301576

  • கருத்துக்கள உறவுகள்

Good job-GIFs | Tenor

பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும், 
புலம் பெயர் அமைப்புகளிற்கு வாழ்த்துக்கள். 😂 🤣

புலம் பெயர் அமைப்புகள்... சும்மா இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக  இருந்தது. அவர்கள் பெரிய "மாஸ்ரர் பிளான்" உடன்  ஒரு  வேலையில் இறங்கியிருப்பது, இப்பதான் ஓமல்பே சோபித்த தேரர் மூலம் தெரிய வந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.  👍 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தப் பிரிவினை செயற்பாடுகளுக்காகப் புத்தகங்கள் அச்சிடுதல் உள்ளிட்ட பல திட்டங்கள், பாரிய நிதிச் செலவில் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்கிரியாகம பகுதியில் பல ஏக்கர் கணக்கில் ஹெலகம என்ற குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்துள்ளன இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன என்றார்.

வடமாணத்தில் 3ஆசனங்களைப் பெற்றதன் வாயிலாகச் சிங்களம் பெரும் திருப்தியோடு நகர்கின்ற அதேவேளை, சிங்களத்தின் கடைசி இலக்காக உள்ள புலம்பெயர்ஸ்(சிலர் இங்கு குறிப்பிடுவதுபோல்)ஸை நோக்கிச் சுட்டுவிரலைப் பிக்கு தெளிவாகக் காட்டுகிறார். தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தமிழரது தொண்டுகளைத் திரிபுபடுத்தி, அதற்கு இப்படியொரு முத்திரையைக் குத்துவதன் ஊடாகத் தமிழரை தொடர்ந்து சிங்களத்திடம் கையேந்துவோராக வைத்திருக்க முனைகிறார்கள். கையேந்துவோராக இருந்தால்தான் பிக்குகள் என்ற பெயரில் மாறுவேடத்தில் உலவும் நவீன நிலப்பறிப்பாளர்களான சிங்களவர்கள் எல்லைகளில் உள்ள கிராமங்களில் நுளைந்து மதமாற்றம் மற்றும் நிலப்பறிப்பு என்பவற்றைச் செய்யமுடியும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.