Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் அழைத்து செல்லப்பட்டனர் - ஆறு மாதங்கள் தங்கியிருக்க அனுமதி- பிபிசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த  இலங்கையை சேர்ந்ததமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தான் பார்வையிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

 

diego-garcia_main.jpg

பிரிட்டனிற்கான அவர்களின் பயணத்துடன் அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதற்காக கடல்கடந்து இடம்பெற்ற சட்டபோராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளன என தெரிவித்துள்ள பிபிசி எனினும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்று வருடகாலமாக இங்கிலாந்து அமெரிக்காவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் சிக்குண்டிருந்தனர், தற்காலிக முகாமில் வசித்துவந்தனர்.

டியாகோ கார்சியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையை சமர்ப்பித்த முதல் புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கத்தின் பேச்சாளர் இந்த விவகாரத்தில் விதிவிலக்கான தன்மை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஒரு ஆழமான சிக்கலான முன்னைய அரசதாங்கத்தின் கீழ் தீர்வுகாணப்படாமலிருந்த சூழ்நிலையை சுவீகரித்துக்கொண்டுள்ளது என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

டியாகோர் கார்சியா தீவில் காணப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இது ஒரு அர்த்தபூர்வமான தீர்வு என புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை பிரதிநிதித்துவம் செய்த லெய்டே என்ற பிரிட்டனின் சட்டநிறுவனத்தின் டெசா கிரெகரி தெரிவித்துள்ளார்.

16 சிறுவர்களை உள்ளடக்கிய இந்த பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குழுவினர் 38 மாதங்களாக மிக மோசமான நிலையில் சிக்குண்டிருந்தனர்,என தெரிவித்துள்ள அவர் எங்கள் கட்சிக்காரர்கள் தற்போது பாதுகாப்பான புகலிடக்கோரிக்கையை முன்வைக்க முடியும்,தங்கள் வாழ்க்கைய மீள கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் அழைத்து செல்லப்பட்டனர் - ஆறு மாதங்கள் தங்கியிருக்க அனுமதி- பிபிசி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் சென்றடைந்தமை குறித்து டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழர்கள் நிம்மதி பெரூ மூச்சு - கடலில் அனைவரும் இறந்துவிடுவோம் என நினைத்ததாக தெரிவிப்பு

06 DEC, 2024 | 10:34 AM
image

மூன்று வருடகாலமாக டியாகோகார்சியாவில் தீவில் சிக்குண்டிருந்தஇலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றடைய முடிந்துள்ளமை  குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது,

இந்துசமுத்திரத்தின் தொலைதூரதீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில்  சிக்குண்டிருந்தவர்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் தங்கள் பயணம் முடிவிற்கு வந்துள்ளமை குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர்.

47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம்  என வரவேற்றுள்ளனர். இதேவேளை ருவாண்டாவிலிருந்து மேலும் எட்டு பேர் பிரிட்டன் வந்து சேர்ந்துள்ளனர்.இவர்களும் இலங்கை தமிழர்கள் இவர்களை அதிகாரிகள் மருத்துவசிகிச்சைக்காக ருவாண்டா  அனுப்பியிருந்தனர்.

லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்ளனர்.

இவர்கள் தற்போது லண்டனின் புறநகர் பகுதியில்  உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் ஒடித்திரிவதை அவதானிக்க முடிகின்றது.

கடும் குளிர் முற்றிலும் பழக்கமில்லாத சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டமை குறித்து அவர்கள் நிம்மதியடைந்துள்ளதை உணரமுடிகின்றது.

நாங்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பதை நம்பமுடியாமல் உள்ளது, சொக்கத்தை அடைந்துள்ளது போல உணர்கின்றோம் என ஒருவர் தெரிவித்தார்.

கனடாவில் புகலிடம் பெறும்நோக்கில் இவர்கள் பயணித்த படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்ததால் இவர்கள் டியாகோகார்சியாவில் சிக்குண்டனர்.

எங்கள் நாட்டில் வாழ்க்கை நன்றாகயிருந்திருந்தால் நாங்கள் ஒழுகும் படகில் சமுத்திரங்கள் ஊடாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கமாட்டோம்  என மற்றுமொரு இலங்கை தமிழர் தெரிவித்தார்.

நாங்கள் அனைவரும் கடலில் உயிரிழந்துவிடுவோம் என நான் நினைத்தேன், ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு முயல்வதா அல்லது அனைவரும் கடலில் மடிவதா சிறந்தது என  என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன்.

இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் டியாகோகார்சியா தீவை சென்றடைந்ததை பிரிட்டனின் உள்துறை அமைச்சர்கள் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக கருதினார்கள்.

இவர்களின் தலைவிதி குறித்து நீண்ட சட்டப்போராட்டங்கள் இடம்பெற்றன.தமிழர்கள் அந்த தீவில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தரணிகள் அந்த தீவிற்கு சென்றுவந்தனர்.

அந்த தீவில் மூன்றுநாட்கள் தான் தங்கியிருப்போம் என நினைத்தோம் ஆனால் மூன்றுவருடங்கள் தங்கியிருக்க நேர்ந்தது என பெண்ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/200552

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.